வீட்டு வாடகைக்கு பதில் செக்ஸ், முக்கிய நகரங்களில் பெண்களை அச்சுறுத்தும் உரிமையாளர்கள்!

பிரித்தானியவில் வீடு இல்லாத ஆண்கள், பெண்கள் வாடகைக்கு பதிலாக உரிமையாளர்களிடம் உறவில் ஈடுப்பட்டு வருவதாக அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியாகியுள்ளன.

பிரட்டனில் சமீபக் காலமாக ஒரு அதிர்ச்சிகரமான நடைமுறை அதிகம் காட்டுதீ போல பரவி வருகிறது. சொந்தமாக வீடு வைத்திருப்பவர்கள், வீடு இல்லாத ஆண், பெண்களுக்கு வாடகைக்கு விடும் போது, பணத்திற்கு பதிலாக, தங்களுடன் செக்ஸ் வைத்துக் கொள்ள அழைப்பதாக பரவலாக மக்கள் கூறுகின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மோசமான சூழல்!

மோசமான சூழல்!

தங்கள் மோசமான சூழல் மற்றும் வீடு இல்லாத பரிதாப நிலையின் காரணமாக, வசிக்க வீடு இல்லாத ஆண்களும் பெண்களும் உரிமையாளரின் விருப்பத்திற்கு சம்மதம் தெரிவித்து அவர்களுடன் உறவு வைத்து வருகிறார்கள் என கூறப்படுகிறது.

எந்தெந்த நகரங்கள்!

எந்தெந்த நகரங்கள்!

லண்டன், ரோசெஸ்டர், பிரைட்டன் உள்ளிட்ட சில முக்கிய நகரங்களில் இந்த சூழல் அதிகமாக அரங்கேறி வருகிறது என ஒரு ஆய்வறிக்கை தகவல் கூறுகிறது.

விசாரணை!

விசாரணை!

இதுகுறித்து அந்த ஆய்வறிக்கையில் மேலும், சில தகவல்கள் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வில் வீடு இல்லாத நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். இதில் 25% பேர் வாடகை கட்டணத்திற்கு பதிலாக வீட்டு உரிமையாளருடன் உறவு வைத்துக் கொள்வது உண்மை தான் என பகிரங்கமாக தெரிவித்துள்ளனர்.

விருப்பம்!

விருப்பம்!

14% பேர் வீட்டு உரிமையாளருடன் இதுபோன்ற ஒப்பந்தத்தின் பேரில் உறவில் இணைவதில் விருப்பம் உள்ளது என அதிர்ச்சி அளிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளனர்.

தடையில்லை!

தடையில்லை!

இங்கிலாந்தில், இது போன்ற ஒப்பந்தங்களில் ஈடுபடுவதற்கு தடை ஏதும் இல்லை, சட்டப்பூர்வமாகவும் தடைகள் இல்லை எனவும். இதனால் பல பெண்கள் துன்பத்திற்கு ஆளாகின்றனர் என்றும் பெண்கள் நல ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்!

நாடாளுமன்ற உறுப்பினர்!

இது குறித்து, பீட்டர் கைல் என்பவர், இது போன்ற சம்பவங்களுக்கு எதிராக அரவு சட்டம் அறிவிக்க வேண்டும் என்றும். இது பெண்களுக்கு மிகுந்த அச்சுறுத்தலான விஷயம் என்றும் கூறியுள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion