Latest Updates
-
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க
19 லட்சம் கோடி சொத்து 50 ரோல்ஸ் ராய்ஸ் கார் என இந்தியாவின் முதல் கோடீஸ்வரராக இருந்த இந்த ராஜா யார் தெரியுமா?
இந்தியாவில் கோடீஸ்வரர் என்றாலே நம் நினைவிற்கு முதலில் வருவது முகேஷ் அம்பானியும், கௌதம் அதானியும்தான். ஏனெனில் தற்போதைய இந்தியாவில் அவர்களின் செல்வாக்கும், அவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளே அதற்கு சாட்சி.
இவர்கள் மட்டுமின்றி வேறுசில தொழிலதிபர்களும் குறிப்பிடத்தக்க வகையில் பெரும் செல்வந்தர்களாக மாறி வருகின்றனர். நாம் அவர்களைப் பற்றிய கதைகளை தொடர்ந்து படித்து வருகிறோம். தொழில்நுட்பமும், அரசியலும் இணைந்து நிறைய கோடீஸ்வரர்களை உருவாக்கி வருகிறது. ஆனால் செல்வத்தைப் பெறுவது மிகவும் சவாலாக இருந்த காலகட்டத்திலேயே இந்தியாவிலேயே மிகப்பெரிய கோடீஸ்வரராக இருந்தவரைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

இந்தியாவின் முதல் கோடீஸ்வரர் யார்?
ஹைதராபாத்தின் இறுதி ஆட்சியாளரான மிர் உஸ்மான் அலி கான், தற்போதைய மதிப்பில் 19 லட்சம் கோடி ரூபாய் ($230 பில்லியன்) சொத்துக்களுடன் இந்தியாவின் முதல் பில்லியனர் என்று அறியப்படுகிறார். கிழக்கிந்திய கம்பெனி அவரை இந்தியாவின் முதல் பில்லியனர் என்று அங்கீகரித்தது குறிப்பிடத்தக்கது.
அறிக்கைகளின் படி, நிஜாம் ஒஸ்மான் அலியின் அளப்பரிய செல்வம் அமெரிக்க மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தோராயமாக 2% ஆக இருந்தது என்று கூறுகிறது. நிஜாம் உஸ்மான் அலி உலகின் மிகப் பெரிய பணக்காரராகக் கருதப்படுகிறார் என்று அறிக்கை வலியுறுத்தியது. ஹைதராபாத்தை ஆண்ட கடைசி நிஜாமும் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
நிஜாம் மிர் உஸ்மான் அலி கானின் அபரிமிதமான செல்வத்திற்கு முதன்மையான காரணமாக இருந்தது கோல்கொண்டா சுரங்கம்தான், இது இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பிரபலமான பல வைரங்களை அளித்தது. அவர் உலகப் புகழ்பெற்ற ரோல்ஸ் ராய்ஸ் கார்களிலேயே 50 வைத்திருந்தார் மற்றும் 1000 கோடி ரூபாய் மதிப்பிலான வைரத்தை வைத்திருந்தார், அதை அவர் பேப்பர் வெயிட்டாக பயன்படுத்தியதாக ஒரு செவிவழி செய்தி கூறுகிறது.
இவை மட்டுமின்றி, நிஜாம் அலி ஒரு தனியார் விமான நிறுவனத்தை வைத்திருந்தார், 400 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள நகைகளை சேகரித்தார், மேலும் 100 மில்லியன் பவுண்டு மதிப்புள்ள தங்கத்தையும் வைத்திருந்தார்.
நிஜாம் உஸ்மான் அலி, கோஹினூர், ஹோப், தர்யா-இ நூர், நூர்-உல்-ஐன், பிரின்சி, ரீஜண்ட் மற்றும் விட்டல்ஸ்பாக் உள்ளிட்ட புகழ்பெற்ற வைரங்களின் உரிமையாளராகவும் இருந்தார்.
ஆட்சிமுறை
நிஜாம் உஸ்மான் அலி, 1914 இல் அரியணை ஏறிய மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, முதல் உலகப் போர் தொடங்கியது. அறிக்கைகளின்படி, அவர் ஆங்கிலேயர்களுக்கு கணிசமான பொருள், இராணுவம் மற்றும் நிதி உதவிகளை வழங்கினார். 1917 இல் உஸ்மானியா பல்கலைக்கழகத்தை நிறுவுவதில் அவர் முக்கியப் பங்காற்றினார், இது மாநிலத்தின் முதல் கல்வி நிறுவனமாகவும், கல்வியின் முன்னணி மையமாகவும் மதிக்கப்படுகிறது.
1921 ஆம் ஆண்டில் வெளிவந்த அறிக்கையின் படி, நீதித்துறை மற்றும் நிர்வாகப் பிரிவினை செயல்படுத்துவதில் அவர் முன்னோடியாக இருந்தார். ஹைதராபாத்தின் நவீன வளர்ச்சியை மனதில் வைத்து, பல்வேறு பொது கட்டமைப்புகளின் கட்டுமானம் மற்றும் புதுப்பித்தல் ஆகியவற்றை மேற்பார்வையிடும் பொறுப்பை அவர் ஒரு குழுவை நிறுவினார்.
வாழ்க்கைமுறை
இந்தியாவிலேயே மிகப்பெரிய கோடீஸ்வரராக இருந்த போதிலும், நிஜாம் உஸ்மான் அலி கான் சிக்கனமானவராகவும், தூய்மையில் அக்கறையற்றவராகவும் அறியப்பட்டார். அறிக்கைகளின்படி, அவர் தனது படுக்கையறையை வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே சுத்தம் செய்வார். மேலும் அளவற்ற செல்வம் இருந்தபோதிலும், அவர் தனது விருந்தினர்களை உபசரிப்பதில் கூட கஞ்சத்தனத்துடன் இருந்தார், அவரை பார்க்க வருபவர்களுக்கு வெறும் பிஸ்கட் மட்டுமே பரிமாறினார். இறுதியில் பிப்ரவரி 24, 1967 அன்று தனது 80 வயதில் காலமானார்.



Click it and Unblock the Notifications
