Latest Updates
-
சுரைக்காய் தோசையும்.. முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
இன்றைய ராசிபலன் 16 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நஷ்டமும், சவால்களும் நிறைந்த நாளாக இருக்குமாம் -
சூரியன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், வெற்றிகளையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
1 கப் மீல் மேக்கர் இருந்தா இந்த மாதிரி சுக்கா செய்யுங்க - சாதம், சப்பாத்தி எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசி குழந்தைகள் படிப்பில் கெட்டிக்காரர்களாக பெரிய சாதனையாளர்களாக வருவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
4 முட்டை இருந்தா இந்த முட்டை சால்னாவை செஞ்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு டக்கரா இருக்கும் -
மின்விசிறிகளில் ஏன் எப்போதும் மூன்று இறக்கைகள் மட்டுமே உள்ளது தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
1 கப் பாஸ்மதி அரிசி இருந்தா இந்த காஷ்மீர் பேமஸ் யக்னி புலாவை செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
ஜூலை 16-ல் நிகழும் சூரியன்-சந்திரன் அரிய சேர்க்க: இந்த 3 ராசிகளை கோடீஸ்வரராக்க போகுதாம் - உங்க ராசி என்ன? -
இந்த அறிகுறிகளில் ஒன்று உங்கள் வீட்டில் இருந்தாலும் நீங்க பணக்கஷ்டத்தில் சிக்க போறீங்களாம் - சாணக்கிய தந்திரம்
பாம்புகளை பற்றி பலரும் அறியாத திகைப்பூட்டும் தகவல்கள்!
இந்தியாவில் மொத்தம் 230 வகையான பாம்பு இனங்கள் உள்ளன. இவற்றில் சுமார் 50 இனங்களே நச்சுடையவை. சில வகையான பாம்புகளின் விஷத்தன்மை, நரம்பு மண்டலத்தை நேரடியாக தாக்குகின்றது.
இந்த வகையை சேர்ந்ததே நாகப்பாம்பு, பவளப்பாம்பு, கட்டுவிரியன் போன்றவை. வேறு சில பாம்புகளின் நஞ்சு இரத்தக் குழாய்களையும் இரத்த அணுக்களையும் தாக்கி அழித்து இரத்தம் உறைவதையும் நிறுத்தவல்லது. கண்ணாடி விரியன் பாம்பு இந்த வகையை சேர்ந்தது ஆகும்.

தகவல்கள்!
*ஓராண்டுக்கு பாம்புகளால் மட்டும் உலகில் ஒரு லட்சம் பேர் கொல்லப்படுகிறார்கள்.
*பிரேசிலில் இருக்கும் ஓர் தீவிற்கு மக்கள் செல்வதே இல்லை. அங்கு ஐந்து மீட்டர் தூரத்திற்கு ஓர் பாம்பு இருப்பதே இதற்கான காரணம்.
*பாம்புகளும் இரண்டு தலைகளுடன் பிறக்க வாய்ப்புகள் உண்டு. இதில், வேடிக்கை என்னவெனில், இரண்டுமே உணவு உண்ணசண்டையிட்டு கொள்ளும்.

தகவல்கள்!
*உலகின் முதல் பத்து விஷத்தன்மை வாய்ந்த பாம்புகளும் ஆஸ்திரேலியாவில் காணப்படுகின்றன.
*பாம்புகளைவிட தேனீக்களால் தான் மனிதர்கள் அதிகளவில் கொல்லப்படுகின்றனர்.
*பாம்புகளால் அதன் வாயை 150 டிகிரி அளவிற்கு திறக்க முடியும்.

தகவல்கள்!
*பிளாக் மாம்பா எனும் பாம்பு கடித்து உயிர் பிழைத்தவர்கள் யாரும் இல்லை.
*டைட்டநோபோ எனும் பாம்பு தான் உலகிலேயே பெரிய, நீளமான, எடை அதிகமான பாம்பாகும். இது 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த உயிரினம் ஆகும்.
*பாம்புகள் மகுடியின் சப்தத்திற்கு ஏற்ப அசைவதில்லை. பாம்பாட்டியின் உடல் அசைவிற்கு ஏற்ப தான் அசையும்.

தகவல்கள்!
*பாம்புகள் தங்களது நாக்கை வைத்து தான் நுகர்கின்றன.
*பாம்புகளுக்கு கண்ணிமைகள் இல்லை.
*பாம்புகள் திறந்த கண்களுடன் தான் உறங்கும்.

தகவல்கள்!
*அமெரிக்கர்களுக்கு பாம்புகள் என்றால் மிகவும் பயம். 51% அமெரிக்கர்களுக்கு பாம்பு என்றால் பயம்.
*அதிர்வுகளை வைத்து பாம்பு மற்ற விலங்குகளின் வருகையை உணர்கின்றன.
*சில வகை பாம்புகள் இரண்டு ஆண்டுகள் கூட உணவின்றி உயிர்வாழும் திறன் கொண்டிருக்கின்றன.



Click it and Unblock the Notifications