Latest Updates
-
52000 கோடி ரூபாய் இழப்பீடு செலுத்தப்போகும் பிரபல நிறுவனம் - அதிர்ச்சியளிக்கும் காரணம் என்ன தெரியுமா? -
பொட்டுக்கடலை பூர்ண பணியாரம் - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைகளுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
கஜலக்ஷ்மி யோகம் ஆகஸ்ட் 05-ல் உருவாவதால் புது சொத்துக்களை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 5 அறிகுறிகள் தெரியுதா? அப்ப வைட்டமின் சி குறைபாடு இருக்குன்னு அர்த்தம்.. -
கேரளா ஸ்டைல் மசாலா ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும் -
வக்கீல்களும், நீதிபதிகளும் ஏன் கருப்பு நிற கோட் மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா? -
ஆகஸ்ட் மாத செவ்வாய் பெயர்ச்சி: இந்த 5 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
கார கொழுக்கட்டையும், ஆந்திரா மிளகாய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 30 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிகளை துரதிர்ஷ்டம் விடாமல் துரத்தப்போகுதாம்
உலகப் போரின் போது வழங்கப்பட்ட சில கோரமான தண்டனைகள் - திடுக் நடுக் தகவல்கள்!!!
ஒரு சிலரின் சுயநலத்தினால், நாடுகளை பிடிப்பதற்காக அவர்கள் மூட்டிய தீயில் கருகியது எல்லாம் அப்பாவி உயிர்கள். அணுகுண்டுகளை அறிமுகம் செய்து வைத்த போர் காலம் அது.
இன்றைய உலக சூழல் தான் மிகவும் கொடுமையானது என்று நீங்கள் எண்ணினால், உலக போர் மூண்ட காலங்களை என்னவென்று சொல்வது. ஒரு சிலரின் சுயநலத்தினால், நாடுகளை பிடிப்பதற்காக அவர்கள் மூட்டிய தீயில் கருகியது எல்லாம் அப்பாவி உயிர்கள். அணுகுண்டுகளை அறிமுகம் செய்து வைத்த போர் காலம் அது.
கருட புராணத்தில் கூறப்பட்டுள்ள கொடிய தண்டனைகள்!!!
பிடிப்பட்ட நாட்டு மக்களையும், போர் வீரர்களையும் பல கோரமான தண்டனைகளுக்கு உட்படுத்தியது, போரில் வென்ற நாடுகள். படிக்கும் போதே நெஞ்சை பதற வைக்கும் அந்த கோர தண்டனைகளை எவ்வாறு அன்றைய மக்கள் தாங்கினார் என்று நினைத்தால் இருதயம் கூட நின்றுவிடும்.
நெஞ்சை பதைபதைக்க வைக்கும் உலகின் சில விசித்திரமான சடங்குகள்!!!
இதையெல்லாம் பார்த்தால், உலக போர் நாடுகளை வென்று முடிக்க மூண்டதாக தெரியவில்லை, நாட்டு மக்களை கொன்று குவிக்க மூண்டதாக தான் தெரிகிறது....
உலகையே கலக்கிய இந்திய கடத்தல்காரர்கள் பற்றிய திகிலூட்டும் உண்மைகள்!!!

ஆசன வாயுப் பகுதியில் விஷம் ஏற்றுதல்
ரஷ்யாவின் உயர்க்குடியினர் போர் காலத்தின் போது, குற்றவாளிகள் அல்லது பிடிப்பட்டவர்களுக்கு விஷ வாயுவை ஆசன வாயு பகுதியின் மூலம் உட்செலுத்துதலை கடைப்பிடித்து வந்தனர். மிகவும் விஷத்தன்மை உடைய மீத்தேன், சல்ஃபர், கரி போன்றவை பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

அபாயம்
இவ்வாறு செய்வதால், இதயத்தின் செயல்திறன் குறையும், மூளையில் இருக்கும் செல்கள் சேதமடையும், முடக்குவாதம் ஏற்படும். இதில் கொடுமை என்னவெனில், பெரும்பாலும் இந்த தண்டனை பெண்களுக்கு வழங்கப்பட்டது தான்.

