Just In
- 2 min ago எப்பவும் வெறும் தோசை சுடுறதுக்கு பதிலா, ஒருமுறை நெல்லூர் கார தோசையை ட்ரை பண்ணுங்க...
- 8 hrs ago 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- 9 hrs ago இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- 11 hrs ago சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
Don't Miss
- News விவிபாட் ஒப்புகை சீட்டு 100% எண்ணப்படுமா? உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு.. பெரும் எதிர்பார்ப்பு
- Finance ஒரு பங்குக்கு ரூ.240 டிவிடெண்ட் வழங்கும் ஐடி நிறுவனம்.. நீங்களும் அதுல பங்கு வச்சிருக்கீங்களா?
- Automobiles ஆடி கார்களின் விலையை உயர்த்த முடிவு! எவ்வளவு காஸ்ட்லியாக போவுது தெரியுமா?
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
மார்ச்சுவரியில் செத்து, செத்து விளையாண்ட பெண்ணால் பதறி போன உறவினர்கள்!
மார்ச்சுவரியில் செத்து, செத்து விளையாண்ட பெண்ணால் பதறி போன உறவினர்கள்!
மார்ச்சுவரியில் வேலை செய்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. வேலைக்கு செல்லும் ஒவ்வொரு நாளும் மனதை ரணமாக்கிகொண்டு தான் செல்ல வேண்டும்.
மார்ச்சுவரியில் வேலை செய்யும் பெரும்பாலானோருக்கு அச்சம் எக்கச்சக்கமாக இருக்கும். திடீரென ஒரு பிணம் விறைத்து எழுந்துக் கொள்ளலாம். அறிவியல் ரீதியாக இது சாத்தியம். அந்த சூழலை கண்டிப்பாக நீங்கள் சாதரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.
உங்கள் கண் முன்னே ஒரு பிணம் உயிருடன் எழுந்து நின்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்? இப்படி ஒரு சம்பவம் தான் சமீபத்தில் நடந்துள்ளது. ஃப்ரீசரில் வைக்கப்பட்டிருந்த உடல் ஒன்று உயிருடன் எழுந்தது....
51 வயது பெண்மணி!
ரத்னம் என்பது அந்த பெண்மணியின் பெயர். அவருக்கு வயது 51,கேரளாவை சேர்ந்தவர். இவர் மஞ்சள் காமாலை நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால், உயிர் பிழைக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு, வீட்டிற்கு அழைத்து செல்லுங்கள் என மருத்துவர்கள் கூறிவிட்டனர்.
செல்லும் வழியில்...
வீட்டுக்கு எடுத்து செல்லும் வழியில் ரத்னத்தின் உடலில் எந்த உணர்வும் இல்லாததை கண்டு அவரது உறவினர்கள் இறந்துவிட்டார் என கருதி அருகே இருந்த மார்ச்சுவரிக்கு எடுத்து சென்றுவிட்டனர். அதுவும், இறுதி சடங்கு எல்லாம் முடித்துவிட்டு.
அதிர்ந்து போன உறவினர்!
ஆனால், மார்ச்சுவரியில் கிட்டத்தட்ட அரைமணிநேரம் கழித்து ரத்னம் உயிருடன் இருப்பது தெரியவந்தது. இந்நிகழ்வை கண்டு குடும்பத்தார், உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உறவினர்கள், அவர்கள் மூச்சு விடுவதை கண்டனர். உடனே, அருகே இருந்த மருத்துவமனைக்கு அவரை அழைத்து சென்றனர்.
மரணம்!
ஆனால், மஞ்சள் காமாலை காரணமாக ரத்னத்தின் உடல் பாகங்கள் செயலிழந்து போனதால், அவர் மருத்துவமனை சென்ற சிறிது நேரத்திலேயே மரணம் அடைந்தார்.
மீண்டும், ரத்னத்தின் உடலை எடுத்துக் கொண்டு உறவினர்கள் மார்ச்சுவரிக்கு சென்றனர். மரணத்தின் விளும்புக்கு சென்று போராடி வந்தாலும், விதியின் காரணமாக, ரத்னம் இறந்து போனார்.