Latest Updates
-
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, தன் பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்.. -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும்
இந்த பாகிஸ்தான் ரசிகர் இந்திய அணி வெல்ல உற்சாகப்படுத்துவது ஏன்?
ச்சாச்சா சிக்காகோ என்கிற முகமது பஷீர். பிறப்பால் பாகிஸ்தானியர் ஆனால், இவர் தாய்நாட்டை விட இந்தியாவை அதிகம் நேசிக்கிறார்.
இந்தியா - பாகிஸ்தான் என்பது ஒருசில காரணங்களால் எப்போதுமே ஒரு விரோத நாடு என்ற கண்ணோட்டத்திலேயே பார்க்கப்படுகிறது. அதில், ஒரு காரணமாக திகழ்வது இந்த இரு நாடுகளுக்கிடையே நடக்கும் கிரிக்கெட் போட்டிகள்!
ஒரு யுத்தம் போல பாவிக்கப்படும் இப்படி ஒரு விளையாட்டில். பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் இந்தியாவை நேசிக்கிறார் என்றால், எல்லா கிரிக்கெட் ரசிகர்களுக்கும் தெரியும் அது ச்சாச்சா சிக்காகோ என்கிற முகமது பஷீர் தான் என்று.

யார் இவர்?
ச்சாச்சா சிக்காகோ ஒரு தோனி ரசிகர். மைதானத்தில் இந்திய ரசிகர்களோடு அமர்ந்து இந்தியாவை உற்சாகப்படுத்தி, தோனியை பற்றி இந்திய ரசிகர்களை காட்டிலும் அதிக பெருமையாக பேசுபவர் இவர்.

இந்தியா - பாகிஸ்தான்!
நான் பாகிஸ்தானை விரும்புகிறேன். ஆனால், இந்தியாவை அதை காட்டிலும் மேலாக விரும்புகிறேன். ஆரம்பத்தில் பாகிஸ்தான் தான் வெல்ல வேண்டும் என வேண்டுவேன். ஆனால், இப்போதோ இந்தியா வெல்ல வேண்டும் என்றே அதிகம் பிரார்த்தனை செய்கிறேன்.

மொஹாலி!
2011ல் மொஹாலியில் எனது முதல் இந்திய சுற்று பயணத்தின் போது எனக்கு இந்தியாவில் கிடைத்த அன்பும், காதலும் மிகவும் பெரியது. அதானாலேயே நான் இந்தியாவை மிகவும் நேசுக்கிறேன் என ச்சாச்சா சிக்காகோ கூறுகிறார்.

ஒரு போட்டி கூட...
2011 உலக கோப்பை போட்டியில் இருந்து அதற்கு பிறகு நடந்த ஒரு இந்தியா - [பாகிஸ்தான் போட்டியை கூட முகமது பஷீர் தவறவிட்டதில்லை. நேரடியாக மைதானத்திற்கு சென்று கண்டு வந்துவிடுவார்.

பாதுகாப்பு!
நான் இப்போதெல்லாம் வருடத்திற்கு ஒருமுறையாவது இந்தியா வந்து விடுகிறேன். ஆனால், பாகிஸ்தானுக்கு எப்போதாவது தான் செலவே. பாகிஸ்தானை காட்டிலும், இந்தியாவில் நாம் மிகவும் பாதுகாப்பாக உணர்கிறேன் என்றும் முகமது பஷீர் தெரிவித்துள்ளார்.

மதச்சார்பற்ற அன்பு!
இவர் போல மதசார்பற்ற அன்பு செலுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க துவங்கினால். நாடுகளின் எல்லைகள் வெறும் கோடாக மட்டுமே இருக்கும். மக்களும், மனிதத்தன்மையும் அதிகரித்து வெவ்வேறு நாடுகளுக்கு மத்தியிலான சண்டைகள் குறைந்துவிடும்.



Click it and Unblock the Notifications