For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விநாயகருக்கு இரண்டு மகன்கள் இருப்பது தெரியுமா?

பிள்ளையாருக்கு இரண்டு மனைவிகள் இருப்பதாக வட இந்தியாவில் நம்பப்படுகிறது. ஆனால் கணேச புராணத்தின் படி பிள்ளையாருக்கு இரண்டு மகன்களும் இருப்பது அவர்களையே ஆச்சரியப்படுத்தியுள்ளது.

|

இந்தியாவில் குறிப்பாக தமிழ் சமூகத்தில் விநாயகரை வணங்காமல் எந்த ஒரு செயலும் தொடங்கப்படுவதில்லை. காரணம் "வினை தீர்ப்பான் விநாயகன்" என்பதுதான். ஒரு செயல் தொடங்கும்போது விநாயகரை வணங்கினால் அந்த செயல் நல்லபடியாக முடியும்வரை விநாயகரின் அருள் நம்முடனேயே இருக்கும் என்பது நம்முள் ஊறிப்போன ஒரு நம்பிக்கை. நாம் குறைந்தது பத்து இடங்களிலாவது பிள்ளையாரை பார்த்துவிடுவோம், ஏனெனில் நம் சமூகத்தில் பெயர் இல்லாத தெருக்கள் கூட இருக்கலாம் ஆனால் பிள்ளையார் இல்லாத தெருக்கள் மிகவும் குறைவு. இவ்வளவு ஏன் இவர் முன்னே ஆடாத தமிழ் நடிகர்களே இல்லை எனலாம் .

Spiritual

தென்னிந்தியாவில் நாம் பிள்ளையார் என்று கொண்டாடுவது பொல் வட இந்திய சகோதர்கள் கணேசன் என கோலாகலமாக கொண்டாடிவருகிறன்றனர் நம் விநாயகனை. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் இந்திய பாரம்பரியத்தின் ஒரு அடையாளச் சின்னம் நமது பிள்ளையார். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த கடவுளாக இருப்பவரும் இவர்தான். தென்னிந்தியாவில் இவர் பிரம்மச்சாரி கடவுளாக கருதப்பட்டாலும் வட இந்தியாவின் பெரும்பாலான இடங்களில் இவருக்கு இரண்டு மனைவிகள் இருப்பதாக கருதப்படுகிறது. அது மட்டுமின்றி இவருக்கு இரண்டு மகன்களும் இருப்பதாக புராணங்கள் கூறுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: spiritual god
English summary

Lord Ganesha has two wives and two sons

The Lord Ganesha's marital status is still a mystery in Hindu religion. One more mystery is he has two sons, namely Shetra and Labha.
Story first published: Thursday, July 19, 2018, 13:05 [IST]
Desktop Bottom Promotion