Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
இந்திய வரலாற்றின் மிகப்பெரிய ராஜ்ஜியம் சோழர்கள் இல்லையாம் இவர்கள்தானாம்... இவங்க எப்படி அழிந்தார்கள் தெரியுமா?
Maurya Empire: இந்தியா அதன் பரந்த நிலப்பரப்பில் பல்வேறு ராஜ்ஜியங்களின் எழுச்சியையும், வீழ்ச்சியையும் கண்டுள்ளது. சில ராஜ்ஜியங்கள் இந்தியர்களால் உருவாக்கப்பட்டிருந்தாலும் சில ராஜ்ஜியங்கள் வெளிநாட்டு படையெடுப்பாளர்களால் உருவாக்கப்பட்டதாக இருந்தது. உலகில் அதிக நாட்கள் படையெடுப்பாளர்களால் ஆளப்பட்ட நாடாக இந்தியாதான் இருக்கும்.
இந்தியாவின் முதல் மாபெரும் பேரரசு எதுவென்றால், அது தனானந்தரின் மரணத்திற்குப் பிறகு உருவாக்கப்பட்ட மௌரியப் பேரரசுதான். கிமு 322-இல் நந்தா வம்சத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு மௌரியப் பேரரசு நிறுவப்பட்டது. இது பாட்லிபுத்ராவை, நவீன கால பாட்னாவை தலைநகரமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.

இது சந்திரகுப்த மௌரியரால் உருவாக்கப்பட்டது மற்றும் அசோகரின் ஆட்சியின் கீழ் அதன் உச்சத்தை அடைந்தது, அசோகர் காலத்தில் மௌரியப் பேரரசின் பரப்பளவு 5 மில்லியன் சதுர கிலோமீட்டர்களாக இருந்தது.
மௌரியப் பேரரசின் வரலாறு
கல்வெட்டுகள், நூல்கள், நினைவுச் சின்னங்கள், அகழ்வாராய்ச்சிகள் போன்ற வரலாற்று ஆதாரங்களின்படி, மௌரிய வம்சத்தின் வரலாற்றை நந்த வம்சம் வரை காணலாம். அவர்களின் ஆட்சியாளரான தனாநந்தன், சாணக்கியரை அவமதித்துள்ளார், அவர் நந்த ராஜ்ஜியத்தை அழிப்பதாக சபதம் செய்து, உள்ளூர் சிறுவன் சந்திரகுப்தனுக்கு இராணுவ மற்றும் நிர்வாக திறன்களில் பயிற்சி அளித்தார். அண்டைப் பேரரசுகளின் ஆதரவுடன், அவர் மகதத்தைத் தாக்கி தனானந்தரை நாடுகடத்தினார். இதனால், சாணக்கியரின் வழிகாட்டுதலிலும், சந்திரகுப்த மௌரியரின் தலைமையிலும் ஒரு புதிய பேரரசு உருவானது.
அவர் வட இந்தியாவில் பேரரசை விரிவுபடுத்தினார் மற்றும் கிழக்கு மற்றும் மேற்கு மற்ற ஆட்சியாளர்களுடன் சமாதானத்தை நிறுவினார். கிமு 298 இல் அவர் ஜைன மதத்தை ஏற்றுக் கொள்ள முடிவு செய்த பின்னர் அவரது மகன் பிந்துசாரா ஆட்சிக்கு வந்தார்.
பிந்துசாரரின் கீழ், பேரரசு தென்னிந்தியா வரை நாம் இப்போது கர்நாடகா என்று அழைக்கப்படும் வரை நீட்டிக்கப்பட்டது. கிமு 268 இல் அசோகர் அவருக்கு பின் அரியணை ஏறினார், அவரது ஆட்சிக்காலத்தில் மேலும் பேரரசு அதன் உச்சத்தை அடைந்தது. கலிங்கத்தை கைப்பற்றிய போது, அசோகர் எண்ணற்ற உயிரிழப்புக்ளுக்கு காரணமாகியதால் போரிலிருந்து விலகி புத்த மதத்தை ஏற்றுக்கொண்டார்.
மௌரிய பேரரசின் நிர்வாகம்
- மௌரியப் பேரரசின் நிர்வாகமானது சாணக்கியரின் அர்த்தசாஸ்திரத்தை அடிப்படையாகக் கொண்ட செயல்பட்டது, இதில் பொருளாதாரம் மற்றும் செழிப்பான ராஜ்ஜியத்திற்கான சிறந்த நிர்வாகத்தின் கொள்கைகள் அடங்கும்.
- மௌரியப் பேரரசின் நிர்வாகம் மாவட்ட மற்றும் கிராம மட்டங்களில் அதிகாரப் படிநிலையை வெளிப்படுத்துகிறது.
