வட கொரியாவில் மக்கள் டிவி வாங்கினால் என்ன நடக்கும் தெரியுமா? நினைச்சு பார்க்கவே பயமா இருக்கே...!

தற்போது உலகம் உள்ள சூழலில் மூன்றாம் உலகப்போர் வந்து விடுமோ என்ற அச்சத்தில் உள்ளன. தவறான அரசியல்வாதிகளிடமும், மதவாதிகளிடமும் சிக்கி பல நாடுகளின் மக்கள் தங்கள் வாழ்வை சிரமப்பட்டு நகர்த்தி வருகிறார்கள். இது தற்போதைய சூழலாக இருந்தாலும் ஒரு நாட்டின் மக்கள் கிட்டதட்ட மூன்று தலைமுறைகளாக இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் வாழ்கிறார்கள்.

தற்போது பூலோக நரகம் என்று அழைக்கப்டும் வட கொரியாதான் அந்த திரெதிர்ஷ்டமான நாடாகும். கிம்-ஜாங்-உன்னின் முன்னோர்கள் தொடங்கி கிட்டதட்ட இரண்டு நூற்றாண்டுகள் சர்வாதிகாரிகளின் கையில்தான் உள்ளது. வட கொரிய மக்கள் நாட்டை விட்டு வெளியேறிட அனுமதிக்கப்படுவதில்லை. அதை மீறி தப்பிப்பவர்கள் கொல்லப்படுவார்கள் அல்லது சிறையில் அடைக்கப்படுவார்கள்.

North Korea What Happens When North Korea Citizen buy TV

வட கொரியாவிலிருந்து இரண்டு முறை தப்பி ஓடிய டிமோதி சோ, சமீபத்தில், தொலைக்காட்சிகள் போன்ற அடிப்படை நுகர்வோர் பொருட்களை வாங்குவதற்கு கூட குடிமக்கள் எதிர்கொள்ளும் கடுமையான சிரமங்களைப் பற்றி மனம் திறந்து பேசினார். இறுதியாக இங்கிலாந்தில் குடியேறுவதற்கு முன்பு நாட்டை விட்டு வெளியேற முயற்சித்த பின்னர் வட கொரிய அதிகாரிகளால் சித்திரவதை செய்யப்பட்ட சோ, LADbible உடனான ஒரு நேர்காணலில் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

தற்போது கிம் ஜாங்-உன் ஆட்சி செய்யும் கொடூர இராஜ்ஜியத்தின் வாழ்க்கையை அவர் வெளிச்சம் போட்டுக் காட்டினார், வட கொரியாவில் அன்றாட வாழ்க்கையின் எளிமையான அம்சங்கள் கூட எவ்வளவு இறுக்கமாகக் கட்டுப்படுத்தப்படுகின்றன என்பதைஅவர் உலகிற்கு வெளிப்படுத்தினார்.

வட கொரியாவில் தொலைக்காட்சி வாங்குவது அவ்வளவு எளிதான காரியமல்ல. இங்கு டிவி வாங்குவது கடுமையான அரசாங்க மேற்பார்வையுடன்தான் முடியும் என்று சோ கூறுகிறார். ஒருவர் டிவி வாங்கும்போது, ​​அரசு சாராத எந்த ஒளிபரப்புகளையும் அணுக முடியாது என்பதை உறுதி செய்வதற்காக ஒரு அரசு அதிகாரி அவர்களின் வீட்டிற்கு வருவார்.

North Korea What Happens When North Korea Citizen buy TV

"வட கொரியாவில் நீங்கள் ஒரு டிவி வாங்கினால், அரசாங்கம் உங்கள் வீட்டிற்கு வந்து அனைத்து ஆண்டெனாக்களையும் அகற்றி, ஒன்றை மட்டும் விட்டுவிடும்" என்று சோ கூறினார். வட கொரியாவில் தொலைக்காட்சி ஒளிபரப்புகள் எவ்வாறு கிம் குடும்பத்தால் முழுமையாக நிரப்பப்பட்டுள்ளன என்பதை அவர் விவரித்தார். " தொலைக்காட்சியில் ஒளிபரப்படும் அனைத்து நிகழ்ச்சிகள், ஆவணப்படங்கள் மற்றும் பாடல்கள் 24 மணி நேரமும் கிம் குடும்பத்தைப் பற்றியவை," என்று அவர் கூறினார்.

வட கொரிய மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய வேறு சில அசாதாரண விதிமுறைகளையும் சோ தனது நேர்காணலில் வெளிப்படுத்தினார். மிகவும் வினோதமான ஒன்று சிகை அலங்காரங்கள் மீதான கடுமையான கட்டுப்பாடு. குழந்தைகள் கூட அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட குறைந்த எண்ணிக்கையிலான சிகை அலங்காரங்களில் ஒன்றை மட்டுமே கொண்டிருக்க வேண்டும் என்று நிர்பந்திக்கப்படுகிறது.

ஒருவரின் தலைமுடி அனுமதிக்கப்பட்டதை விட சில சென்டிமீட்டர் நீளமாக இருந்தால், அவர்கள் தண்டிக்கப்படலாம், மேலும் அவர்களின் பெற்றோர் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று சோ விளக்கினார். "உங்களிடம் ஏதாவது வித்தியாசமாக இருந்தால், உங்கள் பெற்றோர் காவல் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு அதற்கான விளக்கத்தை எழுதி கொடுக்க வேண்டும்," என்று அவர் கூறினார்.

மேலும், வட கொரியாவில் கிம் குடும்பம் எவ்வாறு வணங்கப்படுகிறது என்பது குறித்து சோ விவாதித்தார். வட கொரியாவின் முதல் ஆட்சியாளரான கிம் இல்-சங் "நித்திய தலைவர்" என்று கருதப்படுகிறார், மேலும் அவரது மகன் கிம் ஜாங்-இல் "கடவுளின் மகன்" என்று குறிப்பிடப்படுகிறார். இந்த வழிபாட்டு முறையின் ஒரு பகுதியாக, தேசிய விடுமுறை நாட்களில் கிம் குடும்பத்தின் சிலைகளுக்கு குடிமக்கள் தலைவணங்க வேண்டும்.

வட கொரியா பற்றிய தகவல்களில் சோவின் பதிவு மிகவும் முக்கியமானது, ஏனெனில் பல வட கொரியர்கள் இந்த அடக்குமுறை ஆட்சியிலிருந்து தப்பிக்க முடியவில்லை. 1950 களில் இருந்து, குறைந்தது 30,000 வட கொரியர்கள் அங்கிருந்து தப்பித்து உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது, சிலர் சியோல், சீனா, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா போன்ற இடங்களில் குடியேறியுள்ளனர். தப்பிக்க முடியாத மக்கள் கிம் ஜாங்-உன்னின் ஆட்சியின் கீழ் கடுமையான விதிமுறைகளை தாங்கிக் கொண்டு அடிமை வாழ்வை வாழ்கின்றனர்.

Desktop Bottom Promotion