Latest Updates
-
சப்பாத்திக்கு ஒருடைம் முட்டைக்கோஸ் பச்சை குருமா செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
இன்ஸ்டாகிராம் பயனர்களே உஷார்! உங்கள் தனிப்பட்ட சாட்கள் இனி பாதுகாப்பில்லை? இந்த மாற்றத்தை உடனே கவனிங்க! -
கோடை வெயிலால் உங்க முகம் டல்லடிக்குதா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
வெளிநாட்டில் விவாகரத்தா? குழந்தைகளை பார்க்க முடியாமல் தவிக்கும் தாய்மார்கள் - செலினா ஜெயிட்லியின் உருக்கமான பதிவு! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
வீட்டில் பணவரவு அதிகரிக்கணுமா? அமேசான் சேலில் இந்த வாஸ்து பொருட்களை மிஸ் பண்ணாதீங்க! -
செஃப் வாணி அவர்களின் முருங்கைக்காய் பொரியல் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... செமயா இருக்கும்.. -
Hanta Virus: கோவிட்-19 விட அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் ஹன்டா வைரஸ் - இதன் அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? -
இன்றைய அபிஜித் முகூர்த்தத்தில் இந்த வாஸ்து மாற்றங்களைச் செய்யுங்க… பணவரவு தானாக அதிகரிக்கும்! -
செவ்வாய் உருவாக்கும் விபரீத ராஜயோகம்: மே 11 முதல் இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது!
உங்களை நரகத்திற்கு அழைத்து செல்லும் 14 காரியங்கள் - கருட புராணம்!
நாம் செய்யும் எந்தெந்த காரியங்கள் எல்லாம் நம்மை நரகத்திற்கு அனுப்பும் என்பது பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது.
அந்நியன் எனும் படம் வரும் வரையில் நம்மில் பலருக்கு கருட புராணம் என்றால் என்ன என்பது பற்றி தெரியாது. நாம் செய்யும் செயல்கள் தான் கர்மா. அதில் நல்லது, கெட்டது கூட்டிக்கழித்துப் பார்த்து நமது விதி, அடுத்த ஜென்மம் போன்றவை கணக்கிடப் படுவதாக கூறப்படுகிறது.

ஒருவர் செய்யும் கர்மாவின் ரிசல்ட்டான விதி தான், அடுத்த பிறவி, சொர்க்கம், நரகம் போன்றவை. இதில், என்னென்ன செயல்களில் ஈடுபட்டால் ஒருவர் நேரடியாக நரகத்திற்கு அனுப்பப்படுவார் என கருட புராணத்தில் கூறப்பட்டுள்ளதை பற்றி இனி காண்போம்...

செயல் #1
பிராமணர்கள் (கடவுளுக்கு பணிவிடை செய்பவர்கள் என்பதால்) பசுக்கள், கருவில் இருக்கும் குழந்தை கொலை செய்தல்.

செயல் #2
பெண்களை கொலை செய்தல், பாலியல் வன்முறைக்கு ஈட்படுத்துதல். ஒரு பெண்ணின் வாழ்க்கையில் தீய தாக்கத்தை ஏற்படுத்துதல்.

செயல் #3
ஒருவரது நம்பிக்கையை ஏமாற்றுதல். விஷத்தன்மையான பொருட்களை பயன்படுத்துதல்.

செயல் #4
யாத்திரைக்கு செல்லும் வழியில் நல்ல மக்களை துன்புறுத்துதல், கேவலப்படுத்துதல், ஒரு கலாச்சார புராணங்கள், வேதங்கள் போன்றவற்றை கொச்சைப்படுத்தும் வகையில் நடந்துக் கொள்ளுதல்.

செயல் #5
ஒருவருக்கு இணையில்லாத அல்லது வலிமை அற்றவர்களை துன்புறுத்துதல் நேரடியாக ஒருவரை நரகத்திற்கு கொண்டு செல்லும்.

செயல் #6
வேண்டுமென்றே ஒருவருக்கு நல்ல உணவு மற்றும் நீரை வழங்க மறுப்பது. வீட்டுக்கு வந்தவர்களை வாசலிலேயே வைத்து அனுப்புவது.

செயல் #7
மற்றவர்களிடம் இருந்து பொருட்களை, வாழ்க்கையை, வெற்றியை பறிப்பது.

செயல் #8
கடவுளுக்கு பணிவிடை செய்பவராக இருப்பினும், மற்றவர்களின் துணை மீது ஆசைப்படுவது.

செயல் #9
தங்கள் சுய லாபத்திற்காக விலங்குகளை கொல்வது!

செயல் #10
அரசன், சான்றோர் மக்கள் துணை மீது ஆசைப்படுவது, பெண்ணை இசைக்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்ள நினைப்பது. ஒரு பெண்ணின் விருப்பம் இன்றி அவரை தீண்டுதல். தவறு செய்யாத பெண் மீது அவதூறு கூறுவது.

செயல் #11
பொய் சாட்சியம் கூறுவது, ஒன்றும் அறியாத நபர்களிடம் தீய வகையில் நடந்துக் கொள்வது, உண்மையை விலை பேசுவது.

செயல் #12
மரங்களை வெட்டுவது, விவசாய நிலங்களை அழிப்பது, காடுகளை சூறையாடுவது.

செயல் #13
மரங்களை வெட்டுவது, விவசாய நிலங்களை அழிப்பது, காடுகளை சூறையாடுவது.

செயல் #14
மனைவி, பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்யாமல் இருப்பது. பெற்றோர்களை நிர்கதியாய் விடுவது.



Click it and Unblock the Notifications