நாட்டியத்திற்கே ராஜாவான சிதம்பர நடராஜர் பற்றிய கதை!

By Karthikeyan Manickam

இந்துக் கடவுள்களில் பிரபலமானவர் நடராஜர். நடனமிடும் பாவணையில் இருக்கும் சிவனே நடராஜர் என்று அழைக்கப்படுகிறார். நடராஜர் என்றால் நாட்டியத்திற்கே ராஜா என்றும் பொருள்.

அரக்கர்களை அழிப்பது போலச் சித்தரிக்கப்படுவதால், நடராஜர் எப்போதும் கோபத்துடன் தான் காட்சியளிப்பார். ஆனால் அவர் இசையிலும், நடனத்திலும் கைத்தேர்ந்தவர் என்பது மிகச் சிலருக்குத்தான் தெரியும். அறியாமையை நடனம், இசை ஆகியவற்றின் அறிவோடு தான் வெல்ல முடியும் என்பதைத் தான் இந்த நடராஜ அவதாரம் வலியுறுத்துகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நடராஜர் போஸின் தத்துவம்

நடராஜர் போஸின் தத்துவம்

சோழர்கள் காலத்திய வெண்கலச் சிலைகளில் தான் சிவன் முதன் முதலாக நடராஜராகச் சித்தரிக்கப்பட்டார். தகதகவென எரியும் தணலின் மேல் அபஸ்மரா என்ற அசுரனைக் கொன்று அவன் மேல் வலது காலை மட்டும் ஊன்றி இடது காலைத் தூக்கிக் கொண்டு அவர் கொடுக்கும் போஸ் தான் அது. மேலே உள்ள வலது கையில் உடுக்கை இருக்கும். கீழே உள்ள வலது கை 'யாரும் பயப்படத் தேவையில்லை' என்று கூறும் விதமாகக் காட்சியளிக்கும்.

அறியாமை vs. அறிவு

அறியாமை vs. அறிவு

அறியாமையின் அறிகுறியாக அந்தக் காலத்தில் அபஸ்மரா என்பவன் இருந்தான். குள்ள வடிவத்தில் இருந்த அவனைக் கொன்றால் அறிவுக்கும் அறியாமைக்கும் இடையிலான பேலன்ஸ் போய்விடும் என்றொரு நிலை. அவனைக் கொல்வது என்பது முயற்சி, அர்ப்பணிப்பு, கடும் உழைப்பு இல்லாமல் அறிவைப் பெறுவதற்குச் சமம் என்றும் ஒரு நிலை.

வதம் செய்த நடராஜர்

வதம் செய்த நடராஜர்

இதனால் அவன் தான்தான் எல்லாமே என்ற அகந்தையுடன் இருந்தான். சிவனுக்கே பயங்கர சவால்களையும் கொடுத்தான். இதற்குப் பிறகு தான் நடராஜர் அவதாரம் எடுத்து, ருத்ர தாண்டவமாடி, அவனைத் தன் கால்களில் மிதித்து வதம் செய்தார்.

ஆனந்தத் தாண்டவம்

ஆனந்தத் தாண்டவம்

நடனம் என்பது இந்தியக் கலாச்சாரத்தில் ஊறிப் போன ஒன்று. நடனத்தின் மூலம் கடவுளுடன் ஒன்றி இருக்கலாம் என்பதையும் நடராஜ அவதாரம் விளக்குகிறது. இதுதான் 'ஆனந்தத் தாண்டவம்' என்று அழைக்கப்படுகிறது. மேலும் பிறப்புக்கும், இறப்புக்கும் இடையிலான தத்துவத்தையும் இது வலியுறுத்துகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion