Latest Updates
-
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு
கணவனை கடித்தது விஷப்பாம்பு, மனைவியை கடித்த கணவன் - ஒண்ணா சாகலாம்னு சமயோசித புத்தி!
பீகார் மாநிலத்தில் இரவு தூங்கிக் கொண்டிருந்த நபரை விஷப்பாம்பு கடித்தது. இதை அறிந்த அந்த நபர், அவரது மனைவியை கடித்து வைத்தார்.
பீகாரை சேர்ந்த நபர் ஒருவரை இரவு உறங்கிக் கொண்டிருந்த நேரத்தில் விஷத்தன்மை வாய்ந்த பாம்பு ஒன்று கடித்துவிட்டது. இதை அறிந்த அந்த கணவர், அருகே தன்னுடன் படுத்திருந்த மனைவியை கடித்துவிட்டார்.
ஒன்றாக மனைவியுடன் சேர்ந்தே சாக இப்படி சமயோசிதமாக யோசித்துள்ளார் பாம்பை காட்டிலும் விஷத்தன்மை வாய்ந்த அந்த கணவர்...

பீகார் மாநிலம்!
பிர்சிங்ஸ்பூர் கிராம், பீகார் மாநிலத்தை சேர்ந்த ஷங்கர் எனும் நபர் தனது வீட்டில் இரவு உணவருந்திய பிறகு குடும்பத்துடன் உறங்கியுள்ளார்.
எப்போதும் போல அவரது மனைவி அமிரி தேவி அருகே உறங்கியுள்ளார். எதிர்பாராத நேரத்தில் நடுசாமத்தில் விஷத்தன்மை வாய்ந்த பாம்பொன்று அவரை கடித்து சென்றுவிட்டது.

மரணத்தை அறிந்தார்...
கண்டிப்பாக தன்னால் பிழைக்க முடியாது என சங்கர் அறிந்தார். அடுத்த நொடியே தனது விஷதன்மையான புத்தியை கொண்டு சமயோசிதமாக கெட்ட யோசனை ஒன்றை செயல்படுத்தியுள்ளார்.

மணிக்கட்டு!
அருகே படுத்து உறங்கி கொண்டிருந்த மனைவி அமிரி தேவியின் மணிக்கட்டு பகுதியில் கடித்துள்ளார். இதனால், அவரது மனைவியும் இறந்துவிடுவார், இருவரும் சேர்ந்தே சாகலாம் என முடிவெடுத்துள்ளார் அந்த விஷக் கணவன்.

நினைவிழந்த தம்பதி!
சங்கர் கடித்த சில நிமிடத்திலேயே இருவரும் நினைவிழந்தனர். உடனே இருவரையும் மருத்துவமனைக்கு விரைந்து அழைத்து சென்றனர். செல்லும் வழியிலேயே சங்கர் உயிரிழந்தார். அமிரி தேவியை சிகிச்சை அளித்து மருத்துவர்கள் காப்பாற்றினர்.

சேர்ந்தே வாழ...
அமிரி தேவி, "எனது கணவருக்கு என் மீது மிகவும் பிரியம் அதிகம். என்னை மணிக்கட்டில் பற்கள் கொண்டு ஆழமாக கடித்தார். அப்போது இருவரும் ஒன்றாக சேர்ந்த மரணிக்க வேண்டும் எனவும், மரணத்திலும் நம்மை யாரும் பிரிக்க கூடாது என அவர் கூறினார்.

மனைவி ஒப்புதலுடன்...
மேலும், உன்னை நான் மிகவும் விரும்புகிறேன். மீண்டும் அவரது மணிக்கட்டை பிடித்த ஆழமாக கடித்துள்ளார் மனைவியின் சம்மதத்துடன்.



Click it and Unblock the Notifications