Latest Updates
-
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்..
இந்த பாகிஸ்தான் ரசிகர் இந்திய அணி வெல்ல உற்சாகப்படுத்துவது ஏன்?
ச்சாச்சா சிக்காகோ என்கிற முகமது பஷீர். பிறப்பால் பாகிஸ்தானியர் ஆனால், இவர் தாய்நாட்டை விட இந்தியாவை அதிகம் நேசிக்கிறார்.
இந்தியா - பாகிஸ்தான் என்பது ஒருசில காரணங்களால் எப்போதுமே ஒரு விரோத நாடு என்ற கண்ணோட்டத்திலேயே பார்க்கப்படுகிறது. அதில், ஒரு காரணமாக திகழ்வது இந்த இரு நாடுகளுக்கிடையே நடக்கும் கிரிக்கெட் போட்டிகள்!
ஒரு யுத்தம் போல பாவிக்கப்படும் இப்படி ஒரு விளையாட்டில். பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் இந்தியாவை நேசிக்கிறார் என்றால், எல்லா கிரிக்கெட் ரசிகர்களுக்கும் தெரியும் அது ச்சாச்சா சிக்காகோ என்கிற முகமது பஷீர் தான் என்று.

யார் இவர்?
ச்சாச்சா சிக்காகோ ஒரு தோனி ரசிகர். மைதானத்தில் இந்திய ரசிகர்களோடு அமர்ந்து இந்தியாவை உற்சாகப்படுத்தி, தோனியை பற்றி இந்திய ரசிகர்களை காட்டிலும் அதிக பெருமையாக பேசுபவர் இவர்.

இந்தியா - பாகிஸ்தான்!
நான் பாகிஸ்தானை விரும்புகிறேன். ஆனால், இந்தியாவை அதை காட்டிலும் மேலாக விரும்புகிறேன். ஆரம்பத்தில் பாகிஸ்தான் தான் வெல்ல வேண்டும் என வேண்டுவேன். ஆனால், இப்போதோ இந்தியா வெல்ல வேண்டும் என்றே அதிகம் பிரார்த்தனை செய்கிறேன்.

மொஹாலி!
2011ல் மொஹாலியில் எனது முதல் இந்திய சுற்று பயணத்தின் போது எனக்கு இந்தியாவில் கிடைத்த அன்பும், காதலும் மிகவும் பெரியது. அதானாலேயே நான் இந்தியாவை மிகவும் நேசுக்கிறேன் என ச்சாச்சா சிக்காகோ கூறுகிறார்.

ஒரு போட்டி கூட...
2011 உலக கோப்பை போட்டியில் இருந்து அதற்கு பிறகு நடந்த ஒரு இந்தியா - [பாகிஸ்தான் போட்டியை கூட முகமது பஷீர் தவறவிட்டதில்லை. நேரடியாக மைதானத்திற்கு சென்று கண்டு வந்துவிடுவார்.

பாதுகாப்பு!
நான் இப்போதெல்லாம் வருடத்திற்கு ஒருமுறையாவது இந்தியா வந்து விடுகிறேன். ஆனால், பாகிஸ்தானுக்கு எப்போதாவது தான் செலவே. பாகிஸ்தானை காட்டிலும், இந்தியாவில் நாம் மிகவும் பாதுகாப்பாக உணர்கிறேன் என்றும் முகமது பஷீர் தெரிவித்துள்ளார்.

மதச்சார்பற்ற அன்பு!
இவர் போல மதசார்பற்ற அன்பு செலுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க துவங்கினால். நாடுகளின் எல்லைகள் வெறும் கோடாக மட்டுமே இருக்கும். மக்களும், மனிதத்தன்மையும் அதிகரித்து வெவ்வேறு நாடுகளுக்கு மத்தியிலான சண்டைகள் குறைந்துவிடும்.



Click it and Unblock the Notifications











