Latest Updates
-
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
கேங் ரேப் செய்தது மட்டுமின்றி, அதை ஃபேஸ்புக் லைவ்ஸ்ட்ரீம் செய்த கொடூரர்கள்!
தங்கள் மரணத்தை ஃபேஸ்புக் லைவில் ஒளிப்பரப்பிய நபர்கள்!
காதல் மட்டும் அல்ல மரணமும் கூட கடிதத்தில் துவங்கி இன்று ஃபேஸ்புக்கில் வந்து நிற்கிறது. ஆம், இன்று ஃபேஸ்புக் லைவில் தங்கள் மரணத்தை லைவ் ஸ்ட்ரீமிங் செய்வது ஏதோ வேடிக்கையாக போய்விட்டது.
இதை எப்படி தடுப்பது என தெரியாமல் பெற்றோரில் இருந்து மார்க் வரை பலரும் தலையை பியித்துக் கொண்டு நிற்கின்றனர்.
தற்கொலை மட்டுமல்ல, உடலுறவு வைத்துக் கொள்வது, கொலை செய்வது, கற்பழிப்பு என தமிழ் செய்தி சேனல்களை காட்டிலும் ஃபேஸ்புக் லைவ் படு மோசமாக போய்க்கொண்டிருக்கிறது...

#1
வூட்டிசன் வோங்டாலே எனும் நபர் தனது மனைவிக்கு வேறு நபருடன் கள்ளத் தொடர்பு இருப்பதை சந்தேகித்து தான் தற்கொலை செய்துக் கொண்டது மட்டுமின்றி, தனது 11 மாத குழந்தையையும் கொலை செய்தார். அதை அவர் ஃபேஸ்புக் லைவில் பதிவு செய்திருந்தார்.

#2
15 வயதே நிரம்பிய இளம் பதின் வயது பெண்ணை கற்பழித்து மட்டுமின்றி. அந்த சம்பவத்தை ஃபேஸ்புக்கில் லைவ் பதிவு செய்தது ஒரு கும்பல். அது அந்த பெண்ணின் தாயிக்கே அந்த பெண்ணின் கசின் ஒருவரால் ஷேர் செயப்பட்டது.

#3
மும்பையை சேர்ந்தஅருண் பரத்வாஜ் என்ற இளைஞர் தாஜ் ஹோட்டலில் இருந்து குதித்து தற்கொலை செய்துக் கொண்டார். இவருக்கு மது அடிக்ஷன் இருந்தது குறிப்பிடத்தக்கது. தான் தற்கொலை செய்துக் கொள்வதை அருண் ஃபேஸ்புக் லைவில் பதிவு செய்திருந்தார்.

#4
கேட்லின் நிகோல் டேவிஸ் என்ற பெண் தான் தனது உறவினர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்படுவதாக கூறி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இதை தனது ஃபேஸ்புக் லைவில் பதிவு செய்திருந்தார்.

#5
19 வயதே நிரம்பிய செரீனா மேக்கே எனும் பெண்ணை அவரது உடன் படிக்கும் வகுப்பு தோழர்கள் அடித்தே கொன்றனர். அந்த பெண் அழுது, எவ்வளவு கெஞ்சியும் அவரை விடவில்லை. இதை அந்த பதின் வயது கொலையாளிகள் ஃபேஸ்புக் லைவில் பதிவிட்டனர்.

#6
ஜாரெட் மேக்லேமோர் தன்னை தானே எரித்துக் கொண்டார். இவர் தனது முன்னாள் காதலி வீட்டு முன் எரித்துக் கொண்டு, அவரது வீட்டினுள் நுழைய முயற்சி செய்தார். அவர் கதவை சாத்திவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

#7
எர்டோகன், 22. தனது காதலி பிரிந்து சென்றதை ஏற்றுக் கொள்ள முடியாத இவர், தனது நண்பர்கள், உறவினர்களிடம் இறந்து போக போவதாக கூறி வந்தார்.
யாரும் அதை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. திடீரென ஒரு நாள் ஃபேஸ்புக் லைவ் ஸ்ட்ரீம் செய்து துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

#8
கிளாரி லின், 31. இவர் தைவான் நாட்டை சேர்ந்தவர். தனது பிறந்தநாள் அன்று காதலன் தன்னை கண்டுகொள்ளவில்லை என்பதால் தனது தோழிகளுடன் பேசிக் கொண்டே லைவ் ஸ்ட்ரீம் செய்து தற்கொலை செய்துக் கொண்டார்.
ஃபேஸ்புக்கில் தற்கொலை செய்துக் கொள்ள வேண்டாம் என வற்புறுத்திய தோழிகளில் ஒருவர் கூட அந்த நேரத்தில் போலீஸ்க்கு கால் செய்யவில்லை என்பது தான் கொடுமை.

#9
பெயர் தெரியாத இந்த சீன பெண் தனது கடைசி தருணங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வந்தார். அவர் சமீபத்தில் தான் காதலனை பிரிந்திருந்தார். தான் இறக்கும் முன் ஒரு பதிவில், " நான் இறந்து பேயாக வந்து உன்னை அச்சுறுத்துவேன்.." என பதிவிட்டிருந்தார்.

#10
நாகியா, 14. தனது அம்மா தன்னை அதிகமாக அடித்து, துன்புறுத்திய காரணத்திற்காக. அவருடன் சாட்டிங் செய்து தற்கொலை செய்துக் கொள்வதாக கூறி பிறகு ஃபேஸ்புக் லைவ் ஸ்ட்ரீமிங்கில் தற்கொலை செய்துக் கொண்டார்.



Click it and Unblock the Notifications