Just In
- 17 min ago இந்த 4 ராசிக்காரங்க எப்போதும் மற்றவர்களுக்கு ரகசியமாக உதவும் பாதுகாப்பு தேவதைகளாக இருப்பார்களாம்...!
- 1 hr ago தினமும் இட்லி தோசை செய்யாம.. பாஸ்தா இருந்தா இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க..
- 5 hrs ago Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- 10 hrs ago மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
Don't Miss
- Finance மத்திய நிதியமைச்சகம் முக்கிய அறிவிப்பு.. அதுவும் எலான் மஸ்க் இந்தியா வரும் நேரத்தில்.. வாவ்..!
- News நாளை வாக்கு பதிவு: ஸ்டாலின், எடப்பாடி தலைமைக்கு அக்னி பரீட்சை ஏன் தெரியுமா?
- Movies பெரிய முதலையிடம் மாட்டிக் கொண்டு முழிக்கும் சின்ன மீன்கள்.. பேராசை பெருநஷ்டமாகிடுச்சே!
- Sports தோனியிடம் கற்க ஒன்றுமில்லை.. முஸ்தஃபிசுர் ரஹ்மானுக்கு அழைப்பு.. வார்த்தையை விட்ட பிசிபி நிர்வாகி!
- Technology எப்படி புதுசு புதுசா யோசிக்கிறாங்க.. Zomato அறிமுகம் செய்த புதிய சேவை.. என்ன தெரியுமா?
- Automobiles ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
புது ஆடைகள் அணியும் போது நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய விஷயங்கள்!!!
புது ஆடைகள் என்றாலே நம் வாழ்க்கையில் மிகுந்த முக்கியத்துவத்தை பெறுகிறது. விசேஷங்களின் போது தான் பலரும் புது ஆடைகளை அணிகிறார்கள். இருப்பினும் அனைவரையும் ஈர்ப்பதற்காக சிலர் புது ஆடைகளை அணிகிறார்கள்.
ஆனால் புது ஆடைகளை அணிவதற்கு முன்பு நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியவை சில உள்ளது. இதனால் அனைத்து வகையான வியாதிகள், எதிர்மறையான ஆற்றல் திறன்கள் மற்றும் தீய நோக்கங்களில் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம். புது ஆடைகளை அணியும் போது நீங்கள் செய்ய வேண்டியவைகளைப் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்...
* புது ஆடைகளை அணியும் போது சிலர் ஏதாவது நோய்வாய் படுவார்கள் அல்லது ஏதேனும் பிரச்சனையை சந்திப்பார்கள். அப்படி திடீரென அவர்கள் நோய்வாய் பட்டால், அது எதிர்மறை ஆற்றல் திறனால் தான் என நம்புவார்கள். இவ்வகையான எதிர்மறை ஆற்றல் திறன்களில் இருந்து ஒருவர் தப்பிக்க, புது ஆடைகளை அணியும் போது நாம் ஒரு சின்ன விஷயத்தை நினைத்துக் கொள்ள வேண்டும். புது ஆடைகளை அணிவதற்கு முன்பாக அதை கண்டிப்பாக ஒரு முறை துவைக்க வேண்டும். அப்படி செய்வதால் ஆடைகளில் உள்ள அழுக்குகள் எல்லாம் நீங்கும். பொதுவாகவே ஆடைகளை வாங்கும் போது பலரும் அதனை அணிந்து பார்ப்பார்கள். அதனால் நீங்கள் வாங்கும் ஆடையை அதற்கு முன்பாக பலரும் அணிந்து பார்த்திருக்கலாம் அல்லவா? அதனால் புது ஆடைகளை அணிவதற்கு முன்பாக அதை துவைப்பது நல்லது.
* நீங்கள் வாங்கியிருக்கும் புது ஆடைகளை இதற்கு முன் யாரெல்லாம் அணிவித்து பார்த்துள்ளார்கள் என்பது உங்களுக்கு தெரியாது. அவர்களில் சிலருக்கு சில வியாதிகள் அல்லது சரும நோய்கள் இருந்திருக்கக்கூடும். அப்படிப்பட்ட துணிகளை நீங்கள் துவைக்காமல் அணிந்தால், நீங்களும் நோய்வாய் படலாம். அணிவதற்கு முன்பு புது ஆடையை துவைக்க விருப்பமில்லை என்றால், அதை அணிவதற்கு முன்பு சூரிய ஒளியிலாவது சிறிது நேரம் அதனை காட்டவும்.
* உங்கள் பழைய ஆடைகளை கழிக்க போகிறீர்கள் என்றால் எப்போதுமே அதனை சற்று கிழித்து விட்ட பிறகே அதனை கழிக்க வேண்டும். இதனால் உங்கள் ஜாதகத்தில் உள்ள கிரக தோஷங்கள் குறையும். உங்கள் ஆடைகளை தானமாக அளித்தீர்கள் என்றால், அதனை பெற்றுக் கொண்டவர்கள் அதனை கண்டிப்பாக அணிகிறார்களா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இது உங்களுக்கு உதவியை இருக்கும்.
* புது ஆடைகளோடு சில நல்ல சகுனங்களும், கெட்ட சகுனங்களும் சம்பந்தப்படுத்தபடும். ஒருவர் புது ஆடை அணியும் போது, அது கிழிந்து விட்டாலோ அல்லது தீயில் பட்டு விட்டாலோ அதனை ஒரு கெட்ட சகுனமாக கருதுவர். அப்படியானால் உங்களுக்கு ஏதோ பிரச்சனை ஏற்பட போகிறது என்பதை சுட்டிக்காட்டும் அறிகுறியாக இது கருதப்படும்.
* ஆடைகள் வாங்குவதற்கு உகந்த நாளாக வெள்ளிக்கிழமை கருதப்படுகிறது. சனிக்கிழமைகளில் புது ஆடைகள் வாங்குவதை தவிர்க்கவும். அதே போல் ஞாயிறுக்கிழமைகளில் புது ஆடைகளை அணியாதீர்கள்.