Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!
நடந்து செல்லும்போது சாலையில் பணம் கிடைத்தால் என்ன அர்த்தம் தெரியுமா?
நீங்கள் செல்லும் வழியில் ரூபாய் நோட்டுகள் அல்லது சில்லறைகள் சாலையில் பார்த்ததுண்டா? அப்படி அதை பார்க்கும்போது பலரது மனதில் குழப்பம் எழும்.. அதை எடுக்கலாமா? வேண்டாமா? அப்படி எடுத்தால் இந்தப் பணத்தை என்ன செய்வது? என பலவிதமாக சிந்திப்பார்கள்..
சிலர் அதை எடுத்து தங்களிடம் வைத்திருக்கிறார்கள், சிலர் அதை ஏழைகளுக்கு கொடுக்கிறார்கள் அல்லது கோயிலுக்கு காணிக்கையாக
கொடுக்கிறார்கள்.. ஆனால், சாலையில் கிடக்கும் பணத்தை எடுக்க வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது. சாலையில் பணம் எடுப்பது நல்லதா கெட்டதா? என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..

சாலையில் யாரோ ஒருவர் தவறவிட்ட அல்லது தொலைத்த பணத்தை நிச்சயமாக எடுக்கக்கூடாது. ஆனால் நீங்க செல்லும் வழியில் பணம் இருந்தால் அதற்கு ஆன்மீக ரீதியான அர்த்தம் உள்ளது.. ஜோதிட சாஸ்திரங்கள் என்ன சொல்லுகிறது தெரியுமா?
1. சாலையில் விழுந்த பணத்தை, குறிப்பாக நாணயங்களை எடுப்பது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. சாலையில் ஒரு நாணயத்தை கண்டறிவது உங்கள் முன்னோர்களின் ஆசீர்வாதத்தைப் பெறுவதாக வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.. அதுமட்டுமல்லாமல் இப்போது மகாளய பட்சம் நடக்கிறது.. இந்த நேரத்தில் நீங்கள் சாலையில் கசையோ அல்லது பணத்தையோ பார்த்தால் அது உங்களுடைய முன்னோர்களின் நேரடி ஆசீர்வாதத்தை பெற்றதற்கு சமம் என்கிறது சாஸ்திரங்கள்..
2. நீங்கள் சாலையில் செல்லும் நேரத்தில் கீழே விழுந்த ஒரு நாணயம் உங்கள் கண்ணில் பட்டால், உங்கள் வேலையில் நீங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவீர்கள் என்பதற்கான அறிகுறியாகும். மற்றும் நீங்கள் விரைவில் ஒரு புதிய வேலையைத் தொடங்கலாம் என்பதற்கான அறிகுறியாக இது இருக்கலாம், மேலும் இந்த வேலை உங்களுக்கு வெற்றியையும் பணத்தையும் நிச்சயமாக கொண்டு வரும்.
3. எதிர்பாராத நேரத்தில் நீங்கள் சாலையில் பணம் ரூபாய் நோட்டுகள் அல்லது நாணயங்களை பார்த்தால் இறையருள் உங்களுக்கு இருக்கிறது என்றும் விரைவிலேயே மிக நல்ல செய்தியைப் பெறுவீர்கள் என்றும் அர்த்தம்.
4. கத்தையாக அல்லது பர்ஸ் நிறைய பணம் கிடைத்தால், பூர்வீக சொத்து கிடைக்கும் என்று அர்த்தம். ஆனால் தொகை கொஞ்சம் அதிகமாக இருந்தால் உரியவரிடம் கொடுத்து விடுங்கள்.. அதுவே உங்களுக்கு மிக பெரிய அதிர்ஷடத்தை தேடி தரும்..
5. திடீரென்று கீழே விழுந்த பணம் கிடைத்தால், அது உங்கள் வாழ்க்கையில் நேர்மறையான விஷயங்கள் நடக்க போகிறது என்று அர்த்தம்.. இதனுடன், நீங்கள் சில நிதி சிக்கல்களால் போராடிக் கொண்டிருந்தால், திடீரென்று எங்காவது பணத்தைப் பார்த்தால், அது நல்ல காலம் வரப்போகிறது என்பதைக் குறிக்கிறது.
6. ஆனால் வழியில் பணத்தை பார்ப்பது ஒரு நல்ல சகுனம் என்றாலும் இந்த பணத்தை வீண் செலவு செய்யாமல் வைத்திருப்பது நல்லது. சாலையில் நம் கண்ணில் படும் சில்லறைகளோ அல்லது நோட்டுக்களோ நமக்கு சொந்தம் இல்லாதவை அவற்றை உரியவரிடம் கொண்டு சேர்ப்பதே அறம்.
7. அதை அதிர்ஷ்டம் என வைத்துக்கொள்வது அறம் இல்லை. ஆகவே அந்த தொகை சிரிய தொகையாக இருந்தால் பிரச்சனை இல்லை.. ஆனால் கொஞ்சம் அதிகமான தொகையாக இருந்தால் அதற்கு உரியவரிடம் தேடிக் கொண்டுபோய் கொடுத்து விடுங்கள்.. அவர் அதை மருத்துவ செலவுக்காகக்கூட வைத்திருக்கலாம்.. அப்படி செய்வதினால் உங்களுக்கு நல்லதே நடக்கும் என்று சாஸ்திரங்கள் கூருகின்றன..



Click it and Unblock the Notifications
