Latest Updates
-
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்! -
5 லட்சம் ஆண்டுகளுக்கு ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்த 5 இடங்கள் - தமிழ்நாட்டின் ஒரு இடமும் இதில் இருக்காம் -
கோடை வெப்பத்தை சமாளிக்க இந்த வாஸ்து ரகசியங்கள் தெரியுமா? வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுங்கள்!
445 நாட்கள் இருந்த வரலாற்றின் மிகவும் குழப்பமான நீண்ட வருடம் எது தெரியுமா? ஏன் இப்படி நடந்துச்சு தெரியுமா?
2025 தொடங்கி முதல் மாதம் கிட்டதட்ட முடியப்போகிறது. தினமும் காலண்டரில் மிகவும் எளிதாக கிழித்து விட்டு நாம் நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கிறோம். நாட்களை கணக்கிடுவது தற்போதைய உலகில் மிகவும் எளிதானதாக உள்ளது, ஆனால் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சூழல் இப்படி எளிதாக இல்லை.
கிமு 1 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மக்கள், அப்போதைய காலண்டரில் கணிக்கப்பட்டிருந்த அறுவடை 'பருவம்' வரும்போது கடினமான நேரத்தை அனுபவித்தனர், ஏனெனில் அறுவடைக்கு தயாராக இருக்கும் காய்கறிகளுக்குப் பதில், அவர்கள் விதைகள் மற்றும் வேர்களை மட்டுமே பெற்றனர்.

ஆரம்பகால ரோமானிய நாட்காட்டி மிகவும் வினோதமாக இருந்ததால், வருடத்தின் முக்கிய நிகழ்வுகள் மற்றும் பண்டிகைகளை சரியான நேரத்தில் கொண்டாட முடியவில்லை. ஆரம்பகால ரோமானிய நாட்காட்டி சந்திர சுழற்சிகள் மற்றும் விவசாய ஆண்டின் சுழற்சிகளால் தீர்மானிக்கப்பட்டது, அதாவது10 மாதங்கள் மட்டுமே கணக்கிடப்பட்டது.
இந்த காலண்டர் மார்ச் மாதத்தில் வசந்த காலத்தில் தொடங்கி டிசம்பர் மாதம் 10வது மாதத்தில் முடிவடைந்தது, மொத்தம் 304 நாட்கள் மட்டுமே இருந்தது மற்றும் சுமார் 61 நாட்களை கணிக்கவில்லை.வரலாற்று ஆசிரியர்களின் கருத்துப்படி ஆண்டின் இரண்டு மாதங்களுக்கு விவசாயத்தில் எந்த வேலையும் செய்யப்படாததால், அவை கணக்கிடப்படாமல் இருந்திருக்கலாம் என்று கூறுகின்றனர்.
இந்த நாட்காட்டி சூரியன் உதிப்பதையும், மறைவதையும் குறிப்பிட்டது, ஆனால் அதை அதிகாரப்பூர்வ நாளாகக் கணக்கிடவில்லை. ரோமின் இரண்டாவது மன்னர் நுமா பாம்பிலியஸ், குளிர்கால காலத்தை உள்ளடக்கிய காலண்டரில் சுமார் 51 நாட்களைச் சேர்த்தார், ஜனவரி மற்றும் பிப்ரவரி என அழைக்கப்படும் மாதங்களுடன் சேர்த்து நாட்காட்டியில் 51 நாட்களைச் சேர்த்தார். இரட்டைப்படை எண்கள் பற்றிய மூடநம்பிக்கைகள் காரணமாக, அவர் கூடுதல் நாளைச் சேர்த்து, ஆண்டை 355 நாட்களாக மாற்றினார்.
இருப்பினும், இந்த நாட்காட்டியும் விரைவில் பருவங்களுடன் ஒத்திசைவை இழந்ததாகவும், கிமு 200-களில் ரோமில் மார்ச் 14 அன்று சூரிய கிரகணம் காணப்பட்டதாகவும், ஆனால் நாட்காட்டியில் ஜூலை 11 அன்று பதிவு செய்யப்பட்டதாகவும் வரலாற்று ஆசிரியர்கள் கூறியுள்ளார்கள்.
அதன்பின் ரோமில் பேரரசரும் பாதிரியார்களும் காலெண்டரை பருவங்களுக்கு ஏற்ப மீண்டும் சீரமைக்க முயற்சிக்க மெர்சிடோனியஸ் என்ற கூடுதல் மாதத்தைச் சேர்த்தனர், ஆனால், அவர்கள் எதிர்பார்த்தபடி, அதுவும் சரியாக வேலை செய்யவில்லை.
ஜூலியஸ் சீசர் தலைமை தாங்க வந்தபோது, பூமி அதன் அச்சில் (பகல் வாரியாக) சுழலும் மற்றும் சூரியனைச் சுற்றும் (ஆண்டு வாரியாக) சுழலும் காலண்டரை சரிசெய்யத் தொடங்கினார். இது மிகவும் கடினமான காரியமாக இருந்தது, ஆனால் இதுவும் குழப்பத்தைத்தான் ஏற்படுத்தியது, ஏனெனில் சீசர் ஒரு வானியலாளரின் ஆலோசனையின் அடிப்படையில் வரலாற்றில் மிக நீண்ட ஆண்டான 445 நாட்களை நமக்கு வழங்கினார்.
மெர்சிடோனியஸுடன், அவர் 33 நாட்களில் ஒன்று மற்றும் 34 நாட்களில் மற்றொன்று என இரண்டு மாதங்களைச் சேர்த்து, காலண்டரை 15 மாதங்களுடன் மிக நீண்டதாக மாற்றினார். அதுதான் கிமு 46 ஆம் ஆண்டு, அது வரலாற்றின் 'குழப்ப ஆண்டு' என்றும் அழைக்கப்படுகிறது.
அதிர்ஷ்டவசமாக, இரண்டு புதிய மாதங்கள், மெர்சிடோனியஸ் மற்றும் 'இடைக்காலரி மாதங்களை'ச் சேர்க்கும் நடைமுறை கைவிடப்பட்டு, 1582 இல் நாட்காட்டியின் தோல்விக்கு போப் கிரிகோரி பொறுப்பேற்யார், அதன்பின்தான் இன்று நாம் பயன்படுத்தும் நாட்காட்டியாக மீண்டும் சீரமைக்கப்பட்டது.



Click it and Unblock the Notifications
