Latest Updates
-
புதன் மேஷ ராசியில் அஸ்தமனமாவதால் மே மாதம் இந்த 4 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் -
வாஸ்து படி உங்க வீட்டில் துடைப்பம் இந்த இடத்தில் இருந்தால் உங்கள் வீட்டுக்கு அதிர்ஷ்டம் எப்பவுமே வராதாம் -
வெயில் கொடுமையா? கோடை கால திருமணத்தை ஜில்லுனு மாத்த இந்த 5 ஐடியாக்கள் போதும்! -
Labour Day Wishes:தொழிலாளர் தினத்தில் உங்களுக்கு தெரிஞ்ச உழைப்பாளிகளுக்கு இந்த வாழ்த்தை சொல்ல மறந்துராதீங்க -
1 கப் மைதா இருந்தா இந்த சூப்பரான மங்களூர் பன்-யை ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும் -
சஞ்சய் கபூர் சொத்து விவகாரம்: கரிஷ்மா கபூர் குழந்தைகளின் உரிமையை மீட்டெடுத்த நீதிமன்றம்! -
இந்த 4 எழுத்துக்களில் பெயர் தொடங்குபவர்கள் ராஜவாழ்க்கை வாழ பிறந்தவர்களாம் - உங்க பெயரின் முதல் எழுத்து என்ன? -
கர்நாடகா ஸ்டைல் கசப்பே இல்லாத பாவக்காய் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
வீட்டில் இந்த செடிகள் இருந்தா போதும்… காற்று சுத்தமாகும், பணமும் அதிர்ஷ்டமும் தானாக வரும்! -
பணத்தின் வரலாறு: பணம் கண்டுபிடிப்பதற்கு முன் எதை வைத்து மக்கள் பொருட்களை வாங்கினார்கள் தெரியுமா?
கணவனை கடித்தது விஷப்பாம்பு, மனைவியை கடித்த கணவன் - ஒண்ணா சாகலாம்னு சமயோசித புத்தி!
பீகார் மாநிலத்தில் இரவு தூங்கிக் கொண்டிருந்த நபரை விஷப்பாம்பு கடித்தது. இதை அறிந்த அந்த நபர், அவரது மனைவியை கடித்து வைத்தார்.
பீகாரை சேர்ந்த நபர் ஒருவரை இரவு உறங்கிக் கொண்டிருந்த நேரத்தில் விஷத்தன்மை வாய்ந்த பாம்பு ஒன்று கடித்துவிட்டது. இதை அறிந்த அந்த கணவர், அருகே தன்னுடன் படுத்திருந்த மனைவியை கடித்துவிட்டார்.
ஒன்றாக மனைவியுடன் சேர்ந்தே சாக இப்படி சமயோசிதமாக யோசித்துள்ளார் பாம்பை காட்டிலும் விஷத்தன்மை வாய்ந்த அந்த கணவர்...

பீகார் மாநிலம்!
பிர்சிங்ஸ்பூர் கிராம், பீகார் மாநிலத்தை சேர்ந்த ஷங்கர் எனும் நபர் தனது வீட்டில் இரவு உணவருந்திய பிறகு குடும்பத்துடன் உறங்கியுள்ளார்.
எப்போதும் போல அவரது மனைவி அமிரி தேவி அருகே உறங்கியுள்ளார். எதிர்பாராத நேரத்தில் நடுசாமத்தில் விஷத்தன்மை வாய்ந்த பாம்பொன்று அவரை கடித்து சென்றுவிட்டது.

மரணத்தை அறிந்தார்...
கண்டிப்பாக தன்னால் பிழைக்க முடியாது என சங்கர் அறிந்தார். அடுத்த நொடியே தனது விஷதன்மையான புத்தியை கொண்டு சமயோசிதமாக கெட்ட யோசனை ஒன்றை செயல்படுத்தியுள்ளார்.

மணிக்கட்டு!
அருகே படுத்து உறங்கி கொண்டிருந்த மனைவி அமிரி தேவியின் மணிக்கட்டு பகுதியில் கடித்துள்ளார். இதனால், அவரது மனைவியும் இறந்துவிடுவார், இருவரும் சேர்ந்தே சாகலாம் என முடிவெடுத்துள்ளார் அந்த விஷக் கணவன்.

நினைவிழந்த தம்பதி!
சங்கர் கடித்த சில நிமிடத்திலேயே இருவரும் நினைவிழந்தனர். உடனே இருவரையும் மருத்துவமனைக்கு விரைந்து அழைத்து சென்றனர். செல்லும் வழியிலேயே சங்கர் உயிரிழந்தார். அமிரி தேவியை சிகிச்சை அளித்து மருத்துவர்கள் காப்பாற்றினர்.

சேர்ந்தே வாழ...
அமிரி தேவி, "எனது கணவருக்கு என் மீது மிகவும் பிரியம் அதிகம். என்னை மணிக்கட்டில் பற்கள் கொண்டு ஆழமாக கடித்தார். அப்போது இருவரும் ஒன்றாக சேர்ந்த மரணிக்க வேண்டும் எனவும், மரணத்திலும் நம்மை யாரும் பிரிக்க கூடாது என அவர் கூறினார்.

மனைவி ஒப்புதலுடன்...
மேலும், உன்னை நான் மிகவும் விரும்புகிறேன். மீண்டும் அவரது மணிக்கட்டை பிடித்த ஆழமாக கடித்துள்ளார் மனைவியின் சம்மதத்துடன்.



Click it and Unblock the Notifications