Latest Updates
-
Solar Eclipse 2026: ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்: 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
சுக்கிரன் சொந்த ராசிக்குள் நுழைவதால் வெற்றிகளையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை ஸ்பெஷல் பரங்கிக்காய் பாயாசம் ரெசிபி - செஞ்சு பாருங்க - செமையா இருக்கும் -
எப்பவும் ஒரே மாதிரி பாஸ்தா செய்யாம, இப்படி முட்டை பொடிமாஸ் பெப்பர் பாஸ்தா செய்யுங்க.. அள்ளும்.. -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை நாளில் மறந்தும் இந்த 7 விஷயங்களை செஞ்சுடாதீங்க.. -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப கவர்ச்சியானவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: ஆகஸ்ட் இறுதியில் இந்த 4 ராசிக்கு செல்வம் குவியப்போகுது! -
Aadi Amavasai 2026: தர்ப்பணம் என்றால் என்ன? ஆடி அமாவாசை அன்று ஏன் அவசியம் தர்ப்பணம் கொடுக்க வேண்டும் -
மூட்டு வலி நீங்க, இரத்தம் ஊற உதவும் முருங்கைக்கீரை கொள்ளு சூப் - எப்படி செய்யணும் தெரியுமா? -
சனிபெயர்ச்சியால் 2027-ல் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
இந்தியாவில் வாழ்ந்த இரத்தக்காட்டேரிகள், ஆதாரங்கள்!
இந்தியாவில் தான் இரத்தக்காட்டேரிகள் தோன்றின என்றால் நம்ப முடிகிறதா? ஆனால், இது குறித்த சில ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. பழைய இந்திய நிலப்பரப்பில் இருந்து தான் இரத்தக்காட்டேரி வகையிலான உயிரினங்கள் ரோமானியா, ரஷ்யா மற்றும் பல இடங்களுக்கு பரவியதாக கருதப்படுகிறது.
பேய் நகரங்கள் என்றழைக்கப்படும் இந்தியாவின் திகிலான இடங்கள்!!
உலகின் முதல் இரத்தக்காட்டேரி உயிரினங்கள் திபெத், சீனா வழியாக தான் பரவின என்றும் சிலர் கூறுகிறார்கள். மேலும், இவ்வாறு தான் மேற்கத்திய நாடுகளுக்கு இரத்தக்காட்டேரிகள் பரவின என்று கூறப்படுகிறது.
பேய்கள் மற்றும் ஆவிகள் பற்றிய வேடிக்கையான 10 தகவல்கள்!!!
இந்த விஞ்ஞான உலகில் இதை எல்லாமா நம்புவது எனிலும், உலகின் பெரும்பாலான கலாச்சாரங்களில் இரத்தம் குடிக்கும் உயிரினங்கள் பற்றிய குறிப்புகள் அவர்களது புராண கதைகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. நமது இந்திய புராண கதைகளிலும் இதுப் போன்ற குறிப்புக்கள் இருக்கின்றன.
மக்கள் இறந்த பிறகு பேயாவதற்கான சில காரணங்கள்!!!
இதன் அடிப்படையில் இந்தியாவில் இரத்தக்காட்டேரிகள் இருந்தது என கூறப்படும் விடயங்கள் குறித்து இனிக் காணலாம்...

நாடோடி பாடல்கள்
நமது இந்தியாவில் இரத்தக்காட்டேரிகள் இருந்தன என்பதற்கான ஆதாரங்களாக பல நாடோடி பாடல்களும், கதைகளும் இருக்கின்றன. மேலும், இரத்தக்காட்டேரிகளில் பல வகைகள் இருந்ததற்கான கூற்றுகளும், கதைகளும் கூட இருக்கின்றன.

வேதாளம்
வேதாளம் என்பது ஓர் பெண் இரத்தக்காட்டேரி எனக் கூறப்படுகிறது. இந்து புராணங்களில் மனித உடலுக்குள் மிருக குணம் அல்லது சக்தி குடியேறும் போது அவை இவ்வாறு மாறுகின்றன என கூறப்படுகிறது.

வேதாளம்
இந்தியாவில் தோன்றியதாக கருதப்படும் இரத்தக்காட்டேரிகளில் வேதாளங்கள் தான் மிகவும் பிரபலமானவை எனவும், இவை குழந்தைகளை கொல்வதையும், கருச்சிதைவுகள் ஏற்படுத்துவதையும், மனிதர்களுக்கு பைத்தியம் பிடிக்க வைக்கவும் செய்யும் என்ற கூற்றுகள் பழங்காலத்தில் கூறப்பட்டுள்ளன.

ராட்சசன்
ராட்சசன் எனும் வார்த்தை சமஸ்கிருத மொழியில் இருந்து வந்த சொல். இதன் பொருள் பேய் அல்லது துர்தேவதை ஆகும். இந்திய புராணங்களில் இவை இரத்தக்காட்டேரி வகையை போன்ற ஓர் உயிரினம் என்பது போல கூறப்பட்டுள்ளது.

ராட்சசன்
ராட்சச உயிரினங்கள் தீங்கு விளைவிக்கும் மற்றும் கொடிய செயல்களை செய்ய முனையும் என்றும். இவைகளுக்கு என தனி தெய்வீக வழிப்பாடு இருக்கிறது மற்றும் இவை இலங்கையில் வாழ்ந்தவை என்றும் நம்பப்படுகிறது.

பிசாசு
பிசாசு என்பது மனித இறைச்சியை உண்ணும் மற்றொரு வகை இரத்தக்காட்டேரி வகை என கூறப்படுகிறது. பொதுவாக இது பெண்மை குணம் கொண்டவை என்றும் கூறப்படுகிறது. இவைகளின் கண்கள் மிகவும் சிவந்தும், நரம்புகள் புடைத்தும் இருக்கும்.

பிசாசு
பிசாசு பொதுவாக இரவு நேரங்களில் தான் வெளிவரும் என பல கதைகளில் கூறப்பட்டிருக்கிறது. பிசாசுகள் கண்ணுக்கு தெரியாமல் மறையும் தன்மை கொண்டவை எனவும், கூடு விட்டு கூடு பாயவும் செய்யும் எனவும் இந்தியாவில் நம்பப்பட்டு வந்தது.

பிசாசு
மேலும், பிசாசுகளை நேரில் கண்டவர்கள் ஒன்பது மாதத்திற்குள் இறந்துவிடுவார்கள் என்ற ஒரு நம்பிக்கையும் முன்பு இருந்துள்ளது.

வேதாளங்கள்
இறந்த பிறகும் உலாவி வரும் தீய ஆவிகளை வேதாளங்கள் என கூறப்படுவது உண்டு. விக்கிரமாதித்தன் போன்ற கதைகளில் தான் இந்த வகை வேதாளங்கள் பற்றி நிறைய கூறப்பட்டுள்ளன.

உலக புராணங்கள்
உலகளவில் அனைத்து கலாச்சார புராணங்களிலும் இரத்தம் உண்ணும் உயிரினங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன. பகுதிகளுக்கு ஏற்றவாறு அதன் பெயர், குணாதிசயங்களில் சில வேறுபாடுகள் இருப்பினும் பொதுவாக அவை மிருக குணம் கொண்டவையாக உருவகுக்கப்பட்டுள்ளன.



Click it and Unblock the Notifications