Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
கணவனை கடித்தது விஷப்பாம்பு, மனைவியை கடித்த கணவன் - ஒண்ணா சாகலாம்னு சமயோசித புத்தி!
பீகார் மாநிலத்தில் இரவு தூங்கிக் கொண்டிருந்த நபரை விஷப்பாம்பு கடித்தது. இதை அறிந்த அந்த நபர், அவரது மனைவியை கடித்து வைத்தார்.
பீகாரை சேர்ந்த நபர் ஒருவரை இரவு உறங்கிக் கொண்டிருந்த நேரத்தில் விஷத்தன்மை வாய்ந்த பாம்பு ஒன்று கடித்துவிட்டது. இதை அறிந்த அந்த கணவர், அருகே தன்னுடன் படுத்திருந்த மனைவியை கடித்துவிட்டார்.
ஒன்றாக மனைவியுடன் சேர்ந்தே சாக இப்படி சமயோசிதமாக யோசித்துள்ளார் பாம்பை காட்டிலும் விஷத்தன்மை வாய்ந்த அந்த கணவர்...

பீகார் மாநிலம்!
பிர்சிங்ஸ்பூர் கிராம், பீகார் மாநிலத்தை சேர்ந்த ஷங்கர் எனும் நபர் தனது வீட்டில் இரவு உணவருந்திய பிறகு குடும்பத்துடன் உறங்கியுள்ளார்.
எப்போதும் போல அவரது மனைவி அமிரி தேவி அருகே உறங்கியுள்ளார். எதிர்பாராத நேரத்தில் நடுசாமத்தில் விஷத்தன்மை வாய்ந்த பாம்பொன்று அவரை கடித்து சென்றுவிட்டது.

மரணத்தை அறிந்தார்...
கண்டிப்பாக தன்னால் பிழைக்க முடியாது என சங்கர் அறிந்தார். அடுத்த நொடியே தனது விஷதன்மையான புத்தியை கொண்டு சமயோசிதமாக கெட்ட யோசனை ஒன்றை செயல்படுத்தியுள்ளார்.

மணிக்கட்டு!
அருகே படுத்து உறங்கி கொண்டிருந்த மனைவி அமிரி தேவியின் மணிக்கட்டு பகுதியில் கடித்துள்ளார். இதனால், அவரது மனைவியும் இறந்துவிடுவார், இருவரும் சேர்ந்தே சாகலாம் என முடிவெடுத்துள்ளார் அந்த விஷக் கணவன்.

நினைவிழந்த தம்பதி!
சங்கர் கடித்த சில நிமிடத்திலேயே இருவரும் நினைவிழந்தனர். உடனே இருவரையும் மருத்துவமனைக்கு விரைந்து அழைத்து சென்றனர். செல்லும் வழியிலேயே சங்கர் உயிரிழந்தார். அமிரி தேவியை சிகிச்சை அளித்து மருத்துவர்கள் காப்பாற்றினர்.

சேர்ந்தே வாழ...
அமிரி தேவி, "எனது கணவருக்கு என் மீது மிகவும் பிரியம் அதிகம். என்னை மணிக்கட்டில் பற்கள் கொண்டு ஆழமாக கடித்தார். அப்போது இருவரும் ஒன்றாக சேர்ந்த மரணிக்க வேண்டும் எனவும், மரணத்திலும் நம்மை யாரும் பிரிக்க கூடாது என அவர் கூறினார்.

மனைவி ஒப்புதலுடன்...
மேலும், உன்னை நான் மிகவும் விரும்புகிறேன். மீண்டும் அவரது மணிக்கட்டை பிடித்த ஆழமாக கடித்துள்ளார் மனைவியின் சம்மதத்துடன்.



Click it and Unblock the Notifications











