Just In
- 1 min ago எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- 3 hrs ago Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- 8 hrs ago 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- 9 hrs ago 40 வருடங்கள் கழித்து கருவுற்றால் இந்த விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்!
Don't Miss
- News நோட்டாவில் அதிக ஓட்டு.. தேர்தல் ரத்தாகுமா? என்னங்க சொல்றீங்க.. நீங்க நம்பலைனாலும் ‘இது’ தான் நெசம்!
- Sports தோனிக்கு இது தான் கடைசி சீசனா? ரெய்னா சொன்னதை கேளுங்க!
- Movies அஜித்துடன் விஜய் சேர்ந்து நடிக்க இதை செய்ய வேண்டும்.. எஸ்.ஏ.சந்திரசேகர் போட்ட கண்டிஷன்
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
உடலெங்கும் ஆயிரம் பெண்குறி கொண்ட இந்து கடவுள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
இந்திரன் ஆயிரன் கண்கள் பெற்றதன் பின்னால் இருக்கும் சாபம் குறித்த கதை!
இந்து மத புராண கதைகள் பலவன இருக்கின்றன என்பதை பலரும் அறிந்திருப்பர். அதில் பல கிளை கதைகளும் இருக்கின்றன என்பதை சிலர் தான் அறிந்திருப்பர்.
இந்திய புராணங்களில் யார், யாருக்கு என்னென்ன நடந்தது, அது எதற்காக நடந்தது என ஒருவரின் நிலை, சாபம் என அனைத்தையும் விளக்கும் பல கிளை கதைகள் இருக்கின்றன.
அவற்றுள் இன்று தான் இந்திரனும் ஆயிரம் கண்களும் எனும் கதை. இந்திரனுக்கு ஆயிரம் கண்கள் இருப்பது பலரும் அறிந்த கதை தான். ஆனால், அது கண்கள் அல்ல பெண்குறிகள் என இந்த கதை கூறுகிறது...
பிரம்மன் படைத்த பேரழகி!
அகல்யா, படைக்கும் கடவுள் பிரம்மன் அழகின் மூலப் பொருட்கள் கொண்டு படைத்த பேரழகி. அகல்யா கௌதம் எனும் முனிவரை மணம்முடித்து கொண்டார். இங்கே தான் துவங்குகிறது இந்திரன் ஆயிரம் கண்கள் பெற்ற கதையின் கரு...
இச்சை!
பிரம்மன் படைத்த பேரழகி மீது இந்திரனுக்கு ஆசை வந்தது. எனவே, அகல்யாவை பின்தொடர ஆரம்பித்தார் இந்திரன். ஒரு ஆசையின் எல்லை கடந்து அகல்யாவை அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் பூமிக்கு சென்றார்.
உருமாற்றம்!
பேரழகி அகல்யாவை அடைய அவளது கணவனின் தோற்றத்தில் உருமாறி சென்றார். அவருடன் உறவும் கொண்டார். ஆனால், விதியின் காரணத்தால் அன்றே அகப்பட்டார் இந்திரன். இந்திரன் செய்த பாவ செயலுக்கு தண்டனையாக கௌதம முனிவர் இந்திரனை சபித்தார்.
சாபம்!
அப்படி இந்திரனுக்கு முனிவர் கொடுத்த சாபம் தான் உடல் முழுதும் ஆயிரம் பெண்குறிகள் கொள்வதாகும். உடலெங்கும் ஆயிரம் பெண்குறிகள் கொண்டு வெளியே கூட செல்ல முடியாத வெட்கி கூனும் நிலைக்கு ஆளானார் இந்திரன்.
கொடுமையானது!
பிறகு பிரம்மன் உட்பட பிற கடவுள்களுக்கு இதுபற்றி அறிய, முனிவரை கண்டு பிரம்மன் இது மிகவும் கொடுமையானது என கூறினாராம்.
அதன்பின் சாந்தமான முனிவர், அந்த ஆயிரம் பெண்குறிகள் மற்றவர்களுக்கு கண்களாக தெரியும் என சாபத்தை மாற்றினாராம்.
இப்படி தான் இந்திரனுக்கு ஆயிரம் கண்கள் என்ற நிலை வந்தது என இந்த கிளை கதை கூறுகிறது.