Latest Updates
-
100 ஆண்டுக்கு பின் மே மாதத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 4 ராசிக்காரர்களை பணக்காரராக்கப் போகுதாம் -
கர்நாடகா ஸ்டைல் தயிர் சட்னி ரெசிபி - ட்ரை பண்ணுங்க, இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
25 லட்சம் பண மாலை... கல்வீச்சு, மோதல்! ஹரியானா திருமணத்தில் நடந்த அந்த 'ஷோ-ஷாதி' கலாச்சாரத்தின் கோர முகம்! -
இந்த 4 ராசி பெண்கள் அசாத்திய புத்திசாலிகளாம் - இவங்ககிட்ட பொய் சொல்லி தப்பிக்கவே முடியாதாம் - உங்க ராசி என்ன? -
தித்திக்கும் கர்நாடகா ஸ்டைல் மாம்பழ கேசரி ரெசிபி - செஞ்சு பாருங்க, டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
டெல்லி மழையால் மாறிய சூழல்! வீட்டை மாற்றும் அந்த 4 லக்கி செடிகள் இதோ! -
வீட்டில் இந்த செடிகள் இருந்தா போதும்… கோடை வெயிலும் தூசியும் உங்களை நெருங்கவே முடியாது! -
Mother's Day 2026: 35 வயதிற்கு பிறகு பெண்களின் எலும்புகளில் என்னென்ன மாற்றம் ஏற்படும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பருப்பே இல்லாத அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
கிழக்கிந்திய கம்பெனி எப்படி 200 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட ஆட்சியாளராக மாறியது தெரியுமா?
மார்ச்சுவரியில் செத்து, செத்து விளையாண்ட பெண்ணால் பதறி போன உறவினர்கள்!
மார்ச்சுவரியில் செத்து, செத்து விளையாண்ட பெண்ணால் பதறி போன உறவினர்கள்!
மார்ச்சுவரியில் வேலை செய்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. வேலைக்கு செல்லும் ஒவ்வொரு நாளும் மனதை ரணமாக்கிகொண்டு தான் செல்ல வேண்டும்.
மார்ச்சுவரியில் வேலை செய்யும் பெரும்பாலானோருக்கு அச்சம் எக்கச்சக்கமாக இருக்கும். திடீரென ஒரு பிணம் விறைத்து எழுந்துக் கொள்ளலாம். அறிவியல் ரீதியாக இது சாத்தியம். அந்த சூழலை கண்டிப்பாக நீங்கள் சாதரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.
உங்கள் கண் முன்னே ஒரு பிணம் உயிருடன் எழுந்து நின்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்? இப்படி ஒரு சம்பவம் தான் சமீபத்தில் நடந்துள்ளது. ஃப்ரீசரில் வைக்கப்பட்டிருந்த உடல் ஒன்று உயிருடன் எழுந்தது....

51 வயது பெண்மணி!
ரத்னம் என்பது அந்த பெண்மணியின் பெயர். அவருக்கு வயது 51,கேரளாவை சேர்ந்தவர். இவர் மஞ்சள் காமாலை நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால், உயிர் பிழைக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு, வீட்டிற்கு அழைத்து செல்லுங்கள் என மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

செல்லும் வழியில்...
வீட்டுக்கு எடுத்து செல்லும் வழியில் ரத்னத்தின் உடலில் எந்த உணர்வும் இல்லாததை கண்டு அவரது உறவினர்கள் இறந்துவிட்டார் என கருதி அருகே இருந்த மார்ச்சுவரிக்கு எடுத்து சென்றுவிட்டனர். அதுவும், இறுதி சடங்கு எல்லாம் முடித்துவிட்டு.

அதிர்ந்து போன உறவினர்!
ஆனால், மார்ச்சுவரியில் கிட்டத்தட்ட அரைமணிநேரம் கழித்து ரத்னம் உயிருடன் இருப்பது தெரியவந்தது. இந்நிகழ்வை கண்டு குடும்பத்தார், உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உறவினர்கள், அவர்கள் மூச்சு விடுவதை கண்டனர். உடனே, அருகே இருந்த மருத்துவமனைக்கு அவரை அழைத்து சென்றனர்.

மரணம்!
ஆனால், மஞ்சள் காமாலை காரணமாக ரத்னத்தின் உடல் பாகங்கள் செயலிழந்து போனதால், அவர் மருத்துவமனை சென்ற சிறிது நேரத்திலேயே மரணம் அடைந்தார்.
மீண்டும், ரத்னத்தின் உடலை எடுத்துக் கொண்டு உறவினர்கள் மார்ச்சுவரிக்கு சென்றனர். மரணத்தின் விளும்புக்கு சென்று போராடி வந்தாலும், விதியின் காரணமாக, ரத்னம் இறந்து போனார்.



Click it and Unblock the Notifications