Latest Updates
-
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
56 லட்ச ரூபாய்க்கு ஏலம் விடப்பட்ட இந்தியாவின் பழைய 100 ரூபாய் நோட்டு... அப்படி என்ன ஸ்பெஷல் இந்த நோட்டில்?
பழங்கால பொருட்களின் மதிப்பு காலப்போக்கில் அதிகரிக்கிறது. அதனால்தான் பண்டைய கால பொருட்கள் தற்போது பெரும் தொகைக்கு ஏலம் எடுக்கப்படுகிறது. அந்த வகையில் சமீபத்தில் லண்டன் ஏலத்தில் அரிய இந்திய ரூ.100 ரூபாய் நோட்டு ரூ.56 லட்சத்திற்கு ஏலம் போனது
இது பழங்கால பொருட்களை சேகரிப்பாளர்கள் மற்றும் வரலாற்று ஆர்வலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 'ஹஜ் நோட்டு' என்று குறிப்பிடப்படும் இந்த தனித்துவமான நோட்டு, 1950 களில் அச்சிடப்பட்டது, அப்போது இந்திய ரிசர்வ் வங்கி வளைகுடா நாடுகளுக்கு புனித யாத்திரை செல்லும் இந்திய யாத்ரீகர்களுக்கு இதை வழங்கியது.

HA 078400 என்ற தொடர் எண்ணைக் கொண்ட இந்த நோட்டு, வரலாற்றின் முக்கியமான பொருளாக மட்டும் இல்லாமல், இது பொருளாதார வரலாற்றில் ஒரு சுவாரஸ்யமான அத்தியாயத்தின் ஒரு சாட்சியாக உள்ளது. அப்போது, இந்திய ரிசர்வ் வங்கி வழக்கமான இந்திய ரூபாயை வைத்து சட்டவிரோதமாக தங்கம் வாங்குவதைத் தடுக்க இதுபோன்ற நோட்டுகளை வெளியிட்டது. இந்த 'ஹஜ் நோட்டுகள்' வளைகுடா நாடுகளான ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், பஹ்ரைன், குவைத் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளில் மட்டுமே சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும், எனவே இது புதுமையானதாகவும் ஆனால் சட்டவிரோத பரிமாற்றத்தையும் தடை செய்வதற்காகவும் அறிமுகப்படுத்தப்பட்டது.
1961 ஆம் ஆண்டு, குவைத் அதன் பணத்தை அச்சிடத் தொடங்கியது, எனவே மற்ற அனைத்து நாடுகளும் அதைப் பின்பற்றின. இது ஹஜ் நோட்டுகளின் வழக்கத்தை மெதுவாக குறைக்க வழிவகுத்தது, 1970 களில் அவற்றின் அச்சிடுதல் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இன்று, இந்த நோட்டுகள் வரலாற்று பொருட்கள் சேகரிப்பாளர்களால் மதிப்புமிக்க பொருளாகக் கருதப்படுகின்றன. இதற்கு காரணம் அவற்றின் அரிதான தன்மை காரணமாக மட்டுமல்ல, அவற்றின் சிறப்பு அம்சங்களும்தான்.
இந்த சிறப்பு ரூபாய் நோட்டுகளின் தனித்துவமான அம்சம், அவற்றின் தொடர் எண்களில் தோன்றும் "HA" என்ற சீரியல் நம்பர்தான். அவை வழக்கமான இந்திய ரூபாய் களிலிருந்து நிறத்தால் வேறுபட்டிருந்தன, இது இந்த நோட்டுகளின் தனித்துவத்தை அதிகரித்தன.
சமீபத்திய ஏலத்தில், பழங்கால இந்திய ரூபாய் நோட்டுகள் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தது முதல் முறை அல்ல. மே 2024 இல், 1918 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட 2 ரூபாய் 10 ரூபாய் நோட்டுகள் முழுமையாக ரூ.6.90 லட்சம் மற்றும் ரூ.5.80 லட்சம் விலையில் விற்பனை செய்யப்பட்டன. இந்த ரூபாய் நோட்டுகள் அவற்றுக்கென தனித்துவமான வரலாற்றைக் கொண்டுள்ளன.
அவை முதலாம் உலகப் போரின் போது ஒரு ஜெர்மன் யு-படகால் டார்பிடோ செய்யப்பட்ட பிரிட்டிஷ் கப்பலான எஸ்எஸ் ஷிராலாவில் இருந்தன. இத்தகைய ஆபத்தான நிகழ்வில் இருந்து தப்பிப்பிழைப்பது இந்த கலைப்பொருட்களுக்கு நம்பமுடியாத வரலாற்று முக்கியத்துவத்தை சேர்க்கிறது மற்றும் கடந்த காலத்தின் விலைமதிப்பற்ற நினைவுச்சின்னங்களாக அமைகிறது.
ஹஜ் நோட்டுகளும், கப்பல் விபத்தில் சிக்கிய நூற்றாண்டு பழமையான நோட்டும், அன்றும் இன்றும் இணைந்த வரலாற்றுடன் நிறைந்த அத்தியாயங்களை உருவாக்குகின்றன, மேலும் மிகவும் எதிர்பாராத சூழல்களில் நமது வரலாற்றை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன.



Click it and Unblock the Notifications
