Just In
- 27 min ago இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- 1 hr ago தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- 5 hrs ago Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- 10 hrs ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
Don't Miss
- Finance எலான் மஸ்க இந்தியாவுக்கு இப்போ வரலை.. நரேந்திர மோடி அரசுக்கு ஷாக்..!!
- News செட்டில்மென்ட் பத்திரம்.. நீங்க சொத்து வாங்கறீங்களா? தான பத்திரத்தில் இது ரொம்ப மேஜர்.. அடேங்கப்பா
- Movies நடிகருடன் காதல்.. திருமணத்திற்கு முன்பே தெரிந்த உண்மை.. நிதி அகர்வால் எடுத்த அதிரடி முடிவு!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Technology ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
இவற்றை வியாழக்கிழமைகளில் சாய் பாபாவிற்குப் படைத்தால் நினைத்த காரியம் நடக்கும் என்பது தெரியுமா?
இங்கு வியாழக்கிழமைகளில் எந்த பொருட்களை சாய் பாபாவிற்குப் படைத்தால் நினைத்த காரியம் நடக்கும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
சாய் பாபாவிற்கு ஏராளமான பக்தர்கள் உள்ளனர். இவ்வளவு பக்தர்கள் இருப்பதற்கு காரணம், சாய் பாபா பக்தர்களின் ஆசையை நிறைவேற்றுவது தான். அதிலும் வியாழக்கிழமைகளில் சாய் பாபாவிற்கு பிடித்ததைப் படைத்து வேண்டினால், நினைத்த காரியம் மிக விரைவில் நடக்கும் என மக்கள் நம்புகின்றனர். ஏனெனில் வியாழக்கிழமை சாய் பாபாவிற்கு உரியது.
வியாழக்கிழமைகளில் பக்தியுடன் சாய் பாபாவை வணங்கும் பக்தர்கள், தங்கள் வாழ்வில் எவ்வித பிரச்சனைகளையும் சந்திக்கமாட்டார்கள். சரி, சாய் பாபாவிற்கு என்னவெல்லாம் பிடிக்கும், எதைப் படைத்தால் சாய் பாபா நினைத்த காரியத்தை வேகமாக நிறைவேற்றுவார் என்பது குறித்து காண்போம்.
பசலைக்கீரை
சாய் பாபாவிற்கு பிடித்த காய்கறி பசலைக்கீரை என நம்பப்படுகிறது. அதனால் தான் நிறைய பேர் வியாழக்கிழமைகளில் சாய் பாபாவிற்கு பசலைக்கீரையைப் படைத்து வணங்குகிறார்கள்.
அல்வா
எப்படி விநாயகருக்கு லட்டு பிடிக்குமோ, அப்படி தான் சாய் பாபாவிற்கு அல்வா பிடிக்கும். எனவே ரவையால் ஆன அல்வாவை வியாழக்கிழமைகளில் சாய் பாபாவிற்கு படைத்து பயன் பெறுங்கள்.
கூழ்
சாய் பாபாவின் விருப்பமான உணவு கஞ்சி/கூழ் ஆகும். இந்த கஞ்சி/கூழை வியாழக்கிழமைகளில் தயாரித்து சாய் பாபாவிற்குப் படைத்தால், நினைத்த காரியம் விரைவில் கைக்கூடும்.
தேங்காய்
அனைத்து மத செயல்பாடுகளிலும் தேங்காய் முக்கிய பொருளாக பயன்படுத்தப்படுகிறது. சாய் பாபாவிற்கும் இது மிகவும் பிடித்த பொருளாகும்.
பூக்கள்
அனைத்து கடவுள்களையும் போல், சாய் பாபாவிற்கும் பூக்கள் மற்றும் மாலைகள் மிகவும் பிடிக்கும். குறிப்பாக மஞ்சள் நிற மலர்களான சாமந்தி அல்லது சூரியகாந்தி என்றால் சாய் பாபாவிற்கு ரொம்ப பிடிக்கும்.
பழங்கள்
பழங்களில் ஆரஞ்சு பழம் சாய் பாபாவிற்கு பிடிக்கும் என்பதால், வியாழக்கிழமைகளில் ஆரஞ்சு பழத்தை சாய் பாபாவிற்கு படைத்து, நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ளுங்கள்.