Latest Updates
-
மேஷ ராசியில் உருவாகும் மகாலட்சுமி யோகத்தால் பணமழையில் நனையப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
ராகு-கேதுவால் உருவாகும் கால சர்ப்ப யோகம்: மே 11 முதல் இந்த 4 ராசிக்காரர்கள் மிகவும் கவனமா இருக்கணும்! -
1 கப் சுண்டலும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா இந்த குருமாவை பண்ணுங்க - மட்டன் குருமா மாதிரியே இருக்கும் -
எவ்வளவு வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தள்ளுவண்டி ஸ்டைல் வெங்காய சட்னி ரெசிபி - ஒரு தடவை செஞ்சு பாருங்க, இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
கர்ப்பிணி என்றும் பாராமல் நடந்த கொடூரம்! வரதட்சணை கொடுமை வழக்கில் பதோஹி போலீஸின் அதிரடி நடவடிக்கை! -
இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் மற்றவர்களை விட அதிக கஷ்டப்படுவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காரசாரமான.. ஆம்லெட் சாப்ஸ் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தவெக மாநாடு வெற்றிக்கு பின் விஜய் - த்ரிஷா பற்றி பரவும் வதந்தி: ரசிகர்கள் ஏன் இப்படி முடிச்சுப் போடுறாங்க? -
உங்க இதயம் ஆபத்திலிருப்பதை வீட்டிலேயே கண்டறியும் 5 நொடி சோதனை - செஞ்சு பார்த்து உயிரை காப்பதிக்கோங்க
இந்திய மக்களிடம் நேரு குடும்பம் மறைத்த ரகசியம்!
இந்திராவின் பெயரோடு காந்தி என்ற பெயர் சேர்ந்ததற்கு சொல்லப்படுகிற மூன்று கட்டுக்கதைகள்
இந்திய சுதந்திர வரலாறு பலருக்கும் அறிமுகமாகியிருக்கும். பள்ளிகளில், கல்லூரிகளில் நிறையவே படித்திருப்பீர்கள். வரலாறு என்பது மேம்போகாக கடந்து வரக்கூடிய விஷயமல்ல.
இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்க அகிம்சை வழியில் போராடியவர் காந்தி. இந்தியாவின் முதல் பிரதம மந்திரி நேரு. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைமை பீடமான நேரு குடும்பத்தைப் பற்றிய சுவாரஸ்ய தகவல் தான் இது.
இந்திரா காந்தி நேருவின் மகள் என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால் உண்மையில் அவருடைய பெயர் இந்திரா ப்ரியதர்ஷினி.பின்னர் எங்கிருந்து காந்தி வந்தது?? காந்தி குடும்பத்திற்கும் நேரு குடும்பத்திற்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்று தெரியுமா? அவசியம் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்

நேரு குடும்பம் :
நேரு என்ற வார்த்தைக்கு கால்வாய் என்று பொருள். ஆரம்ப காலங்களில் நேரு குடும்பத்தினரின் மூதாதையர்கள் தங்கியிருந்த வீடு கால்வாய் ஓரத்தில் தான் இருந்திருக்கிறது. கால்வாயை குறிக்கும் நஹர் என்ற சொல்லே காலப்போக்கில் நேரு என்று உருமாறியிருக்கிறது.
நேரு குடும்பத்தில் பின் பெயராக கவுல் என்றே சேர்த்து வந்தனர். நேரு என்ற பெயர் பிரபலமானதும் கவுலை விடுத்து நேரு என்ற பெயரை தங்கள் பெயர்களோடு சேர்த்துக் கொள்ள ஆரம்பித்தனர்.
இந்திரா ப்ரியாதர்ஷினி இந்திரா காந்தியானதற்கு மூன்று கதைகள் சொல்லப்படுகிறது....

முதல் கதை :
தந்தையைப் போலவே இந்திராவும் தீவிர அரசியலில் ஈடுபட ஆரம்பித்தார். அப்போது அலகாபாத்தில் இருக்கும் தாத்தா வீட்டிற்கு வைன் சப்ளை செய்திடும் நவாப் கானின் மகன் ஃபெரோஸ் கான் மீது இந்திராவுக்கு காதல்.
பின்னர் லண்டனில் இருக்கும் மசூதியில் இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். இந்திரா தன்னுடை பெயரை மைமுனா பேகம் என்று பெயர் மாற்றிக் கொள்கிறார்.
ஆனால் நேருவுக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை. இந்திராவின் இந்த செயலால் இந்திராவின் அரசியல் வாழ்க்கையே பாழடைந்துவிடும் என்று நினைத்து பெரோஸ் கானிடம் பேசுகிறார்.
கான் என்ற பின் பெயருக்கு பதிலாக காந்தி என்று சேர்த்துக் கொள்ளச் சொல்கிறார் அதன் படி பெரோஸ் கானும் மாற்றிக்கொள்ள பெரோஸ் காந்தியின் மனைவி இந்திரா காந்தி ஆகிறார்.

இரண்டாவது கதை :
மகளுக்கு வேறு மதத்தவரை திருமணம் செய்து வைக்க நேருவுக்கு சிறிதும் விருப்பமில்லை. இதனால் நேருவின் குடும்பத்திற்கே பெரும் அவமானம் ஏற்படும் என்று கருதுகிறார்.
நேருவின் இந்த வருத்தத்தை அறிந்த காந்தி, பெரோஸ் கானை தத்தெடுத்துக் கொள்கிறார் இதனால் பெரோஸ் கானின் பெயர் பெரோஸ் காந்தியாக மாற்றப்படுகிறது. பெரோஸ் காந்திக்கு மகளை திருமணம் செய்து கொடுக்க நேருவும் சம்மதித்து விடுகிறார்.

மூன்றாவது கதை :
இதுவரை படித்த இரண்டு கதைகளை விட இது ரொம்பவே வித்தியாசமானது. பெரோஸ் காந்தியின் உண்மையான பெயர் பெரோஸ் ஜெஹாங்கிர் காண்டே.பெரோஸ் பிறந்தது ஒரு பார்ஸி குடும்பத்தில். பெரோஸின் அப்பா ஃபரீடூன் ஜஹாங்கிர் காண்டே மற்றும் அம்மா ரதிமாய். இவர்கள் மும்பையில் வசிக்கிறார்கள்.
கல்வியை கைவிட்ட பிறகு 1930 ஆம் ஆண்டில் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொள்கிறார் பெரோஸ்.அப்போது மகாத்மா காந்தியின் மீது ஏற்ப்பட்ட பற்றினால் தன்னுடைய பெயரில் இருக்கும் காண்டேவை காந்தி என்று மாற்றிக் கொள்கிறார்.



Click it and Unblock the Notifications