Latest Updates
-
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, தன் பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்.. -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும்
இந்தியர்களால் பொறுமை காக்க முடியாத சில வேடிக்கையான விஷயங்கள்!!!
இந்தியர்கள், சுழியத்தை கண்டுபிடித்து கணக்கை முடிவிலி ஆக்கியவர்கள். நாசாவில் முக்கியமான பொறுப்புகளில் பணிபுரியும் எராலமானவர்களில் அதிகமானவர்கள் இந்தியர் என்ற கூற்று இருக்கிறது. ஈ-மெயிலில் இருந்து, போட்டோஷாப் வரை அனைத்திலும் இந்தியர்களின் பங்கு இருக்கிறது.
இவிங்கெல்லாம் ஐ.ஐ.என்'ல படிச்சிருந்தா என்ன படிச்சிருப்பாங்க!!! சும்மா உலலாச்சுக்கும்!!!!
இவர்கள் இவ்வளவு பொறுமையாக சாதித்ததால், இந்தியர்கள் பொறுமைசாலி என யாரும் தீர்மானம் செய்துவிட முடியாது. ஏனெனில், இந்தியர்களால் பொறுமையாக இருக்க முடியாத விஷயங்களும் கூட பட்டியலில் அடங்காது. அவற்றில் சிலவற்றை இனிக் காண்போம்...
இந்திய மக்கள் விரும்பி சாப்பிடும் சில விசித்திர உணவுகள்!!!

திருமண பந்தி
திருமணத்திற்கு வருபவர்கள் நிஜமாகவே, வாழ்த்த வருகிறார்களா அல்ல வைத்த மொய் பணத்திற்கு சாப்பிட வருகிறார்களா என்ற எண்ணம் வரும்படி, நம்ம ஆட்கள் பொறுமையாக இருக்க மாட்டார்கள். ஒருவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, அவருக்கு பின்னாடி நின்று இடம் பிடிப்பார்கள்.

போக்குவரத்து இடைஞ்சல்
டிராபிக் ஜாம் ஆனால், நம்ம ஆட்கள் வெகுண்டெழுந்து விடுவார்கள். ஆனால், பெரும்பாலும் யாரும் டிராபிக் ரூல்ஸை பின்பற்ற மாட்டார்கள். இது தான் பல டிராபிக் ஜாம் ஆகவே காரணமாக இருக்கின்றது.

சாலையில் மூத்திரம் கழிப்பது
ஆத்திரத்தை கூட அடக்க முடியும் ஆனால், மூத்திரத்தை அடக்குவது கடினம் என்பார்கள். இதில், அடக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் இந்தியர்களின் அகராதியிலேயே இல்லை, "உச்சா வந்தா, செவுரு ஓரமா பீச்சி அடுச்சுட்டு போயின்னே இருப்போம்'ல.."

குழந்தை பெற்றுக்கொள்வது
இந்தியர்களை பொறுத்தவரை திருமணம் ஆன பத்தாவது மாதத்தில் குழந்தை பெற்றுவிட வேண்டும். இல்லையேல், அந்த பொண்ணுக்கு எதாச்சும் பிரச்சனையோ, ஒருவேளை பையன் தான் காரணமோ இருப்பானோ. ரெண்டு பேருக்கும் ஒத்துபோகல போல.. என்று பேசிக்கொண்டே இருப்பார்கள்.

பணம் செலவு செய்தல்
இந்தியர்களில் தான், தனக்கு என்ன வேண்டும் என்பதை உணர்ந்து வாங்கியதை விட, பக்கத்து வீட்டுக்காரன் வாங்கிவிட்டான், உறவுக்காரன் வாங்கிவிட்டான் என்று வெறும் பகட்டிற்கு பொருள் வாங்கும் முறை இருக்கிறது. கடைசியில் கடனாளியாக மாறுவது தான் மிச்சம்.

துணி மடிப்பது
இந்திய ஆண்களுக்கு தங்களது துணியை மடித்து வைக்க வேண்டும் என்றால் உயிரே போய்விடும். பெரும்பலும், அம்மாவும், மனைவி தான் மடித்து வைப்பார்கள். தனது துணியை மடித்து வைக்கவே இந்திய ஆண்களுக்கு பொறுமை இருப்பது இல்லை. சுருட்டி, கசக்கி திணித்து வைத்துவிட்டு சென்றுவிடுவார்கள்.

மாமியார் மருமகள் சண்டை
இது இந்திய ஆண்களின் பொறுமையை சோதிக்கும் அஸ்திரம். மாமியார் மருமகள் சண்டையை பொறுத்துக்கொள்ளும் அளவுக்கு எந்த இந்திய ஆணுக்குமே பொறுமை கிடையாது.

ப்ராக்ரஸ் கார்டு
இந்திய ஆண்களுக்கு தாங்கள் வாங்கிய மதிப்பெண்ணை அப்பாவிடம் காட்டி, அடி, உதை, திட்டு வாங்கி, கெஞ்சி கூத்தாடி கையெழுத்து வாங்கும் அளவிற்கு பொறுமை இல்லாததால் தான் தாங்களே இறங்கி அப்பாவின் கையெழுத்தை போட்டுவிடுகின்றனர்.



Click it and Unblock the Notifications