Latest Updates
-
வாஸ்து படி வீட்டின் இந்த இடத்தில் செருப்பு வைப்பது உங்கள் வாழ்க்கையில் வறுமையை உண்டாக்குமாம் -
Vastu Tips: வாஸ்துப்படி, வீட்டின் இந்த 4 இடத்தில் கண்ணாடியை வையுங்க.. வீட்டில் செல்வம் இரட்டிப்பாகும்! -
இந்தியாவின் மிகப்பெரிய நிலப்பரப்பை ஆண்ட முதல் அரசர் யார் தெரியுமா? இராஜ ராஜ சோழன் இல்லையாம் -
அக்குள் துர்நாற்றம் அதிகமா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க! -
Kollu Benefits: அடிக்கடி கொள்ளு சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா ஸ்டைல் கீரை தொக்கு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
இந்த 4 ராசிக்காரங்க அதிகாரத்தின் மீது பேராசை கொண்டவர்களாக இருப்பார்களாம் -
அட்சய திருதியை நாளில் உருவாகும் கஜகேசரி யோகம்: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க, உடல் எடை இருமடங்கு வேக வேகத்தில் குறையும்.. -
இன்றைய ராசிபலன் 06 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கஷ்டங்கள் நிறைந்த நாளாக இருக்கும்
ஏ.டி.எம் மெஷின்களில் இந்த கண்ணாடி எதற்காக வைக்கப்பட்டுள்ளது என தெரியுமா?
ஏ.டி.எம் மெஷின்களில் திரைக்கு மேல் ஒரு கண்ணாடி அமைந்திருக்கும் அது எதற்காக வைக்கப்பட்டுள்ளது என உங்களுக்கு தெரியுமா?
பெரும்பாலான ஏ.டி.எம் மெஷின்களில் திரைக்கு மேல் ஒரு வட்ட வடிவிலான கண்ணாடி ஒன்று இடம் பெற்றிருக்கும். அதை பலரும் ரகசிய கேமரா என்றும், அதன் மூலம் யார் பணம் எடுக்க வருகிறார்கள், திருடர்கள் வந்தால் அவர்களை கண்டுபிடிக்க தான் அதை பொருத்தியிருப்பதாக கருதுவார்கள்.

ஆனால், உண்மை அதுவல்ல. அந்த கண்ணாடி பணம் எடுப்பவரின் உதவிக்காக அமைக்கப்பட்ட ஒன்றாகும். அது அகலமாக பின்னாடி இருப்பதை உங்களுக்கு காட்டும் வகையில் இருக்கும்.
இதன் மூலம், நீங்கள் ரகசிய குறியீடு எண் பதிவு செய்யும் போது யாராவது உங்களை பின்னாடி இருந்து வேவு பார்க்கிறார்களா, திருடர்கள் உள்ளே வருகிறார்களா? போன்றவற்றை நீங்கள் பார்த்துக் கொள்ள முடியும்.
இது தவிர ஏ.டி.எம் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் குறித்து இனிக் காணலாம்...

ஏ.டி.எம் என்றால் என்ன?
ஏ.டி.எம் என்பது தானியங்கி பணம் எடுக்கும் மெஷின். உலகம் முழுவதும் ஏறத்தாழ மூன்று மில்லியன் ஏ.டி.எம் மெஷின்கள் உள்ளன. இதன் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது.

முதல் ஏ.டி.எம் மெஷின்?
வியப்பாக தான் இருக்கும் ஆனால், இது தான் உண்மை. உலகின் முதல் ஏ.டி.எம் மெஷின் லண்டனில் உள்ள என்பீல்ட் டவுன் எனும் பகுதியில் 1967-ம் ஆண்டு நிறுவப்பட்டது.

நான்கு இலக்க ரகசிய எண்?
ஏ.டி.எம் மெஷினை கண்டுபிடித்த நபருக்கு "Dyscalculia" எனப்படும் கணிதக்குறைபாடு இருந்தது. அதனால் தான் அவர் நான்கு இழக்க ரகசிய முறையை உட்படுத்தினார்.

பிரேசில்!
பிரேசிலில் நான்கு இலக்க ரகசிய எண் முறை இல்லை. அதற்கு பதிலாக, அந்நபரின் கைரேகை தான் ரகசிய குறியீடாக எடுத்துக்கொள்ள படுகிறது.

இந்தியாவின் முதல் ஏ.டி.எம்?
இந்தியாவின் முதல் ஏ.டி.எம் மெஷின் 1986-ம் ஆண்டு நிறுவப்பட்டது. இது மும்பையின் ஒரு வங்கியில் அமைக்கப்பட்டது.

திருடு போனால்?
ஒருவேளை ஏ.டி.எம் திருடு போனால் என்னவாகும்? என்ற கேள்வி பலரிடம் இருக்கிறது. எல்லா ஏ.டி.எம் மெசின்களும் ஜி.பி.எஸ் சிஸ்டம் கொண்டு இணைக்கப்பட்டுள்ளது. இதனால், ஒரு வங்கியின் ஏ.டி.எம் மெஷினை திருடினால், அது அந்த வங்கிக்கு தகவல் அனுப்பிவிடும்.
இந்த வீடியோ-வ பாருங்க!
ஏ.டி.எம் களில் பொருத்தப்பட்ட கேமராவில் பதிவான காணொளிப்பதிவு. ஏ.டி.எம் திரைக்கு மேல் அமைந்திருக்கும் கண்ணாடி இது போன்ற சம்பவங்களில் இருந்து தப்பிக்க உதவும்.



Click it and Unblock the Notifications











