Latest Updates
-
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க..
145 வயது வாழ்ந்த தாத்தாவின் நீண்ட ஆயுள் இரகசியம் இதுதானாம்!
இந்தோனேசியாவின் வயதான நபராக திகழ்ந்த ம்பாஹ் கோத்தோ தனது நீண்டநாள் ஆயுள் இரகசியம் குறித்து கூறியது என்ன தெரியுமா?
நூறு வயசு வாழ வேண்டும், சொர்கத்திற்கு செல்ல வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கிறது. ஆனால், யார் ஆரோக்கியமான வாழ்க்கை பின்பற்றுகிறார்கள்? யார் எல்லாம் சொர்க்கம் செல்ல இப்போது இறக்க ரெடியாக இருக்கிறார்கள்.
யாருமே இல்லை! இதோ, மரணத்தை தானாக அழைத்த கோத்தோ தாத்தா, தனது நீண்ட ஆயுள் பற்றிய இரகசியம் என என்ன கூறி இருக்கிறார் என பாருங்கள்...

கோத்தோ (Mbah Gotho)
கோத்தோ 1870 டிசம்பர் 31 தேதி பிறந்தவர். இவர் ஒருசில நாட்களுக்கு முன்னர் தான் மரணம் அடைந்தார். இவர் இந்தோனேசியாவில் வாழ்ந்து வந்தார். இறக்கும் வரை இந்தோனேசியாவின் வயது மூத்த நபாராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் பழைய மனிதர்!
இந்தோனேசியா மட்டுமின்றி, இவர் உலகின் பழைய நபர் பட்டியலிலும் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குடும்பம்!
இவருக்கு நான்கு மனைவி, பத்து குழந்தைகள். இவர்கள் எல்லாரும் இறந்துவிட்டனர். இவரது கடைசி மகன் கடந்த 1988-ல் மரணம் அடைந்தார். இவர் தனது கடைசி நாட்களை கொள்ளுப் பேர குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார்.

நல்ல கவனிப்பு!
எனது பேர பிள்ளைகள் யாரையும் சார்ந்து இன்றி வாழ்ந்து வருகிறார்கள், என்னையும் நல்லப்படி பார்த்துக் கொள்கிறார்கள் என இறப்பதற்கு சில வாரங்களுக்கு முன்னர் ஒரு பேட்டியில் கூறியிருந்தார் கோத்தோ.

கடைசி வரை ரேடியோ!
கண் பார்வை குறைபாடு இருந்ததால் கோத்தோ டிவி பார்க்க மாட்டார். அதற்கு பதிலாக ரேடியோவில் நாள் முழுதும் செய்தி கேட்டு நாட்டு நடப்புகளை அறிந்துக் கொள்வாராம்,

மரணத்தை அழைத்தவர்!
தனது 146வது பிறந்தநாள் விழாவில் தான், தான் இறப்பதற்கு தயாராக இருக்கிறேன், ஆனால், மரணம் தான் என்னை நெருங்க மறுக்கிறது என கோத்தோ கூறியிருந்தார். எந்த நேரத்தில் கூறினாரோ, கூறிய சில வாரங்களிலேயே மரணம் அடைந்துவிட்டார் கோத்தோ.

கல்லறை கட்டி வைத்த கோத்தோ!
தனக்கான கல்லறையை 1992 லேயே கட்டி வைத்துவிட்டா தாத்தா கோத்தோ. தனது இறப்பிற்காக தான் காத்திருந்தார். அவர் கட்டி வைத்த கல்லறையிலேயே அவரை பேர குழந்தைகள் அடக்கம் செய்து வைத்தனர்.

இரகசியம்!
இவர் இவ்வளவு நீண்ட நாட்கள் உயிர் வாழ்ந்ததன் இரகசியம் என்னவென்று யார் கேட்டாலும், பொறுமை. பொறுமை தான் எல்லாவற்றுக்கும் தேவையானது என பதில் கூறி இருக்கிறார் கோத்தோ.



Click it and Unblock the Notifications











