Just In
- 21 min ago கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- 1 hr ago திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- 1 hr ago 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சுக்கிர சேர்க்கை: மே மாசம் இந்த 3 ராசிக்கு தொழில் பிரகாசிக்கப் போகுது..
- 2 hrs ago இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
Don't Miss
- News ராஜ நடை போடும் காலம்.. சிங்கம் போல மாற போகும் சிம்மம்.. குரு பெயர்ச்சி பலன் என்ன தெரியுமா?
- Automobiles தார் ரோடு, பாறைகள் நிறைந்த ஆஃப்-ரோடு எதா இருந்தாலும் ஒரு கை பாத்திடலாம்! இந்தியாக்கு ஏத்த கார் விராங்ளர்!
- Technology உங்க மொபைலில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் செயலிகள் இருக்கா? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. ஏன்?
- Movies அச்சச்சோ.. என்ன ஆச்சு?.. ஐபிஎல் ஸ்ட்ரீமிங் மோசடி வழக்கில் சிக்கிய தமன்னா.. விசாரணைக்கு வர உத்தரவு!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
145 வயது வாழ்ந்த தாத்தாவின் நீண்ட ஆயுள் இரகசியம் இதுதானாம்!
இந்தோனேசியாவின் வயதான நபராக திகழ்ந்த ம்பாஹ் கோத்தோ தனது நீண்டநாள் ஆயுள் இரகசியம் குறித்து கூறியது என்ன தெரியுமா?
நூறு வயசு வாழ வேண்டும், சொர்கத்திற்கு செல்ல வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கிறது. ஆனால், யார் ஆரோக்கியமான வாழ்க்கை பின்பற்றுகிறார்கள்? யார் எல்லாம் சொர்க்கம் செல்ல இப்போது இறக்க ரெடியாக இருக்கிறார்கள்.
யாருமே இல்லை! இதோ, மரணத்தை தானாக அழைத்த கோத்தோ தாத்தா, தனது நீண்ட ஆயுள் பற்றிய இரகசியம் என என்ன கூறி இருக்கிறார் என பாருங்கள்...
கோத்தோ (Mbah Gotho)
கோத்தோ 1870 டிசம்பர் 31 தேதி பிறந்தவர். இவர் ஒருசில நாட்களுக்கு முன்னர் தான் மரணம் அடைந்தார். இவர் இந்தோனேசியாவில் வாழ்ந்து வந்தார். இறக்கும் வரை இந்தோனேசியாவின் வயது மூத்த நபாராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகின் பழைய மனிதர்!
இந்தோனேசியா மட்டுமின்றி, இவர் உலகின் பழைய நபர் பட்டியலிலும் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
குடும்பம்!
இவருக்கு நான்கு மனைவி, பத்து குழந்தைகள். இவர்கள் எல்லாரும் இறந்துவிட்டனர். இவரது கடைசி மகன் கடந்த 1988-ல் மரணம் அடைந்தார். இவர் தனது கடைசி நாட்களை கொள்ளுப் பேர குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார்.
நல்ல கவனிப்பு!
எனது பேர பிள்ளைகள் யாரையும் சார்ந்து இன்றி வாழ்ந்து வருகிறார்கள், என்னையும் நல்லப்படி பார்த்துக் கொள்கிறார்கள் என இறப்பதற்கு சில வாரங்களுக்கு முன்னர் ஒரு பேட்டியில் கூறியிருந்தார் கோத்தோ.
கடைசி வரை ரேடியோ!
கண் பார்வை குறைபாடு இருந்ததால் கோத்தோ டிவி பார்க்க மாட்டார். அதற்கு பதிலாக ரேடியோவில் நாள் முழுதும் செய்தி கேட்டு நாட்டு நடப்புகளை அறிந்துக் கொள்வாராம்,
மரணத்தை அழைத்தவர்!
தனது 146வது பிறந்தநாள் விழாவில் தான், தான் இறப்பதற்கு தயாராக இருக்கிறேன், ஆனால், மரணம் தான் என்னை நெருங்க மறுக்கிறது என கோத்தோ கூறியிருந்தார். எந்த நேரத்தில் கூறினாரோ, கூறிய சில வாரங்களிலேயே மரணம் அடைந்துவிட்டார் கோத்தோ.
கல்லறை கட்டி வைத்த கோத்தோ!
தனக்கான கல்லறையை 1992 லேயே கட்டி வைத்துவிட்டா தாத்தா கோத்தோ. தனது இறப்பிற்காக தான் காத்திருந்தார். அவர் கட்டி வைத்த கல்லறையிலேயே அவரை பேர குழந்தைகள் அடக்கம் செய்து வைத்தனர்.
இரகசியம்!
இவர் இவ்வளவு நீண்ட நாட்கள் உயிர் வாழ்ந்ததன் இரகசியம் என்னவென்று யார் கேட்டாலும், பொறுமை. பொறுமை தான் எல்லாவற்றுக்கும் தேவையானது என பதில் கூறி இருக்கிறார் கோத்தோ.