Latest Updates
-
இன்றைய ராசிபலன் 15 மார்ச் 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்கப்போகுதாம்...! -
வார ராசிபலன் (15 March 2026-21 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு நிதி நிலை டபுளாக உயரும்.. -
வெயிலால் முகம் கருமை ஆகக்கூடாதா? அப்ப கற்றாழை ஜெல்லை இப்படி யூஸ் பண்ணுங்க... -
வெறும் 3 பொருள் இருந்தா போதும்.. குளுகுளு-ன்னு சூப்பரான குச்சி ஐஸ் செய்யலாம்.. எப்படி-ன்னு பாருங்க.. -
பங்குனி மாத ராசி பலன் 2026: இந்த 5 ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகம் தேடி வரும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
அடுப்பில்லாம செய்யக்கூடிய அவல் பாயாசம் - செஃப் தீனா ஸ்டைலில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சனிக்கிழமையில் பிறந்தவர்களின் குணமும், எதிர்காலமும் எப்படி இருக்கும் தெரியுமா? -
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க...
நூறு பாகுபலிக்கு இணையாக திகழ்ந்த தமிழ் பேரரசர் பற்றி உங்களுக்கு தெரியுமா?
சோழ சாம்ராஜ்யத்தின் மிக முக்கியமான அரசர்களில் ஒருவர் ராஜேந்திர சோழன். இவர் புரிந்த சாதனைகள் எண்ணில் அடங்காதவை.
இராஜராஜ சோழனின் மகன் இராஜேந்திர சோழன். விஜலாய சோழனின் காலத்தில் தொடங்கிய சோழ சாம்ராஜ்ஜியத்தின் முக்கிய அரசர்களுள் ஒருவராக திகழ்ந்தவர் ராஜேந்திர சோழர்.
இவரது ஆட்சிக் காலத்தில் சோழ சாம்ராஜ்ஜியம் எல்லைகள் கடந்து போர் புரிந்து பெரும் வெற்றிகள் கொண்டன...

கடற்போர்!
இருபது ஆண்டுகள் கடற்போர் புரிந்த மாபெரும் வீர அரசர் ராஜேந்திரா சோழர். அறுபது ஆயிரம் யானை படை, ஒரு லட்சம் பேர் கொண்ட காலாற்படையை வங்கக்கடல் கடந்து சென்று மறு கரையில் நிறுத்திய தருணமே அஞ்சி நடுங்கி தேசங்களை ஒப்படைத்தவர்களும் இருந்தனர். தனது போர் வீரத்தால் அடிப்பணிய வைத்தும் பல தேசங்களை வெற்றி வாகை சூடி சாதித்தார்.

தேசங்கள்!
மலேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர், இந்தோனேசியா, இலங்கை, ஜாவா, சுமத்திரா என வெளி தெற்கு ஆசியாவின் கீழ் நாடுகளை வெற்றிகொண்ட பேரரசன் ராஜேந்திர சோழன்.
Image Source

தமிழ் பேரரசன்!
இந்தியாவின் முதல் பேரரசராக ராஜேந்திர சோழர் திகழ்ந்துள்ளார். தோல்வி என்றால் என்ன? என்ற கேள்வி கேட்கும்படி பல போர்களில் வெற்றிகள் வாரிக்குவித்தவர் ராஜேந்திர சோழன்.
Image Source

கங்கை கொண்டான்!
கங்கை வரை சென்று வெற்றி பெற்று, அங்கிருந்து நீர் கொண்டு வந்து கங்கை கொண்ட சோழ புரத்தை உருவாக்கிய பேரரசர் ராஜேந்திர சோழன்.
Image Source

ஆட்சி பரப்பளவு!
அன்றைய மதராசப்பட்டினம், ஐதராபாத், மைசூர் பகுதிகள் தொட்டு, கீழே ஈழம், மாலத்தீவுகள், பிற தேசங்கள் உட்பட பெரும் பரப்பளவில் ராஜேந்திர சோழன் ஆட்சி செய்து வந்துள்ளார்.
Image Source

33 ஆண்டுகள்!
தான் ஆட்சி செய்து வந்த 33 ஆண்டுகளில் தலை சிறந்த நாடாகவும், மலேயாத் தீபகற்பம், கீழ் கடற்கரை உட்பட்ட பரந்த நாடாக அமைத்து பேரரசாக திகழ்தார். இவர் தான் முடிசூடிய இரண்டே ஆண்டுகளில் தனது மகன் ராஜாதிராஜ சோழனை இளவரசனாக முடிசூட்டு இருவரும் இணைந்து பெரும் ஆட்சி செய்தனர். பல போர்களில் வெற்றி கண்டனர்.
Image Source

பெரும் போர்கள்!
சாளுக்கியர், ஈழம், கங்கை, பாண்டியர்கள், சேரர்கள் என அந்த காலத்தில் வலிமை மிகுந்து காணப்பட்ட அனைத்து ராஜ்ஜியங்களையும் போர் செய்து வென்ற பெருமைக்கு உரியவர் பேரரசர் ராஜேந்திர சோழன்.
Image Source

புனைப்பெயர்கள்!
முடிகொண்ட சோழன், பண்டித சோழன் மற்றும் கங்கை கொண்ட சோழன் போன்றவை இவருக்கு சூட்டப்பட்டு பெரும் கவுரவம் மற்றும் விருதுகளாக திகழ்ந்தன.

