Latest Updates
-
டேட்டிங் ஆப் மூலம் நடக்கும் பில் மோசடி! இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனே உஷாராகுங்கள்! -
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகம் வழியுதா? அப்ப இந்த முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
மே மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சு பண மழை கொட்டப்போகுது... -
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
கோடை வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த செடிகளை வளர்த்தால் குளிர்ச்சியும் பணமும் தேடி வரும்! -
100% மருந்து மாத்திரையின்றி கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 'டயட் சார்ட்' ஃபாலோ பண்ணுங்க.. -
கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைக்கணுமா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும், ஏசி தேவையில்லை! -
லட்சுமி நாராயண ராஜயோகம்: மே மாதத்தில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
தக்காளியும், கொத்தமல்லியும் இருந்தா.. ஒருடைம் இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம்
தரையில் வைத்து பூஜை செய்யக்கூடாத சில பொருட்கள்!
இங்கு தமிழ் போல்ட் ஸ்கை தரையில் வைத்து பூஜை செய்யக்கூடாத சில பொருட்களைப் பட்டியலிட்டுள்ளது.
பூஜை என்பது ஒரு ஆன்மீக நடவடிக்கை ஆகும். இது அன்றாடம் கடவுளை வணங்கும் போது ஒவ்வொருவரும் மேற்கொள்ளும் ஓர் செயலாகும். அப்படி பூஜை செய்யும் போது, நமக்குத் தெரியாமல் சில தவறுகளுடன் பூஜைகளை செய்வோம். அவ்வாறு தவறுகளுடன் செய்யப்படும் பூஜையால் பலன் ஏதும் கிட்டாது.
என்ன புரியவில்லையா? நாம் பூஜை செய்யும் போது சில பொருட்களை தரையில் வைத்து செய்வோம். அப்படி தரையில் வைத்து பூஜை செய்தால், அது துரதிர்ஷ்டத்தை தான் வழங்கும். எனவே தமிழ் போல்ட் ஸ்கை தரையில் வைத்து பூஜை செய்யக்கூடாத சில பொருட்களைப் பட்டியலிட்டுள்ளது.

சிவலிங்கம்
வீட்டில் முடிந்த அளவு சிவலிங்கத்தை வைத்திருப்பதை தவிர்த்திடுங்கள். தரையில் நேரடியாக வைக்கவில்லை, துணியின் மீது தான் வைக்கிறேன் என்றும் வைக்காதீர்கள். ஒருவேளை வைக்க வேண்டுமானால், ஒரு மரப்பலகையை வைத்து, அதன் மேல் வைத்துக் கொள்ளுங்கள்.

பூணூல்
பூணூல், இந்து மதத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. இத்தகைய புனித நூலை எப்போதும் தரையில் வைத்து பூஜை செய்யக்கூடாது.

சங்கு
சங்கில் லட்சுமி தேவி குடியிருப்பதாக கருதப்படுகிறது. இந்த சங்கை வீட்டு பூஜை அறையில் தரையில் மட்டும் வைக்கக்கூடாது. ஒருவேளை அப்படி வைத்தால், அவ்வீட்டில் பணப் பிரச்சனைகளை அதிகம் சந்திக்கக்கூடும். எனவே கவனமாக இருங்கள்.

விளக்கு
ஒவ்வொருவரது வீட்டிலும், காலை மற்றும் மாலையில் விளக்கேற்றுவது வழக்கம். அப்படி விளக்கை ஏற்றுகையில், அதனை தரையில் வைத்து செய்யக்கூடாது, மாறாக இதனை ஒரு சுத்தமான துணியில் மேல் வைத்து ஏற்றலாம்.

தங்கம்
மிகவும் புகழ்மிக்க ஓர் மெட்டல் தான் தங்கம். இந்த தங்கத்தில் லட்கூமி தேவி இருப்பதாகக் கருதப்படுகிறது. எனவே பூஜை அறையில் தங்க பொருட்கள் இருந்தால், அவற்றை தரையில் வைக்காதீர்கள்.

குறிப்பு
யார் ஒருவர் மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை தரையில் வைத்து பூஜை செய்கிறாரோ, அவர்கள் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழிலில் பிரச்சனைகளை அதிகம் சந்திக்கக்கூடும். ஆகவே கவனமாக இருங்கள்.



Click it and Unblock the Notifications