Latest Updates
-
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்!
புதிய பாபா வாங்காவின் கணிப்பு படி வரப்போகிற ஜூலை மாதத்தில் இந்த நாட்டில் சுனாமியால் பேரழிவு வரப்போகுதாம்...!
பாபா வாங்கா, நோஸ்ட்ரடாமஸ் போன்ற தீர்க்க தரிசிகள் கடந்த காலங்களில் எதிர்காலத்தைப் பற்றிய பல கணிப்புகளை செய்தனர். அவர்களின் பல கணிப்புகள் நிறைவேறியதால் வரலாற்றில் அவர்கள் அழியாப் புகழ் பெற்றனர். தற்போது அவர்களைப் போலவே பலரும் எதிர்காலத்தைப் பற்றிய பல கணிப்புகளை கூறி வருகின்றனர்.
ஜப்பானிய மங்கா கலைஞர், எழுத்தாளர் மற்றும் தீர்க்கதரிசியான ரியோ தட்சுகி, சமீப ஆண்டுகளில் அவருடைய பல கணிப்புகள் நிறைவேறியதால் அவர் 'புதிய பாபா வாங்கா' என்று அழைக்கப்படுகிறார். அவர் தனது சொந்த நாடான ஜப்பானுக்கு மற்றொரு அதிர்ச்சியூட்டும் கணிப்பை இப்போது கூறியுள்ளார்.

ஜூலை 2025 இல் ஒரு மெகா சுனாமி ஜப்பானை அழிக்கும் என்று தட்சுகி கணித்துள்ளார், மேலும் இந்த தீர்க்கதரிசனம் நாட்டில் பீதியைத் தூண்டியுள்ளது, இதனால் பெரும்பாலான பயணிகள் தங்கள் முன்பதிவுகளை ரத்து செய்துள்ளனர், இதனால் ஜப்பானிய அரசாங்கம் அதன் குடிமக்களிடம், தட்சுகியின் மோசமான கணிப்புகளுக்கு செவிசாய்க்க வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளது.
ஜப்பானில் மெகா சுனாமி
சுவாரஸ்யமாக, அடுத்த மாதம் ஜூலை 5 ஆம் தேதி ஜப்பானில் ஒரு பேரழிவு ஏற்படக்கூடும் என்று விஞ்ஞானிகளும் கணித்துள்ளனர், இதை பல ஆண்டுகளுக்கு முன்பே ரியோ தட்சுகி கணித்ததாக கார்டியன் அறிக்கை தெரிவிக்கிறது. ஜப்பான் கடலுக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையில் கடலுக்கு அடியில் ஏற்படும் டெக்டோனிக் செயல்பாடுகளால் ஏற்படும் ஒரு பெரிய பூகம்பத்தால் மெகா சுனாமி போன்ற பேரழிவு ஏற்படும் என்று பலர் நம்புகிறார்கள்.
தட்சுகியின் தீர்க்க தரிசனங்களுக்கு அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் இல்லை என்றாலும், அவர் தொலைநோக்குப் பார்வையை பரிசாகப் பெற்றுள்ளார் என்று பலர் நம்புகிறார்கள், ஏனெனில் அவரது முந்தைய தீர்க்கதரிசனங்கள் பல உண்மையாக நடந்துள்ளது. அவர் ஏற்கனவே 2011-ல் ஜப்பானில் நிகழ்ந்த டோஹோகு பூகம்பம் மற்றும் சுனாமியை துல்லியமாக கணித்துள்ளார்.
பயண முன்பதிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன
ரியோ டாட்சுகியின் ஆபத்தான தீர்க்க தரிசனத்தைத் தொடர்ந்து, ஜப்பானுக்கான பயண முன்பதிவுகள் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளன, மேலும் அந்நாட்டிற்கான விமான முன்பதிவுகள் 83 சதவீதம் குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ப்ளூம்பெர்க் புலனாய்வு அறிக்கையின்படி, ஹாங்காங்கிலிருந்து சராசரி முன்பதிவுகள் 50% குறைந்துள்ளன, ஜூன் மாத இறுதியில் இருந்து ஜூலை தொடக்கத்தில் முன்பதிவுகள் 83% குறைந்துள்ளன.
ஏப்ரல்-மே விடுமுறை நாட்களில் ஜப்பானுக்கான முன்பதிவுகளில் 50% சரிவு ஏற்பட்டதாக ஹாங்காங் ட்ராவல் ஏஜென்சி ஒன்று தெரிவித்துள்ளது, அதே நேரத்தில் பல பயணிகள் இந்த தீர்க்கதரிசனத்தை கருத்தில் கொண்டு முன்பதிவுகளை ரத்து செய்துள்ளனர் அல்லது பயணங்களை ஒத்திவைத்துள்ளனர் என்று அறிக்கை கூறுகிறது.
ஜப்பான் அரசின் வேண்டுகோள்
தட்சுகியின் தீர்க்கதரிசனத்தால் உருவாக்கப்பட்ட பீதியால் கலக்கமடைந்துள்ள ஜப்பானிய அரசாங்கம், "இது முற்றிலும் ஆதாரமற்றது மற்றும் அறிவியல் அடிப்படை இல்லாதது" இது போன்ற கணிப்புகளுக்கு செவிசாய்க்க வேண்டாம் என்று தங்கள் குடிமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
மியாகி மாகாண ஆளுநர் யோஷிஹிரோ முராய், உள்ளூர் ஊடகங்களுக்கு அளித்த அறிக்கையில், சமூக ஊடகங்களில் வரும் வதந்திகளால் சுற்றுலா பாதிக்கப்பட்டால் அது நாட்டிற்கு பெரிய பிரச்சனையாக மாறும் என்று கூறினார். மேலும் "கவலைப்பட ஒன்றுமில்லை, ஏனென்றால் ஜப்பானியர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல மாட்டார்கள். மக்கள் வதந்திகளைப் புறக்கணித்து பயணம் செய்வார்கள் என்று நம்புகிறேன்," என்று கூறினார்.
தட்சுகியின் கணிப்புகளுக்கு அப்பால், ஜப்பானிய அதிகாரிகளும் பூகம்ப அபாயங்கள் குறித்து கவலை கொண்டுள்ளனர், ஜப்பானின் பசிபிக் கடற்கரையில் ஒரு பெரிய நிலநடுக்கத்தால் 298,000 பேர் வரை கொல்லப்படலாம் என்று ஏப்ரல் மாதத்தில் ஒரு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. எனவே இந்த கணிப்பு பலிக்க அதிக வாய்ப்புள்ளது என்று மக்கள் நம்புகிறார்கள்.



Click it and Unblock the Notifications
