Latest Updates
-
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்...
வட கொரிய அதிபரின் மனைவி கடைபிடிக்க வேண்டிய கடுமையான விதிமுறைகள்... இவ்வளவு கொடுமையா?
உலகின் மிகவும் ஆபத்தான நாடுகளின் பட்டியலில் எப்போதும் முக்கியமான இடத்தில் இருப்பது வட கொரியா. சர்வாதிகார ஆட்சியின் கீழ் இங்கு மக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கடுமையான விதிமுறைகளாலும், தண்டனைகளாலும் வட கொரியா 'பூலோக நரகம்' என்றே அழைக்கப்படுகிறது.
2012 ஆம் ஆண்டில், ரி சோல்-ஜு என்ற பெண் கிம் ஜாங்-உன்னுடன் தோன்றத் தொடங்கினார். ரி சோல்-ஜு உண்மையில், நாட்டின் தலைவரின் மனைவி. வட கொரியா அதிபர் கிம்மை மணப்பதற்கு முன்பு அவர் ஒரு பாடகியாகவும், சியர் லீடராகவும் இருந்ததாகக் கூறப்படுகிறது.

வட கொரியத் அதிபர் கிம் ஜோன்-உன், பல கடுமையான மற்றும் விசித்திரமான செயல்களுக்குப் பெயர் பெற்ற பல ரகசியங்களைக் கொண்ட மனிதர். வட கொரியாவில் பல கட்டுப்பாடுகள் அதன் மக்களுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு அதிபரின் மனைவியும் விதிவிலக்கல்ல. அவரும் சில கடுமையான விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். அவை என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
கட்டாயத் திருமணம்
பெண்களுக்கு தங்கள் வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை உள்ளது, ஆனால் அவரைப் பொறுத்தவரை, அவர் கிம் ஜாங்-உன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2008 ஆம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்ட பிறகு, கிம் ஜாங்-உன்னின் தந்தையான கிம் ஜாங்-இல், கிம்மை அவரை திருமணம் செய்து கொள்ள உத்தரவிட்டார். அப்போதைய சர்வாதிகாரியான அவருடைய உத்தரவை மீற முடியாமல் இந்த திருமணம் நடைபெற்றது.
பெயர் மாற்றம்
பொதுவாக திருமணத்திற்கு பின் பெண்கள் கணவரின் பெயரை தங்கள் பெயருடன் இணைத்துக் கொள்வார்கள். ஆனால் ரி சோல்-ஜு மிகவும் வித்தியாசமான சிக்கலை எதிர்கொண்டார். கிம் ஜாங் உன்னின் மனைவியான பிறகு, அவர் தனது பிறந்த பெயரை விட்டுவிட்டு ஒரு புதிய பெயரை ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. அதுமட்டுமின்றி, அவரது முழு கடந்த காலமும் வேண்டுமென்றே மறைக்கப்பட்டது. அவரது உண்மையான பெயரும் பிறந்த ஆண்டும் கூட இப்போதும் மர்மமாகவே உள்ளது.
அவரது குடும்பத்தை சந்திக்க மறுக்கப்பட்டது
கிம் ஜாங்-உன்னை திருமணம் செய்வதற்கு முன்பு ரி சோல்-ஜு ஒரு சாதாரண குடிமகளாக இல்லை. அவர் ஒரு மரியாதைக்குரிய மற்றும் பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது தாயார் ஒரு மருத்துவமனையின் மகளிர் மருத்துவப் பிரிவின் தலைவராக இருந்தார், மேலும் அவரது தந்தை ஒரு பேராசிரியர். கிம்மின் இராணுவ ஆலோசகர்களில் ஒருவரான அவரது மாமா மூலம் அவர் கிம்மை சந்தித்தார். ஆனால் வட கொரிய அதிபரை திருமணம் செய்தது முதல் அவர் தனது குடும்பத்தைப் பார்க்க மறுக்கப்பட்டது.
