Latest Updates
-
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகியுள்ள சமசப்தக் யோகம்: இன்று முதல் இந்த 4 ராசிக்கு வெற்றியும், பணமும் குவியும்! -
கொத்தமல்லி மாங்காய் சாதமும், உருளைக்கிழங்கு வறுவலும் - 15 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாருங்க.. -
உஷார்.. இந்த 5 உணவுகள் ஒருவரது ஆயுளை பாதியாக குறைக்குமாம்.. எச்சரிக்கும் டாக்டர். பிள்ளை! -
கடகம் செல்லும் சுக்கிரன்: ஜூன் 08 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது.! -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை குறையும், நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும் இருப்பீங்க.. -
இன்றைய ராசிபலன் 04 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு நல்ல செய்தி தேடிவருமாம் -
குருபெயர்ச்சியால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 4 ராசிகளுக்கு கூரையை பிச்சுட்டு அதிர்ஷ்டம் கொட்டப்போகுதாம் -
10 வரமிளகாயும், சின்ன வெங்காயமும் இருந்தா இந்த கர்நாடகா கெம்பு சட்னியை அரைங்க - சுருக்குனு சூப்பரா இருக்கும் -
பாபா வாங்காவின் கணிப்பு படி 2026-ன் பிற்பகுதியில் உலகில் என்னென்ன சம்பவங்கள் நடக்கப்போகுது தெரியுமா? -
டெல்லியை ஆண்ட முதல் சுல்தான் யார்? அவர் எந்த வம்சத்தை சேர்ந்தவர் தெரியுமா?
இதுல நீங்க எந்த மாதிரி கையை மடக்கி நிப்பீங்க-ன்னு சொல்லுங்க... உங்கள பத்தின ஒரு விஷயத்தை சொல்றோம்...
Personality Test: ஒருவரது குணாதிசயங்களை பல வழிகளில் அறியலாம். அதுவும் ஒருவரது உடல் அம்சங்கள் மற்றும் உட்காரும் விதம், நிற்கும் விதம், நடப்பது, பேசுவது, சாப்பிடுவது, ஏன் கைகளை மடக்கி நிற்பதைக் கொண்டு, அவரது குணாதிசயங்களை அறிய முடியும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உடல்மொழி நிபுணர்கள் ஒருவர் எப்படிப்பட்டவர் என்பதை, கைகளை மடக்கும் விதத்தைக் கொண்டு ஆய்வு செய்தனர். அதில் கைகளை மடக்கும் ஒவ்வொரு விதமும் வெவ்வேறு அர்த்தங்களைக் கொண்டுள்ளன.

கைகளை மடக்கி நிற்பதில் நான்கு விதங்கள் உள்ளன. சிலர் கைகளை முன்புறமாக கட்டி நிற்பார்கள், இன்னும் சிலர் கைகளை பின்புறமாக கட்டி நிற்பார்கள், இதுப்போன்று இன்னும் இரண்டு விதங்கள் உள்ளன.
கீழே கைகளை மடக்கும் நான்கு விதங்களைப் பற்றியும், ஒவ்வொன்றும் எந்த மாதிரியான குணாதிசயங்களை வெளிப்படுத்துகின்றன என்பதையும் காண்போம். உங்கள் குணாதிசயங்களை நீங்கள் அறிய விரும்பினால், தொடர்ந்து படித்து பாருங்கள்.
விதம் #1
நீங்கள் படத்தில் காட்டப்பட்டவாறு, ஒற்றைக் கையை மட்டும் மடக்கி நிற்பவரானால், அது ஒருவித பதட்டத்துடன் இருப்பதைக் குறிக்கிறது. ஒரு கூட்டத்தில் இருக்கும் போது ஒருவர் இந்த விதத்தில் நின்றால், அவர் தங்களைத் தாங்களே ஆறுதல் படுத்த முயற்சிக்கிறார் அல்லது பதட்டத்துடன் இருப்பதை வெளிப்படுத்தாமல் இருக்க முயற்சிக்கிறார் என்று அர்த்தம். இந்த மாதிரி நிற்பது ஒருவித பாதுகாப்பின்மை, சந்தேகம், பதட்டம், மன அழுத்தம், கூச்சம் போன்றவை இருப்பதை உணர்த்துகிறது. இப்படிப்பட்ட நிலையில் நிற்பவர்கள், சமூக ரீதியாக மோசமானவர்கள் அல்லது உள்முக சிந்தனை கொண்டவர்கள்.
விதம் #2
படத்தில் காட்டப்பட்டவாறு, இரண்டு கைகளையும் முன்புறமாக பிடித்துக் கொண்டு நின்றால், அத்தகையவர்கள் பதட்டத்துடன் இருப்பதை வெளிப்படுத்துகின்றன. பொதுவாக ஆண்கள் தாங்கள் பதட்டத்துடன் இருப்பதை வெளிப்படுத்த விரும்பமாட்டார்கள். ஆனால் இந்த நிலையில் நிற்பார்கள். உடல் மொழியின் படி, இது ஒரு நம்பிக்கையான நிலை அல்ல. வழக்கமாக பாதுகாப்பற்ற உணர்வு உள்ளவர்கள் தான் இந்த நிலையில் நிற்பார்கள். எனவே நீங்கள் நம்பிக்கையுடனும், உறுதியுடனும் இருக்க விரும்பினால், இந்த விதத்தில் நிற்பதைத் தவிர்க்க வேண்டும்.
விதம் #3
படத்தில் காட்டப்பட்டவாறு நீங்கள் பின்புறமாக கைகளைக் கட்டி நிற்பவரானால், அது நீங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் அல்லது என்ன செய்கிறார்கள் என்பதைப் பற்றி கவலைப்படாதவர்கள் என்பதை வெளிப்படுத்துகிறது. அதுவும் கைகளை லேசாக பிடித்திருப்பது, தன்னம்பிக்கையையும், தனக்கென சொந்த அடையாளத்தை உருவாக்கி பெருமைப்படுவதையும் வெளிக்காட்டுகிறது. இந்த விதத்தில் நிற்பது ஒருவரை நிதானமானவர், எதற்காகவும் பயப்படாதவர் என்பதையும் குறிக்கிறது. மேலும் இத்தகையவர்கள் மரியாதையை எதிர்பார்ப்பார்கள் மற்றும் அதிகாரத்தை வெளிக்காட்டுவார்கள்.
விதம் #4
படத்தில் காட்டப்பட்டவாறு ஒரு கையை மட்டும் பின்னால் கட்டி நின்றால், அத்தகையவர்கள் தன்னம்பிக்கை இல்லாதவர்கள் என்பதை வெளிப்படுத்துகிறது. இந்த விதத்தில் நிற்பவர்கள் அமைதியற்றவராகவும், பதட்டமாகவும், விரக்தியாகவும், அழுத்தமாகவும் இருப்பவராவார். அதனால் தான் ஒருவர் கேள்வி கேட்கும் போது, பதில் தெரியாத நிலையில் தன்னை அறியாமலேயே இந்த நிலையில் நிற்கிறார். சொல்லப்போனால் இந்த நிலையில் நிற்பதைத் தவிர்க்க வேண்டும். மாறாக தன்னம்பிக்கையை அதிகரிக்க உள்ளங்கைகளை ஒன்றன் மேல் ஒன்று வைத்து பிடித்து நிற்க வேண்டும்.



Click it and Unblock the Notifications