Latest Updates
-
வார ராசிபலன் (12 ஏப்ரல் 2026-18 April 2026) - இந்த வாரம் இந்த 5 ராசிக்காரங்களுக்கு கேட்ட வரம் கிடைக்குமாம் -
மணத்தக்காளி கீரையை இந்த மாதிரி சட்னி செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
வாஸ்து படி வீட்டில் இந்த இடங்களில் கண்ணாடி மாட்டினால் உங்கள் செல்வம் பலமடங்கு பெருகுமாம் -
வெயில் காலத்தில் இந்த உணவுகளை தெரியாம கூட சாப்பிட்ராதீங்க - இல்லனா ரொம்ப கஷ்டப்படுவீங்க -
மங்களூர் ஸ்பெஷல் முளைகட்டிய பாசிப்பயறு குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் குருமா மாதிரியே இருக்கும் -
தமிழ் புத்தாண்டு அன்று உருவாகும் வைத்ருதி யோகம்: இந்த 3 ராசிகளுக்கு மோசமான பலன்களை தரப்போகுது -
இந்தியாவின் முதல் திரைப்படத்தை உருவாக்கியது யார்? அந்த திரைப்படத்தின் பெயர் என்ன தெரியுமா? -
இட்லி, தோசைக்கு ஏற்ற பச்ச மாங்கா வேர்க்கடலை சட்னி - சிம்பிளா எப்படி செய்யணும் தெரியுமா? -
இன்றைய ராசிபலன் 11 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஏமாற்றம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
Tamil New Year 2026 Rasi Palan: தமிழ் புத்தாண்டில் குபேர ராஜயோகம் - திடீர் ஜாக்பாட் யாருக்கு தெரியுமா?
உலகில் கற்பழிப்பு குற்றங்கள் அதிகமாக நடக்கும் டாப் - 10 நாடுகள்!!!
மீண்டும் கற்காலத்திற்கே சென்றுக் கொண்டிருக்கிறோம் நாம். வாழ்க்கைக்கான நெறிமுறைகள் இன்றி. மனிதர்களுக்கான ஒழுக்கம், பண்பு போன்றவற்றை இழந்து, மிருகத்தோடு மிருகமாக கலந்து வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்.
உலகில் வன்முறை தலைவிரித்தாடும் அதிபயங்கர நாடுகள் - 2015
எண்ணெய் வளத்திற்காக பிற நாடுகளை ஒரு பக்கம் துன்புறுத்தும் செயல்கள் நடந்துக் கொண்டிருக்க. மறுப்பக்கம் அந்தந்த நாடுகளுக்குள்ளேயே தலைவிரித்தாடுகிறது கற்பழிப்பு குற்றங்கள். பெண்களுக்கான சமநிலை மறுக்கப்படும் இந்த நாட்டில் உடலுறவு மட்டும் அவர்களிடம் கேட்காமலேயே நடந்தேறிக்கொண்டேயிருக்கிறது.
உலகப் போரின் போது வழங்கப்பட்ட சில கோரமான தண்டனைகள் - திடுக் நடுக் தகவல்கள்!!!
திருமணமே ஆனாலும் கூட மனைவியின் ஒப்புதல் இன்றி அவளை தீண்டுவதும் கூட பாலியல் வன்முறை தான். ஆனால், இங்கு பெரும்பாலான நாடுகளில் கற்பழிப்பு வழக்குகளுக்கு கடுமையான தண்டனைகள் இல்லாததே, இந்த குற்றங்கள் பெரியளவில் நடக்க காரணம்.
உடலுறவுக் கொள்வதில் வெறித்தனமான அடிமையாக இருந்த சில பிரபலங்கள் - "ஓ மை காட்"
இனி, உலகில் கற்பழிப்பு குற்றங்கள் அதிகமாக நடக்கும் டாப் - 10 நாடுகள் பற்றி பார்க்கலாம்...

