Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முந்தைய நாளான ஆகஸ்ட் 14, 1947 என்னென்ன முக்கிய சம்பவங்கள் நடந்தது தெரியுமா?
Independence Day 2023: இந்தியாவின் மிகவும் முக்கியம் வாய்ந்த நாளான சுதந்திர தினம் வந்துவிட்டது. சுதந்திர தினம் இந்திய துணைக் கண்டத்தின் வரலாற்றில் முக்கிய திருப்புமுனையாகும். 200 ஆண்டுகால அடிமைத்தனத்திற்குப் பிறகு ஆகஸ்ட் 14 அன்று, நாடு மகிழ்ச்சியுடன் இருந்தது மற்றும் சுதந்திரத்தின் எதிர்பார்ப்பில் உற்சாகமாக இருந்தது.
ஒருபுறம், கொடூரமான பிரிவினை வன்முறையின் நிழலில் இருந்து நாடு இன்னும் மீண்டு வந்தது, மறுபுறம் புதிதாக வரையறுக்கப்பட்ட எல்லைகளுக்குள் மக்கள் அகதிகளாக தஞ்சம் அடைந்து கொண்டிருந்தனர். சுதந்திரம் அடைந்ததும், நம் தேசியக்கொடி செங்கோட்டையில் ஏற்றப்பட்டதும்தான் நம் நினைவில் இருக்கும்.
ஆனால் சுதந்திரத்திற்கு முந்தைய நாள், அதாவது 1947, ஆகஸ்ட் 14 அன்று பல சுவாரஸ்யமான மற்றும் வரலாறு நிகழ்வுகள் நடந்தன. நம்மில் பலரும் அதனை அறியாமல் இருப்பது துரதிர்ஷ்டவசமானது. இந்த பதிவில் அந்த நாளில் நடந்த சம்பவங்கள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.
பாகிஸ்தானின் முதல் பிரதமர்
பாகிஸ்தான் அதன் முதல் கவர்னர் ஜெனரல் முகமது அலி ஜின்னாவைப் பெற்றது, மேலும் லியாகத் அலி கான் பாகிஸ்தானின் முதல் பிரதமராக அறிவிக்கப்பட்டார்.
தேசியக்கொடி
இந்திய பெண்கள் சார்பில் ஹன்சா மேத்தா, இந்திய அரசியல் நிர்ணய சபைக்கு தேசியக் கொடியை வழங்கினார். அவர் தனது உரையில், "நாங்கள் காவி நிறத்தை அணிந்துள்ளோம், எங்கள் நாட்டின் சுதந்திரத்திற்காக போராடியுள்ளோம், துன்பங்களை அனுபவித்தோம், தியாகம் செய்துள்ளோம்.
இன்று நாம் எமது இலக்கை அடைந்துள்ளோம். நமது சுதந்திரத்தின் இந்த அடையாளத்தை முன்வைத்து, மீண்டும் ஒருமுறை தேசத்திற்கு எங்கள் சேவைகளை வழங்குகிறோம்" என்று கூறினார்.
பிரிட்டிஷ் கொடி
இந்தியாவின் நட்சத்திரம் பொறிக்கப்பட்ட யூனியன் ஜாக் கொடி, வைஸ்ராய் இல்லத்தில் உள்ள கொடிக்கம்பத்தில் இருந்து இறக்கப்பட்ட கடைசி நாள் இது.

முதல் அரசியலமைப்பு சபை
அரசியலமைப்பு சபை மாலை அரசியலமைப்பு மண்டபத்தில் கூடியது, சுதந்திர இந்தியாவின் சட்டப் பேரவையாக அது தயாராகிக்கொண்டிருந்தது.
மக்களின் மகிழ்ச்சி
200 ஆண்டுகால ஆங்கிலேயர் ஆட்சிக்குப் பிறகு சுதந்திரக் காற்றை சுவாசிக்க நள்ளிரவுக்கு முன்பே மக்கள் வீதிகளில் இறங்கினர். நாடு முழுவதும் 'வந்தே மாதரம்' என்ற முழக்கம் மகிழ்ச்சியுடன் எதிரொலித்தது.
நேருவின் உரை
இந்தியாவின் முதல் பிரதம மந்திரி பண்டித ஜவஹர்லால் நேரு, ஆகஸ்ட் 14-15, 1947 நள்ளிரவில் புகழ்பெற்ற "டிரைஸ்ட் வித் டெஸ்டினி" உரையை நிகழ்த்தினார்.
மகாத்மா காந்தி எங்கிருந்தார்?
ஆகஸ்ட் 14, 1947 அன்று, இந்தியா சுதந்திரத்தைக் கொண்டாடத் தயாராகிக்கொண்டிருந்தபோது, தேசத் தந்தை மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி எந்த விழாக்களிலும் ஈடுபடவில்லை. மகாத்மா காந்தி சுதந்திர தினத்தை கல்கத்தாவில் கழித்தார், அங்கு நடைபெற்ற கலவரத்தால் நகரத்தில் அமைதியை மீட்டெடுக்க கடுமையாக பாடுபட்டுக் கொண்டிருந்தார்.



Click it and Unblock the Notifications











