Latest Updates
-
வாஸ்து படி வீட்டில் இந்த இடங்களில் கண்ணாடி மாட்டினால் உங்கள் செல்வம் பலமடங்கு பெருகுமாம் -
வெயில் காலத்தில் இந்த உணவுகளை தெரியாம கூட சாப்பிட்ராதீங்க - இல்லனா ரொம்ப கஷ்டப்படுவீங்க -
மங்களூர் ஸ்பெஷல் முளைகட்டிய பாசிப்பயறு குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் குருமா மாதிரியே இருக்கும் -
தமிழ் புத்தாண்டு அன்று உருவாகும் வைத்ருதி யோகம்: இந்த 3 ராசிகளுக்கு மோசமான பலன்களை தரப்போகுது -
இந்தியாவின் முதல் திரைப்படத்தை உருவாக்கியது யார்? அந்த திரைப்படத்தின் பெயர் என்ன தெரியுமா? -
இட்லி, தோசைக்கு ஏற்ற பச்ச மாங்கா வேர்க்கடலை சட்னி - சிம்பிளா எப்படி செய்யணும் தெரியுமா? -
இன்றைய ராசிபலன் 11 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஏமாற்றம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
Tamil New Year 2026 Rasi Palan: தமிழ் புத்தாண்டில் குபேர ராஜயோகம் - திடீர் ஜாக்பாட் யாருக்கு தெரியுமா? -
30 ஆண்டுக்கு பின் சனிபகவான்-புதன் மீன ராசியில் இணைவதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் -
அட்டகாசமான கொத்தமல்லி மாங்காய் சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க
இந்தியர்களால் பொறுமை காக்க முடியாத சில வேடிக்கையான விஷயங்கள்!!!
இந்தியர்கள், சுழியத்தை கண்டுபிடித்து கணக்கை முடிவிலி ஆக்கியவர்கள். நாசாவில் முக்கியமான பொறுப்புகளில் பணிபுரியும் எராலமானவர்களில் அதிகமானவர்கள் இந்தியர் என்ற கூற்று இருக்கிறது. ஈ-மெயிலில் இருந்து, போட்டோஷாப் வரை அனைத்திலும் இந்தியர்களின் பங்கு இருக்கிறது.
இவிங்கெல்லாம் ஐ.ஐ.என்'ல படிச்சிருந்தா என்ன படிச்சிருப்பாங்க!!! சும்மா உலலாச்சுக்கும்!!!!
இவர்கள் இவ்வளவு பொறுமையாக சாதித்ததால், இந்தியர்கள் பொறுமைசாலி என யாரும் தீர்மானம் செய்துவிட முடியாது. ஏனெனில், இந்தியர்களால் பொறுமையாக இருக்க முடியாத விஷயங்களும் கூட பட்டியலில் அடங்காது. அவற்றில் சிலவற்றை இனிக் காண்போம்...
இந்திய மக்கள் விரும்பி சாப்பிடும் சில விசித்திர உணவுகள்!!!

திருமண பந்தி
திருமணத்திற்கு வருபவர்கள் நிஜமாகவே, வாழ்த்த வருகிறார்களா அல்ல வைத்த மொய் பணத்திற்கு சாப்பிட வருகிறார்களா என்ற எண்ணம் வரும்படி, நம்ம ஆட்கள் பொறுமையாக இருக்க மாட்டார்கள். ஒருவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, அவருக்கு பின்னாடி நின்று இடம் பிடிப்பார்கள்.

போக்குவரத்து இடைஞ்சல்
டிராபிக் ஜாம் ஆனால், நம்ம ஆட்கள் வெகுண்டெழுந்து விடுவார்கள். ஆனால், பெரும்பாலும் யாரும் டிராபிக் ரூல்ஸை பின்பற்ற மாட்டார்கள். இது தான் பல டிராபிக் ஜாம் ஆகவே காரணமாக இருக்கின்றது.

சாலையில் மூத்திரம் கழிப்பது
ஆத்திரத்தை கூட அடக்க முடியும் ஆனால், மூத்திரத்தை அடக்குவது கடினம் என்பார்கள். இதில், அடக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் இந்தியர்களின் அகராதியிலேயே இல்லை, "உச்சா வந்தா, செவுரு ஓரமா பீச்சி அடுச்சுட்டு போயின்னே இருப்போம்'ல.."

குழந்தை பெற்றுக்கொள்வது
இந்தியர்களை பொறுத்தவரை திருமணம் ஆன பத்தாவது மாதத்தில் குழந்தை பெற்றுவிட வேண்டும். இல்லையேல், அந்த பொண்ணுக்கு எதாச்சும் பிரச்சனையோ, ஒருவேளை பையன் தான் காரணமோ இருப்பானோ. ரெண்டு பேருக்கும் ஒத்துபோகல போல.. என்று பேசிக்கொண்டே இருப்பார்கள்.

பணம் செலவு செய்தல்
இந்தியர்களில் தான், தனக்கு என்ன வேண்டும் என்பதை உணர்ந்து வாங்கியதை விட, பக்கத்து வீட்டுக்காரன் வாங்கிவிட்டான், உறவுக்காரன் வாங்கிவிட்டான் என்று வெறும் பகட்டிற்கு பொருள் வாங்கும் முறை இருக்கிறது. கடைசியில் கடனாளியாக மாறுவது தான் மிச்சம்.

துணி மடிப்பது
இந்திய ஆண்களுக்கு தங்களது துணியை மடித்து வைக்க வேண்டும் என்றால் உயிரே போய்விடும். பெரும்பலும், அம்மாவும், மனைவி தான் மடித்து வைப்பார்கள். தனது துணியை மடித்து வைக்கவே இந்திய ஆண்களுக்கு பொறுமை இருப்பது இல்லை. சுருட்டி, கசக்கி திணித்து வைத்துவிட்டு சென்றுவிடுவார்கள்.

மாமியார் மருமகள் சண்டை
இது இந்திய ஆண்களின் பொறுமையை சோதிக்கும் அஸ்திரம். மாமியார் மருமகள் சண்டையை பொறுத்துக்கொள்ளும் அளவுக்கு எந்த இந்திய ஆணுக்குமே பொறுமை கிடையாது.

ப்ராக்ரஸ் கார்டு
இந்திய ஆண்களுக்கு தாங்கள் வாங்கிய மதிப்பெண்ணை அப்பாவிடம் காட்டி, அடி, உதை, திட்டு வாங்கி, கெஞ்சி கூத்தாடி கையெழுத்து வாங்கும் அளவிற்கு பொறுமை இல்லாததால் தான் தாங்களே இறங்கி அப்பாவின் கையெழுத்தை போட்டுவிடுகின்றனர்.



Click it and Unblock the Notifications