சிகை அலங்காரம் மற்றும் உடைக்கட்டுப்பாடு
திருமணமான ஆரம்ப நாட்களில், ரி சோல்-ஜு தனது நாட்டில் தனித்துவமானவராகவும் முக்கியத்துவம் வாய்ந்தவராகவும் தோன்றினார். முதன்முதலில் பொதுவில் தோன்றியபோது அவர் மேற்கத்திய பாணி தோற்றத்தால் அவர் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தார். அவருக்கு ஜீன்ஸ் அணிய கூட அனுமதி இல்லை. தற்போது அவருடைய தோற்றம் பழமைவாத ஆடைகளால் மாற்றப்பட்டுள்ளது. அதேபோல், அவரது முதல் மகளைப் பெற்றெடுத்ததிலிருந்து அவரது சிகை அலங்காரம் ஒருபோதும் மாறவில்லை.
பொதுவெளியில் வர அனுமதி இல்லை
மற்ற நாடுகளின் அதிபரின் மனைவிகளைப் போலல்லாமல், ரி சோல்-ஜுவால் பொதுவெளியில் தனியாகத் தோன்ற முடியாது. ரி-யை தனியாகப் பார்ப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது, அவர் எப்போதும் தனது கணவருடன் மட்டுமே காணப்படுகிறார். அவரது குழந்தைகள் கூட பொது நிகழ்வுகளில் தனியாக காண அனுமதிக்கப்படுவதில்லை. அதனால்தான் சமூக ஊடகங்கள் மற்றும் இணையதளத்தில் அவரது குழந்தைகளின் ஒரு புகைப்படம் கூட இதுவரை காணப்படவில்லை.
வட கொரியாயவை விட்டு வெளியேறக்கூடாது
ரி சோல்-ஜு தனது நாட்டிற்கு வெளியே பயணம் செய்யவோ அல்லது சுற்றுப்பயணம் மேற்கொள்ளவோ அனுமதியில்லை. ஒரு தலைவரின் மரணத்தின் போது, அவரது கணவருடன் சேர்ந்து, இறுதிச் சடங்கு தொடர்பான வருகைகளில் மட்டுமே அவர் பங்கேற்க முடியும். உலகெங்கிலும் உள்ள பல்வேறு ஆதாரங்களின்படி, ரி சோல்-ஜு சர்வாதிகாரியை மணப்பதற்கு முன்பு பல முறை நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். ஒரு முறை சியர்லீடராக அண்டை நாடான தென் கொரியாவுக்குக் கூட சென்றதாகவும் கூறப்படுகிறது.
கர்ப்பத்தை மறைக்க கட்டாயம்
வட கொரியாவின் ஆளும் குடும்பத்தின் ஒரு பகுதியாக ஆனதிலிருந்து ரி சோல்-ஜு கடுமையான பாதுகாப்பின் கீழ் வாழ்ந்து வருகிறார். ஆனால் அவர் கர்ப்பமாக இருந்தபோது அந்த பாதுகாப்பு மற்றும் தனிமை நிலை மேலும் வலுப்படுத்தப்பட்டது. ரி சோல்-ஜு பல மாதங்களாக பொதுமக்களின் பார்வையில் இருந்து மறைந்தார்.
ஆண் குழந்தை பெறும்வரை கட்டாயம்
2009-ல் அவர்களுக்கு திருமணம் நடந்தது, மேலும் அவர்களின் முதல் குழந்தை பற்றிய தகவல்கள் 2010 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்பட்டன. அதன் பிறகு, ரி சோல்-ஜுவுக்கு இன்னும் இரண்டு குழந்தைகள் பிறந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் அவரது முதல் இரண்டு குழந்தைகளும் பெண் குழந்தைகள் என்பதால் சர்வாதிகாரிக்கு திருப்திகரமாக இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுக்க அவருக்கு நிறைய அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications












