Latest Updates
-
புதன் மேஷ ராசியில் அஸ்தமனமாவதால் மே மாதம் இந்த 4 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் -
வாஸ்து படி உங்க வீட்டில் துடைப்பம் இந்த இடத்தில் இருந்தால் உங்கள் வீட்டுக்கு அதிர்ஷ்டம் எப்பவுமே வராதாம் -
வெயில் கொடுமையா? கோடை கால திருமணத்தை ஜில்லுனு மாத்த இந்த 5 ஐடியாக்கள் போதும்! -
Labour Day Wishes:தொழிலாளர் தினத்தில் உங்களுக்கு தெரிஞ்ச உழைப்பாளிகளுக்கு இந்த வாழ்த்தை சொல்ல மறந்துராதீங்க -
1 கப் மைதா இருந்தா இந்த சூப்பரான மங்களூர் பன்-யை ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும் -
சஞ்சய் கபூர் சொத்து விவகாரம்: கரிஷ்மா கபூர் குழந்தைகளின் உரிமையை மீட்டெடுத்த நீதிமன்றம்! -
இந்த 4 எழுத்துக்களில் பெயர் தொடங்குபவர்கள் ராஜவாழ்க்கை வாழ பிறந்தவர்களாம் - உங்க பெயரின் முதல் எழுத்து என்ன? -
கர்நாடகா ஸ்டைல் கசப்பே இல்லாத பாவக்காய் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
வீட்டில் இந்த செடிகள் இருந்தா போதும்… காற்று சுத்தமாகும், பணமும் அதிர்ஷ்டமும் தானாக வரும்! -
பணத்தின் வரலாறு: பணம் கண்டுபிடிப்பதற்கு முன் எதை வைத்து மக்கள் பொருட்களை வாங்கினார்கள் தெரியுமா?
பில்லி, சூனியம், வசியம் யாருக்கு எல்லாம் பலிக்காது?
பில்லி, சூனியம் வசியம் எல்லாம் ஒரே மாதிரியானவை அல்ல. ஒவ்வொன்றும், வெவ்வேறு செயலுக்கு செய்யப்படுகின்றன.
பில்லி, சூனியம், வசியம் எல்லாம் இன்னும் இருக்கிறதா என்ன? என்ற கேள்வி உங்கள் மனதில் இருந்தால். நீங்கள் கேரளாவில் சிறிய சுற்று பயணம் மேற்கொண்டு வந்தால் நன்கு அறியலாம்.
இன்னும், ஒரு சில இடங்களில் சூனியம் செய்வதும், வைப்பது, எடுப்பது எல்லாம் பட்டப்பகலில் நாம் அங்கே காண முடியும். இதில், பில்லி, சூனியம், வசியம், மனோ வசியம் என பல வகைகள் இருக்கின்றன.
எதை எதை, எதற்கெல்லாம் செய்கிறார்கள். யாருக்கு எல்லாம் இந்த தாக்கம் ஏற்படாது என அவர்கள் கூறும் சில தகவல்கள்...

எதிரி!
ஒருவர், தனக்கு பிடிக்காத நபர் அல்லது விரோதிகளுக்கு, வாழ்வில் தோல்வி அடைய வேண்டும், நஷ்டம் அடைய வேண்டும், துன்பம் அனுபவிக்க வேண்டும் என்பதற்காக செய்வது பில்லி, சூனியம்.

மூளை கட்டு!
ஒரு நபரின் மூளையை மட்டும் கட்டுப்படுத்தி, குழப்பி, நம் பேச்சை மட்டும் கேட்டு, தலையாட்டி பொம்மை போல இயங்குவதற்கு செய்வது பில்லியாம்.

வசியம்!
ஆண், அல்லது பெண்ணை முழுவதுமாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு செய்யப்படுவது வசியம் என கூறப்படுகிறது.

சூனியம்!
ஒரு நபரை அளிக்க வேண்டும் என்றால் அதற்கு சூனியம் வைக்கிறார்கள். அதற்கு அந்த நபரின் துணி, காலடி மண் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர்.

மாந்திரீகம்!
தோல்வி, நஷ்டம், துன்பம், அழிவு என ஒருவருக்கு எல்லா வகையிலும் தீங்கு ஏற்படுத்த மாந்திரீகம் செய்கிறார்கள். இதற்கான சிறப்பு பூஜைகள் செய்து வசியம் செய்யும் நபருக்கு அளிக்கிறார்கள்.
மாந்திரீகம் செய்யப்பட்ட பொருளை, அந்த நபர் வாழும் வீட்டில் அல்லது அலுவலகத்தில் மறைத்து வைத்து விடுவார்களாம்.

இன்டர்நெட் வசியம்!
வசியம் செய்ய நினைக்கும் நபரை, இன்டர்நெட் மூலமாக கூடி பேசி மனோவசியம் செய்யலாம் என ஒரு பிரிட்டிஷ் வசிய நிபுணர் கூறுகிறார்.

சந்திரன்!
எந்த ஒரு நபரின் ஜாதகத்தில் சந்திரன் பலம் இல்லா நிலையில் இருக்கிறதோ, அவர்களை தான் வசியம் செய்ய முடியுமாம். சந்திரன் பலமாக இருந்தாம் வசியல் செய்ய முடியாதாம்.

யார், யாருக்கு?
வேதம் ஓதுபவர்கள், சாமியார்கள், குருக்கள் போன்றவர்கள் மத்தியில் மாந்திரீகம் பலன் அளிக்காதாம். அதே போல தினமும் யோகா, தியானம் செய்யும் நபர்கள் மத்தியில் மனோவசியம் பலன் தராதாம்.

குல தெய்வம்!
குல தெய்வங்களை வணங்கி வரும் நபர்கள் மத்தியில் மாந்திரீகம் எந்த தாக்கத்தையும் உண்டாக்காது என்றும் மாந்திரீக செயல்களில் ஈடுபடுபவர்கள் கூறுகின்றனர். அதே போல, மனதை ஒருநிலைப்படுத்த தெரிந்த யாரிடமும் மனோவசியம் வேலை செய்யாது என கூறுகின்றனர்.



Click it and Unblock the Notifications