- வரலாற்று ஆதாரங்களின் படி, அரசர் மந்திரிபரிஷத் என்ற மந்திரி சபையின் ஆலோசனையின்படி செயல்பட்டார், இதில் புரோஹிதா, மகாமந்திரி, சேனாபதி மற்றும் இளவரசர் ஆகியோர் ஒரு மையப்படுத்தப்பட்ட நிர்வாகத்தின் காரணமாக இருந்தனர்.
- அமாத்யாக்கள் எனப்படும் அரசு ஊழியர்கள் தினசரி நிர்வாகத்திற்கு நியமிக்கப்பட்டனர். பேரரசு மாவட்ட அளவில் ராஜூகாஸால் நிர்வகிக்கப்படும் மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது, மேலும் நகரின் கண்காணிப்பாளராக நாகர்கா இருந்தார்.
மௌரிய பேரரசின் கலை மற்றும் கட்டிடக்கலை
- பாரசீக கட்டிடக்கலை மௌரிய வம்சத்தின் கட்டிடக்கலையை மிகவும் பாதித்தது என்று தொல்பொருள் கண்டுபிடிப்புகள் குறிப்பிடுகின்றன. மௌரியர்களின் உருவங்கள் மற்றும் பளபளப்பான கற்கள், புத்த வாசகங்களின் பொறிக்கப்பட்ட அறிவிப்புகள் போன்றவை அடங்கும்.
- மௌரியர்களின் கட்டிடக்கலையில் மரம் ஒரு பொதுவான மூலப்பொருளாக இருந்தது, மேலும் கட்டுமான ஸ்தூபிகள் அதில் முக்கியமானவை. அசோகர் தென்னிந்தியாவில் அமராவதி ஸ்தூபி மற்றும் மத்தியப் பிரதேசத்தில் உள்ள சாஞ்சி ஸ்தூபி போன்ற பல ஸ்தூபிகளை அமைத்தார். அசோகர் புத்த மதத்தை பின்பற்றியதால் இந்த கட்டிடங்கள் புத்த ஆணைகளையும், போதனைகளையும் கொண்டு சென்றன.
- சாரநாத்தில் உள்ள அசோக சின்னம், பளபளப்பான மேற்பரப்புடன், அசோகர் கட்டிய மிக முக்கியமான கட்டிடக்கலை பெருமை மற்றும் சக்தியை குறிக்கிறது. இது இப்போது இந்தியாவின் தேசிய சின்னமாகவும் உள்ளது.
மௌரிய பேரரசின் பொருளாதார வளர்ச்சி
- மௌரியர்களின் காலத்தில் விவசாயம் முக்கிய வருவாய் ஆதாரமாக இருந்தது. பேரரசு வளமான கங்கை சமவெளியில் நிறுவப்பட்டதால், விவசாயம் செழித்தது, சில வரிகள் விதிக்கப்பட்டன. வரி என்பது பொருளை சார்ந்து நிர்ணயிக்கப்பட்டது, மேலும் ஒரே மாதிரியான வரி முறை இல்லை என்று கூறப்படுகிறது.
- வைரங்கள், தானியங்கள், ஜவுளிகள், குதிரைகள், தங்கம் போன்றவற்றை பரிமாறிக் கொள்வதற்காக மௌரியர்கள் கிரேக்கர்கள் மற்றும் மத்திய ஆசியாவுடன் வர்த்தகம் செய்ததற்கான சான்றுகள் தெரியவந்துள்ளன. மேலும் பர்மாவிலும் மேற்கின் சில பகுதிகளிலும் கடல் வழிசெலுத்தல் நடைமுறையில் இருந்தது.
மௌரியப் பேரரசின் வீழ்ச்சி
- அசோகரின் விலங்கு வதை தடை மற்றும் மத சடங்குகளில் பெண்களைச் சேர்த்தது போன்ற புதிய கொள்கைகள் பல கிளர்ச்சிகளுக்கு வழிவகுத்தது. மேலும் புத்த மதத்திற்கு சாதகமான இந்த சட்டங்கள் எண்ணற்ற புத்த மதத்தினர் கொல்லப்படும் எதிர்வினைகளுக்கு வழிவகுத்தது.
- பரந்த சாம்ராஜ்யத்தை நிர்வகிப்பதில் அடுத்தடுத்து வந்த ஆட்சியாளர்களின் திறமையின்மை காரணமாக, அவர்கள் மௌரியப் பேரரசைப் பிரித்து மௌரியப் பேரரசு வரைபடத்தில் உள்ள பகுதிகளைக் குறைக்கத் தொடங்கினர்.
- அளவுக்கு மீறிய ஒற்றை அதிகாரம் மற்றும் சுங்க பேரரசின் எழுச்சி மௌரிய பேரரசை நிரந்தரமாக வீழ்த்தியது.



Click it and Unblock the Notifications












