Latest Updates
-
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க... -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை அலட்சியமாக தண்ணீர் போல செலவழிப்பார்களாம் - உங்க பிறந்த மாதம் என்ன? -
சிம்ம ராசிக்கு செல்லும் சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
சாணக்கிய நீதி படி ஒரு நல்ல குடும்பத் தலைவரிடம் இருக்க வேண்டிய 4 குணங்கள் இதுதான் - உங்ககிட்ட எத்தனை இருக்கு? -
1/2 கப் பாசிப்பருப்பு இருந்தா.. இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு செமயா இருக்கும்..
கணவனை கடித்தது விஷப்பாம்பு, மனைவியை கடித்த கணவன் - ஒண்ணா சாகலாம்னு சமயோசித புத்தி!
பீகார் மாநிலத்தில் இரவு தூங்கிக் கொண்டிருந்த நபரை விஷப்பாம்பு கடித்தது. இதை அறிந்த அந்த நபர், அவரது மனைவியை கடித்து வைத்தார்.
பீகாரை சேர்ந்த நபர் ஒருவரை இரவு உறங்கிக் கொண்டிருந்த நேரத்தில் விஷத்தன்மை வாய்ந்த பாம்பு ஒன்று கடித்துவிட்டது. இதை அறிந்த அந்த கணவர், அருகே தன்னுடன் படுத்திருந்த மனைவியை கடித்துவிட்டார்.
ஒன்றாக மனைவியுடன் சேர்ந்தே சாக இப்படி சமயோசிதமாக யோசித்துள்ளார் பாம்பை காட்டிலும் விஷத்தன்மை வாய்ந்த அந்த கணவர்...

பீகார் மாநிலம்!
பிர்சிங்ஸ்பூர் கிராம், பீகார் மாநிலத்தை சேர்ந்த ஷங்கர் எனும் நபர் தனது வீட்டில் இரவு உணவருந்திய பிறகு குடும்பத்துடன் உறங்கியுள்ளார்.
எப்போதும் போல அவரது மனைவி அமிரி தேவி அருகே உறங்கியுள்ளார். எதிர்பாராத நேரத்தில் நடுசாமத்தில் விஷத்தன்மை வாய்ந்த பாம்பொன்று அவரை கடித்து சென்றுவிட்டது.

மரணத்தை அறிந்தார்...
கண்டிப்பாக தன்னால் பிழைக்க முடியாது என சங்கர் அறிந்தார். அடுத்த நொடியே தனது விஷதன்மையான புத்தியை கொண்டு சமயோசிதமாக கெட்ட யோசனை ஒன்றை செயல்படுத்தியுள்ளார்.

மணிக்கட்டு!
அருகே படுத்து உறங்கி கொண்டிருந்த மனைவி அமிரி தேவியின் மணிக்கட்டு பகுதியில் கடித்துள்ளார். இதனால், அவரது மனைவியும் இறந்துவிடுவார், இருவரும் சேர்ந்தே சாகலாம் என முடிவெடுத்துள்ளார் அந்த விஷக் கணவன்.

நினைவிழந்த தம்பதி!
சங்கர் கடித்த சில நிமிடத்திலேயே இருவரும் நினைவிழந்தனர். உடனே இருவரையும் மருத்துவமனைக்கு விரைந்து அழைத்து சென்றனர். செல்லும் வழியிலேயே சங்கர் உயிரிழந்தார். அமிரி தேவியை சிகிச்சை அளித்து மருத்துவர்கள் காப்பாற்றினர்.

சேர்ந்தே வாழ...
அமிரி தேவி, "எனது கணவருக்கு என் மீது மிகவும் பிரியம் அதிகம். என்னை மணிக்கட்டில் பற்கள் கொண்டு ஆழமாக கடித்தார். அப்போது இருவரும் ஒன்றாக சேர்ந்த மரணிக்க வேண்டும் எனவும், மரணத்திலும் நம்மை யாரும் பிரிக்க கூடாது என அவர் கூறினார்.

மனைவி ஒப்புதலுடன்...
மேலும், உன்னை நான் மிகவும் விரும்புகிறேன். மீண்டும் அவரது மணிக்கட்டை பிடித்த ஆழமாக கடித்துள்ளார் மனைவியின் சம்மதத்துடன்.



Click it and Unblock the Notifications