புது தலைநகர்!
முக்கியமாக இவற்றுள் கங்கை கொண்ட சோழன் என்பதையே ராஜேந்திர சோழர் பெரும் புகழாக கருதினார். தஞ்சையை மாற்றி கங்கை கொண்ட சோழபுரத்தை தலைநகராக நிறுவினார்.

மெய்க்கீர்த்தி!
ராஜேந்திர சோழன் குறித்த மெய்க்கீர்த்தி..
திருவன்னி வளர விருநில மடந்தையும்
போர்ச்சயப் பாவையுஞ் சீர்த்தனிச் செல்வியுந்
தன்பெருந் தேவிய ராகி யின்புற
நெடிதிய லூழியு ளிடைதுறை நாடும்
தொடர்வன வேலிப் படர்வன வாசியும்
சுள்ளிச் சூழ்மதிற் கொள்ளிப்பாக்கையும்
நண்ணற் கருமுரண் மண்ணைக் கடக்கமும்
பொருகட லீழத் தரசர்த முடியும்
ஆங்கவர் தேவய ரோங்கெழின் முடியும்
முன்னவர் பக்கற் றென்னவர் வைத்த (10)
சுந்தர முடியு மிந்திர னாரமும்
தொண்டிரை யீழ மண்டல முழுவதும்
எறிபடைக் கேரளன் முறைமையிற் சூடும்
குலதன மாகிய பலர்புகழ் முடியும்
செங்கதிர் மாலையும் சங்கதிர் வேலைத்
தொல்பெருங் காவற் பல்பழந் தீவும்
செருவிற் சினவி யிருபத் தொருகால்
அரசுகளை கட்ட பரசு ராமன்
மேவருஞ் சாந்திமத் தீவரண் கருதி
இருத்திய செம்பொற் றிருத்தகு முடியும் (20)
பயங்கொடு பழிமிக முயங்கியில் முதுகிட்
டொளித்த சயசிங்க னளப்பரும் புகழொடு
பீடிய லிரட்ட பாடி யேழரை
யிலக்கமு நவநிதிக் குலப்பெரு மலைகளும்
விக்கிரம விரர் சக்கரக் கோட்டமு
முதிர்பட வல்லை மதுரை மண்டலமும்
காமிடை வளைஇய நாமணைக் கோணமும்
வெஞ்சின வீரர் பஞ்சப் பள்ளியும்
பாசடைப் பழன மாசுணி தேசமும்
அயர்வில்லண் கீர்த்தி யாதிநக ராகவையிற் (30)
சந்திரன் றொல்குலத் திந்திர ரதனை
விளையமர்க் களத்துக் கிளையொடும் பிடித்துப்
பலதனத் தொடுநிறை குலதனக் குவையும்
கிட்டரஞ் செறிமிளை யொட்ட விஷயமும்
பூசுரர் சேருநற் கோசல நாடும்
தன்ம பாலனை வெம்முனை யழித்து
வண்டுறை சோலைத் தண்ட புத்தியும்
இரண சூரனை முரணறத் தாக்கித்
திக்கணை கீர்த்தித் தக்கண லாடமும்
கோவிந்த சந்தன் மாவிழிந் தோடத் (40)
தங்காத சாரல் வங்காள தேசமும்
தொடுகழற் சங்குகொ டடல்மகி பாலனை
வெஞ்சமர் வளாகத் தஞ்சுவித் தருளி
ஒண்டிறல் யானையும் பெண்டிர்பண் டாரமும்
நித்தில நெடுங்கட லுத்தர லாடமும்
வெறிமலர்த் தீர்த்தத் தெறிபுனற் கங்கையும்
அலைகடல் நடுவுட் பலகலஞ் செலுத்திச்
சங்கிராம விசையோத் துங்க வர்ம
னாகிய கடாரத் தரசனை வாகையும்
பொருகடல் கும்பக் கரியொடு மகப்படுத் (50)
துரிமையிற் பிறக்கிய பருநிதிப் பிறக்கமும்
ஆர்த்தவ னகநகர்ப் போர்த்தொழில் வாசலில்
விச்சா திரத்தோ ரணமு மொய்த்தொளிர்
புனைமணிப் புதவமுங் கனமணிக் கதவமும்
நிறைசீர் விசயமுந் துறைநீர்ப் பண்ணையும்
வன்மலை யூரெயிற் றொன்மலை யூரும்
ஆழ்கட லகழ்சூழ் மாயிரு டிங்கமும்
கலங்கா வல்வினை இலங்கா சோகமும்
காப்புறு நிறைபுனல் மாப்பப் பாளமும்
காவலம் புரிசை மேவிலிம் பங்கமும் (60)
விளைப்பந் தூருடை வளைப்பந் தூரும்
கலைத்தக் கோர்புகழ் தலைத்தக் கோலமும்
தீதமர் பல்வினை மாதமா லிங்கமும்
கலாமுதிர் கடந்திற லிலாமுரி தேசமும்
தேனக்க வார்பொழில் மானக்க வாரமும் (65)
தொடுகடற் காவற் கடுமுரட் கடாரமும்
மாப்பொரு தண்டாற் கொண்ட கோப்பரகேசரி வன்மரான
உடையார் ஸ்ரீராசேந்திர சோழதேவர்க்கு யாண்டு..."



Click it and Unblock the Notifications