அமெரிக்கா
சூப்பர் பவர் கொண்ட அமெரிக்காவில் அதிகமாக நடக்கும் குற்றப்பிரிவில் கற்பழிப்பு குற்றமும் இடம் பெற்றிருக்கிறது. அமெரிக்காவில் 99% கற்பழிப்பில் ஈடுபடுவது ஆண்கள் தான். 91% பெண்களும் மீதமுள்ள 9% ஆண்களும் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர்.

இந்தியா
உலக அளவில் இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக கற்பழிப்பு வழக்கள் அதிகரித்து வருவது கொடுமையான விஷயமாக இருக்கிறது. 2012ஆம் வருடத்தில் 24,923 கற்பழிப்பு வழக்கள் பதிவானது. இந்தியாவில் ஒவ்வொரு 22 நிமிடத்திற்கும் ஓர் கற்பழிப்பு சம்பவம் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தென் ஆப்ரிக்கா
கடந்த 2012ஆம் ஆண்டில் மட்டும் தென் ஆப்ரிக்காவில் 65,000 வழக்குகள் பதிவானது. குழந்தைகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கும் நாடுகளில் தென் ஆப்ரிக்கா முதலிடத்தில் இருக்கிறது. கற்பழிப்பு வழக்கிற்கு வெறும் இரண்டு ஆண்டு தான் தண்டனை என்பதால் அங்கு இந்த குற்ற வழக்கள் நிறைய நடக்கிறது.

ஐரோப்பா
வளர்ந்த நாடுகளில் முன்னிலையில் இருக்கும் ஐரோப்பாவில் தான் கற்பழிப்பு வழக்குகளும் அதிகமாக பதிவாகியுள்ளது. இங்கிலாந்தில் மட்டும் ஒவ்வொரு வருடமும் 85,000 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகிறது. வேல்ஸ் பகுதியில் மட்டுமே 40,000 வழக்குகள் பதிவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்வீடன்
ஸ்வீடன் நாட்டில் நான்கில் ஒரு பெண் கற்பழிப்பு குற்றத்திற்கு ஆளாகிறார். வருடா வருடம் ஸ்வீடனில் கற்பழிப்பு சம்பவங்கள் அதிகரிக்கிறது. கடந்த 2009ஆம் ஆண்டில் மட்டுமே 15,700 வழக்குகள் பதிவாகி இருந்தது.

ஜெர்மனி
ஜெர்மனியில் இதுவரை கற்பழிப்பு குற்றத்தினால் மட்டும் 2,40,000 அப்பாவி பெண்கள் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வருடம் மட்டும் இதுவரை 65,07,394 கற்பழிப்பு நிகழ்வுகள் நடந்துள்ளதாக ஓர் ஆய்வு முடிவுகளில் கூறப்பட்டுள்ளது.

பிரான்ஸ்
1980 ஆம் ஆண்டு வரையிலும் பிரான்ஸ் நாட்டில் கற்பழிப்பு ஓர் குற்றமே இல்லை என்ற நிலை தான் இருந்திருக்கிறது. ஓர் ஆய்வில், ஒவ்வொரு ஆண்டிலும் ஏறத்தாழ 75,000 கற்பழிப்பு குற்றங்கள் நிகழ்கிறது. இதில் வெறும் 10% பேர் மட்டுமே குற்றத்தை பதிவு செய்கின்றனர்.

கனடா
கனடாவில் ஒவ்வொரு வருடமும் 4,60,000 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகிறது. இதில் வெறும் 6% வழக்குகள் மட்டுமே போலீஸில் பதிவாகிறது. இதில் கொடுமை என்னவென்றால் 80% கற்பழிப்பு வழக்குகள் வீடுகளில் தான் நிகழ்கிறது.

ஆஸ்திரேலியா
2012ஆண்டு மட்டுமே ஆஸ்திரேலியாவில் 5,12,000 கற்பழிப்பு சம்பவங்கள் நிகழ்கிறது.

டென்மார்க்
டென்மார்க்கில் ஒவ்வொரு வருடமும் 500கும் மேற்பட்ட கற்பழிப்பு சம்பவங்கள் நடக்கிறது. ஏறத்தாழ 52% டென்மார்க் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகின்றனர்.



Click it and Unblock the Notifications











