வண்ணமயமான ஆடைகளின் மகிமை!!!

By Super

வண்ணங்கள் கண்ணுக்கு இனியவை. வண்ணமயமான சூழ்நிலை ஒருவகை புத்துணர்ச்சியும், நம்பிக்கையையும் அதிகரிக்க வல்லது. சூழ்நிலையை வண்ணமயமாக்குவது கடினம். ஆனால் நம்மை வண்ணமயமாக ஆக்கி கொள்ளலாம். வண்ணமயமான ஆடைகளை அணிவதால், பார்ப்பவர்களின் கண்களை ஈர்க்கும். நல்ல ஆடைகளாக இருப்பினும், அதனுடன் சரியான நிறம் ஒருங்கினைத்தால் மட்டுமே அழகாக தென்படும். விளம்பரங்களில் இந்த வண்ண ஒருங்கிணைப்பை பயன்படுத்தி தான் மக்களை ஈர்க்கின்றனர்.

* கால நிலைக்கேற்ப வண்ண ஆடைகளை அணிவதும், காரண காரியங்களை பொருத்தி அணிவதும் சிறந்தது. பொதுவாக குளிர் காலங்களில் வெள்ளை, நீலம் என அமைதியை குறிக்கும் வண்ணம் கொண்ட ஆடைகள் மனதிற்கும், பார்ப்பவர்களுக்கும் ஆனந்தத்தை கொடுக்கும். அதே போல் வெயில் காலத்தில் மஞ்சள், ஆரஞ்சு, வெளிர் நீலம் போன்றவை நன்கு எடுத்து காட்டும். மழை காலங்களில் பசுமையை குறிக்கும் பச்சை, மஞ்சள், மெரூன் என்ற நிறங்களில் ஆடைகளை அணிய வேண்டும். வசந்தமான வசந்த காலத்தில் எங்கும் பசுமை நிறைந்து காணப்படும். அதனால் புதினாவின் இலைகள் போல், முட்டை போன்ற வெள்ளை மற்றும் மஞ்சள் நிறத்திலும், இளஞ்சிவப்பு என வசந்த காலத்திற்கு ஏற்றவாறு அணிவதால் அது காலத்தின் தொடர்புடைய ஒரு மென்மையான தோற்றத்தை கொடுக்கும்.

Color Dress

* காலத்திற்கு ஏற்ற "பாணியில்" வண்ணங்கள் கொண்ட ஆடைகளை அணிவது சிறந்தது. எடுத்துக்காட்டாக, பளிச்சிடும் வண்ணங்களான அடர்ந்த மஞ்சள், சிவப்பு போன்ற நிறங்கள் அசிங்கமாக இருக்கும். அதனை தவிர்ப்பது நல்லது. காலத்தின் போக்கும் அவசியம்.

* மக்களுக்கு நினைவூட்டும் விஷயங்கள் நிறைந்த நிறங்களை பயன்படுத்துங்கள். உதாரணமாக, வெளிர் இளஞ்சிவப்பு, பழுப்பு, வெள்ளை போன்ற நிறங்கள், பிடித்தமான ஐஸ்கிரீம் நிறத்தை நினைவுபடுத்தும்.

* சரியான உடைக்கு சரியான வண்ணத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். உதாரணமாக, கோடு போட்ட சட்டைகளை பயன்படுத்த விரும்பினால், அவற்றிற்கு சுண்ணாம்பு பச்சை மற்றும் சிவப்பை தேர்ந்தெடுக்க வேண்டாம்.

* வண்ண சக்கரம் பயன்படுத்தவும். சொற்றொடர் "எதிர் ஈர்க்க," - இதற்கு பொருத்தமான சொல். எடுத்துக்காட்டாக, வெள்ளை மற்றும் கருப்பு கலந்த ஆடைகள் அழகாக இருக்கும். ஊதா மற்றும் பச்சை கூட, சிவப்பு பச்சை, பச்சை மஞ்சள் என நிரப்பு நிறங்கள் என்ற அம்சம் மற்றவரின் கவனத்தை ஈர்க்கும். மேலும் உங்களுக்கென பொருந்தும் சில ஆடைகளை மற்றும் நிறத்திற்கேற்ற ஆடைகளை வெளியில் அணிந்து செல்வது என ஒரு கையொப்ப முறையை பயன்படுத்தலாம்.

* சருமத்திற்கு ஏற்ற வண்ணம் கொண்ட ஆடைகளை பயன்படுத்தவும். பல்வேறு நிறங்கள் உடைய ஆடைகளை முயற்சி செய்து, அவற்றில் தோதுவான நிறங்களை தேர்வு செய்து, எவற்றில் அழகாக தெரிகிறோம் என்று தெரிந்து கொள்ளவும். பசுமை பசுமை என்று சொல்லும் பொழுதே பச்சை நிறம் ஞாபகத்திற்கு வரும். பச்சை கலர் ஆடைகள், வெளிர் நீலம் அழகாக இருக்கும். மிக்ஸ் அண்ட் மேட்ச் (mix and match) என்ற சொல்லிற்கேற்ப, மேலாடை ஒரு வண்ணத்திலும் கீழாடை ஒரு வண்ணத்திலும் கலந்து முயற்சி செய்ய வித்தியாசமாக தென்படலாம். அவ்வாறு அணியும் போது சரியான வண்ணம் பொருந்தும் வகையில் மிக்ஸ் அண்ட் மேட்ச் செய்து அணியவும்.

* முகத்திற்கு எந்த வகை ஆடை மற்றும் நிறங்கள் எடுத்து காட்டுகின்றன என மற்றவர்களின் ஆலோசனை கேட்பது சிறந்தது. மேலும் நிறம் தேர்வு செய்வதற்கு, விளம்பரங்களில் போடப்படும் நிறங்களை முயற்சி செய்தல் ஒரு நல்ல விஷயம்.

ஆகவே எப்போதும் நமக்கென்று ஒரு சொந்த பாணியை உருவாக்கி அதில் நிறம் மற்றும் ஆடைகளின் ஸ்டைல் என உயர்த்தி கொள்வது நல்லது.

Desktop Bottom Promotion