மார்பகங்களை கிழித்தல்
உலகப் போர் சமயத்தில் பெண்களை பல வகைகளில் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தியுள்ளனர். அதில் ஓர் வகை தான் மார்பகங்களை கிழித்தல். இதற்கென ஓர் பிரத்தியோகக் கருவியும் கையாளப்பட்டு வந்துள்ளது. பெண்களின் மார்பகங்களின் உள்ளே துளையிட்டு அறுக்கும் திறன் கொண்டதாய் அந்த கருவி இருந்துள்ளது

கட்டாயக் கருகலைப்பு
இனத்தை அழிக்கும் வகையில் பெண்களுக்கு கட்டாயக் கருகலைப்பும் செய்யப்பட்டுள்ளது.

குத ஊடுருவல்
பெண்களுக்கு வழங்கப்பட்ட கோர தண்டனைகளில் மற்றுமொன்றாய் விளங்குவது குத ஊடுருவல். பெண்களின் பின்பகுதியை வழியாக துன்புறுத்துதல். பல பெண்கள் இவ்வகையில் துன்புறுத்தப்பட்டுள்ளனர்.

தொண்டை மற்றும் கழுத்தை அறுத்தல்
நாய்க்கு கட்டும்படியான ஓர் பெல்ட்டில், தொண்டை மற்றும் கழுத்தை குத்தும் வகையிலான இரு கூர் முனைகள் கொண்ட கத்தி இணைக்கப்பட்டிருக்கும். சிறைவாசி கழுத்தை கொஞ்சம் அசைத்தாலோ, விடுபட நினைத்தாலோ அது தொண்டை மற்றும் கழுத்தை அறுத்துவிடும். பல நாட்கள் இதில் கட்டப்பட்டு அமர்த்தப்பட்டவர்கள் நிறைய பேர் இருக்கின்றனர்.

பிறப்புறுப்பு வதை
இதற்கென ஓர் தனி கருவி இருந்தது, இதை, வாய், ஆசன பகுதி, பெண்ணுறுப்பு பகுதிகளில் உள்ளே நுழைத்து, ஓர் முனையில் இருக்கும் திருகாணியை திருகினால், முன் பகுதியில் உள்ளே சென்ற முனை தாமரை இதழ்கள் போல வாய் திறக்கும். அப்போது, வாய், பிறப்புறுப்பு போன்ற பகுதிகள் பிகுந்த வலியுடன் அகல திறக்கப்படும். இம்மாதிரியான கோர தண்டனைகளும் கூட வழங்கப்பட்டுள்ளது.
Image Courtesy

கழுத்தை நெரிக்கும் தண்டனை
ஸ்பெயின் நாட்டில், போர் குற்றவாளிகளை ஓர் நாற்காலியில் அமர்த்தி கை, கால்களை இரும்பு வளையங்களால் கட்டிவைத்து, அவர்களது கழுத்து ஓர் இரும்பு வளையத்தால் நெருக்குவார்கள். நெருக்கும் போது, இருப்பக்கமும் கழுத்து நெருக்கப்பட்டு இரத்தம் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற ஆரம்பிக்கும். மிகவும் வதைத்து கொல்லும் முறையாக இது இருந்தது.
Image Courtesy

எலி தாக்குதல்
நமது இந்திய சினிமாவில் சில முறை தான் பார்த்தது தான். உலக போரின் காலகட்டத்தில், சிறைப்படுத்தப்பட்ட நபரை ஓர் இருட்டு அறையில் அடைத்து, பல நாட்கள் உணவின்றி வைக்கப்பட்ட எலிகளை அந்த அறைக்குள் அவிழ்த்துவிடுவர். அந்த அறையின் வெப்பம் அதிகரிக்க செய்யப்படும். இதனால், வெப்பம் மற்றும் பசியின் காரணத்தினால், சிறைவாசியை அந்த எலிகள் கடித்து கொதறிவிடும்.

வரலாறு
ஸ்காண்டிநேவிய நாடுகள் மற்றும் ஆப்ரிக்க மாநிலங்களில் இந்த தண்டனை மக்கள் முன்னிலையில் இழைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கால் விரல்களை துண்டித்தல்
நகங்களை பிடுங்குதல், கால் விரல்களை கொடூரமாக துண்டித்தல் மற்றும் இவை தொற்றுகள் ஏற்படும் வகையில் தண்டித்தல் போன்றவை உலக போர் காலகட்டத்தில் வளங்குப்பட்டு வந்த கோரமான தண்டனைகளில் இருந்து வந்துள்ளது. விரல்களை அறுத்து எடுப்பது உச்சகட்ட தண்டனையாக இருந்துள்ளது.



Click it and Unblock the Notifications