Latest Updates
-
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்! -
5 லட்சம் ஆண்டுகளுக்கு ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்த 5 இடங்கள் - தமிழ்நாட்டின் ஒரு இடமும் இதில் இருக்காம் -
கோடை வெப்பத்தை சமாளிக்க இந்த வாஸ்து ரகசியங்கள் தெரியுமா? வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுங்கள்!
தங்கத்தின் விலைக்கு இணையாக விற்கப்படும் உலகின் காஸ்டலியான உப்பு? அப்படி இந்த உப்பில் என்ன ஸ்பெஷல் தெரியுமா?
'உப்பில்லா பண்டம் குப்பையிலே" என்று ஒரு பழமொழி உள்ளது. உப்பு நம் வாழ்வில் தவிர்க்க முடியாத அத்தியாவசியப் பொருளாகும். நம்மால் சர்க்கரை இல்லாமல் கூட வாழ்ந்து விட முடியும், ஆனால் உப்பு இல்லாமல் வாழ முடியாது. உலகின் அனைத்து சமையலறைகளிலும் இருக்கும் அத்தியாவசியப் பொருளாக உப்பு உள்ளது. ஒரு உணவின் சுவையை முழுமையாக்குவது உப்புதான்.
அனைத்து நாடுகளிலும் வழக்கமான உப்பு மலிவான விலையில் கிடைத்தாலும், நம்பமுடியாத விலையில் விற்கப்படும் சில அரிய வகை உப்புகள் உள்ளன என்பது நம்மில் பலரும் அறியாததாகும். அத்தகைய ஒரு ஆடம்பரமான மசாலாப் பொருள்தான் கொரிய மூங்கில் உப்பு. இந்த உப்பு மூங்கில் உப்பு, ஊதா மூங்கில் உப்பு அல்லது ஜுகியோம் என்றும் அழைக்கப்படுகிறது, இதன் விலை ஒரு கிலோ $400 டாலராகும், இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 35,000 ஆகும்.

கொரிய மூங்கில் உப்பு உலகின் மிக விலையுயர்ந்த உப்பாகக் கருதப்படுகிறது, இது கொரிய உணவு வகைகளை சமைப்பதிலும், பாரம்பரிய கொரிய மருத்துவத்தில் ஒரு மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் கொரிய மூங்கில் உப்பு ஏன் இவ்வளவு விலை உயர்ந்தது? இதில் அப்படி என்ன ஸ்பெஷல்?
இதற்கான பதில், இந்த உப்பு தயாரிக்கப்படும் விதத்தில் உள்ளது, கடல் உப்பை ஒரு தடிமனான மூங்கில் தண்டில் அடைத்து, பைன் விறகுகளைப் பயன்படுத்தி அதிக வெப்பநிலையில் ஒன்பது முறை சுடுவதை உள்ளடக்கிய மிகவும் சிக்கலான செயல்முறையின் மூலம் தயாரிக்கப்படுகிறது.
கொரிய மூங்கில் உப்பு எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?
உலகின் மிகவும் காஸ்டலியான ஜுகியோம் அல்லது கொரிய மூங்கில் உப்பு தயாரிப்பதற்கு ஒரு சிக்கலான உற்பத்தி முறை தேவைப்படுகிறது. வழக்கமான கடல் உப்பு மூங்கில் கேனிஸ்டர்களில் அடைக்கப்பட்டு மஞ்சள் களிமண்ணால் மூடப்பட்டு, கலவை இரும்பு அடுப்பில் சுடப்பட்டு பைன் மர நெருப்பில் வறுக்கப்படுகிறது.
மூங்கில் தண்டு கொரியாவின் மேற்கு கடற்கரையிலிருந்து பெறப்பட்ட வளைகுடா உப்பால் நிரம்பியுள்ளது, இது சிவப்பு களிமண்ணால் மூடப்பட்டு, பைன் மரத்திலிருந்து பெறப்பட்ட விறகுகளால் சூளையில் சுடப்படுகிறது. சுட்ட பிறகு உப்பு கட்டிகள் கெட்டியானதும், அவை வெளியே எடுக்கப்பட்டு, மற்றொரு மூங்கில் தண்டில் நிரப்பப்பட்டு, மீண்டும் சுடப்படுகின்றன. இந்த செயல்முறை ஒன்பது முறை மீண்டும் மீண்டும் செய்யப்படுகிறது, ஒன்பதாவது முறை சுடப்படும் போது 1000 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலைப் பயன்படுத்தப்படுகிறது.
பேக்கிங் செயல்முறை முடிந்ததும், மூங்கில் உப்பில் நீலம், மஞ்சள், சிவப்பு, வெள்ளை மற்றும் கருப்பு படிகங்கள் காணப்படும், இந்த நிலையில் இந்த உப்பு காம்ரோஜங் சுவை எனப்படும் தனித்துவமான இனிப்பு சுவையைக் கொண்டுள்ளது, ஏனெனில் உப்பு மூங்கிலின் சுவையை இந்த செயல்பாட்டின் போது உறிஞ்சுகிறது.
"ஊதா மூங்கில் உப்பு" என்று அழைக்கப்படும் நன்கு சுடப்பட்ட மூங்கில் உப்பு, ஒரு தனித்துவமான ஊதா நிறத்தைக் கொண்டுள்ளது. இந்த 1,500 °C க்கும் அதிகமான வெப்பநிலையில் தயாரிக்கப்படுகிறது. இந்த உப்பை தயாரிக்கும் முழு செயல்முறையும் மிகவும் உழைப்பு மிகுந்ததாகவும், அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளும் வகையிலும் உள்ளது, இந்த செயல்பாட்டை முடிக்க கிட்டதட்ட 50 நாட்களுக்கு மேல் ஆகும், மேலும் திறமையான கைவினைஞர்கள் உப்பை சுடுவதற்குப் பயன்படுத்தப்படும் சிறப்பு உலைகளை இயக்க வேண்டும். இவ்வளவு உழைப்பும், தனித்துவமும் இருப்பதால்தான் இந்த உப்பின் விலை தங்கத்திற்கு இணையாக உள்ளது.



Click it and Unblock the Notifications
