குழந்தைகளை கண்காணிப்பதற்காக ஃபேஸ்புக்கிற்கு தாவும் பெற்றோர்கள்!

By Boopathi Lakshmanan

இன்றைய நாட்களில், ஒரு மனிதரைப் பற்றி உங்களுக்கு ஓரளவு மட்டுமே தெரியும், ஆனால் மேலும் பல விபரங்களை தெரிந்து கொள்ள நீங்கள் ஆசைப்படுகிறீர்கள் என்றால், உங்கள் மனதிற்கு முதலில் வருவது ஃபேஸ்புக் தான். ஃபேஸ்புக் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. ஒரு குறிப்பிட்ட வயதை சேர்ந்தவர்கள் மட்டும் தான் ஃபேஸ்புக் பயன்படுத்தலாம் என்பதையும், தாண்டி அனைவரையும் கவர்ந்த சமூக வலைத்தளமாக ஃபேஸ்புக் உள்ளது.

தற்போதைய ஃபேஸ்புக் பயனாளர்களுக்கு வயது வரம்புகள் எதுவும் இல்லை. அதிலும், பிள்ளைகளைப் பெற்றவர்கள் பலரும், தங்களுடைய குழந்தைகளை கவனித்துக் கொள்ளும் விதமாக, ஃபேஸ்புக்கில் உறுப்பினர்களாக சேர்ந்து வருவது இந்த சமூக வலைதளத்தின் புதிய பரிணாமமாக உள்ளது.

உங்களுடைய பெற்றோர்கள் ஃபேஸ்புக்கில் இருப்பது உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் ஃபேஸ்புக்கில் நுழைந்தவுடன், உங்களுடைய தாய் அல்லது தந்தையின் நண்பருக்கான கோரிக்கை வரவேற்றால், உங்களுக்கு எப்படி இருக்கும்? இந்த சூழலுக்கு தயாராகிக் கொள்ளுங்கள். இவ்வாறு நிகழ்வதற்கு பின்னணியில் என்ன காரணம் உள்ளது என உங்களுக்குத் தெரியுமா? ஃபேஸ்புக்கில் பெற்றோர்கள் சேர்வது, 'சாட்' செய்யவோ, மற்றவர்களுடன் பழகவோ அல்லது புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளவோ இல்லை. இதற்கு மாறாக, தங்களுடைய குழந்தைகளின் நடவடிக்கைகளை அவர்கள் கவனிக்க, ஃபேஸ்புக்கை ஒரு கருவியாக பயன்படுத்துகிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பெற்றோர்களே நண்பர்கள்

பெற்றோர்களே நண்பர்கள்

ஃபேஸ்புக்கில் உறுப்பினராக உள்ள பெற்றோர்கள் பலரும், தங்களுடைய குழந்தைகளுடன் ஃபேஸ்புக் நண்பர்களாக உள்ளனர்.

விவரங்களை அறிய...

விவரங்களை அறிய...

வாரத்திற்கு ஒருமுறையாவது தங்களுடைய குழந்தைகளின் விபரங்களை அவர்கள் பார்க்கிறார்கள்.

குழந்தைகளின் நிலையை தெரிந்து கொள்ள...

குழந்தைகளின் நிலையை தெரிந்து கொள்ள...

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் நிலையை அவ்வப்போது பரிசோதித்துக் கொள்கிறார்கள். அவர்களுடைய வாழ்க்கையில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை இது வெளிப்படுத்துகிறது.

போட்டோக்களைப் பார்க்க...

போட்டோக்களைப் பார்க்க...

தங்களுடைய குழந்தைகள் 'டாக் (Tag)' செய்திருக்கும் புகைப்படங்களை பார்க்க பெற்றோர்கள் மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள். மேலும் மிகவும் மோசமாகவோ அல்லது சங்கோஜப்படுத்தும் வகையிலோ இருக்கும் போட்டோக்களுக்கு, கமெண்ட் கொடுப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள் இவர்கள்.

குறிப்பு

குறிப்பு

தங்களுடைய குழந்தையைப் பற்றிய கவலையினால் தான் பெற்றோர்கள் இவ்வாறு செய்கிறார்கள். அவர்கள் எதையாவது போஸ்டிங் செய்தால், அது தவறானதாக தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. குழந்தைகளுக்கு சிறிதளவு சுதந்திரத்தை கொடுக்கும் அதே நேரத்தில், அவர்கள் மீது ஒரு கண் வைத்திருப்பதும் நல்லது தான். அதே நேரம், அடிக்கடி கமெண்ட் கொடுத்து அவர்களுடைய தனிமையை தொந்தரவு செய்தால், அந்த பழக்கம் பெற்றோர்-குழந்தை உறவில் தவறான விளைவுகளையே ஏற்படுத்தும்.

நீங்கள் எதையாவது சொல்ல வேண்டும் என்று நினைத்தால், கீழே தெரியும் கமெண்ட் பாக்ஸ்-ல் உங்களுடைய கருத்துக்களை கொடுக்கவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion