Latest Updates
-
வாழைத்தண்டு வாங்குனா இந்த மாதிரி மோர் கூட்டு செய்யுங்க... வெயில் காலத்துக்கு சூப்பரா குளுகுளுனு இருக்கும்...! -
பிரியாணியின் தலைநகரம் என்று அழைக்கப்படும் இந்திய நகரம் எது தெரியுமா? உங்களுக்கு எந்த பிரியாணி பிடிக்கும்? -
நாவூறும்.. சிக்கன் ரா ரா - சிம்பிளா எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
KFC ஸ்டைல் பாப்கார்ன் சிக்கன் ரெசிபி... சிக்கனை இந்த மாதிரி செஞ்சு பாருங்க... எல்லாரும் ஆசையா சாப்பிடுவாங்க... -
சொந்த நட்சத்திரம் செல்லும் சுக்கிரன்: ஏப்ரலில் இந்த 4 ராசிக்காரர்களின் கையில் பணம் குவியப்போகுது.. -
புதன் சனிபகவானின் நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளில் புரளப் போகும் 3 ராசிகள்... உங்க ராசி இதுல இருக்கா? -
கொங்குநாடு ஸ்டைல் மட்டன் குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 29 மார்ச் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு சோகங்கள் நிறைந்த நாளாக இருக்குமாம்...! -
வார ராசிபலன் (29 March 2026-04 April 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. -
Tamil Nadu Election 2026: நம்ம தமிழ் நாட்டு அரசியல் தலைவர்களின் கல்வித்தகுதி தெரியுமா?
கையில் இந்த ரேகை இருப்பவர்களுக்கு அரசாங்க வேலை கண்டிப்பா கிடைக்குமாம்...உங்க கையில் இருக்கா?
ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு மர்மம்நிச்சயம் ஒளிந்திருக்கும். நமது கையில் இருக்கும் கோடுகள் நம் எதிர்காலத்தை தெரிந்து கொள்வதில் மிகவும் பயனுள்ளவையாக இருக்கும். கையில் உள்ள ரேகைகள் மாறிக்கொண்டே இருக்கும் என்று கூறப்படுகிறது, ஆனால் சில கோடுகள் எப்போதும் இருக்கும் மற்றும் எதிர்காலத்தைப் பற்றிய துல்லியமான அறிகுறிகளைக் கொடுக்கும்.
கையில் உள்ள சில ரேகைகள் ஒரு நபரின் வேலை அல்லது வணிகம் பற்றிய தகவலையும் வழங்குகின்றன. அரசு வேலைக்கு ஆசைப்படுபவருக்கு, அரசு வேலை கிடைக்குமா, கிடைக்காதா என்ற கேள்வி பலரின் மனதில் ஒளிந்திருக்கிறது.

ஒருவரின் கர்மவினைக்கு ஏற்ப, கையில் உள்ள கோடுகளில் மாற்றங்கள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இருப்பினும், கைரேகையின் படி எந்த கோடுகள் மற்றும் நிலைகள் அரசாங்க வேலை பெறுவதற்கான வாய்ப்பைக் குறிக்கின்றன என்பதை இந்த பதவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.
ஒருவரது உள்ளங்கையில் சூரியன் ரேகையில் மேடு இருந்தால், அந்த மேட்டில் எந்த இடையூறும் இல்லாமல் நேர்கோட்டில் இருந்தால், அது அரசு வேலைக்கான வலுவான யோகத்தை உண்டாக்கும்.
ஒருவரின் உள்ளங்கையில் குரு மேட்டை நோக்கி சூரிய ரேகையில் இருந்து கோடு இருந்தால், அத்தகைய நபர் உயர் பதவியில் இருக்கும் அரசு அதிகாரியாக வாய்ப்புள்ளது.
ஒருவரது உள்ளங்கையில் புதன் மேட்டில் முக்கோண வடிவம் இருந்தால், அவர்கள் அரசு வேலையில் உயர் பதவியைப் பெற வாய்ப்புள்ளது.
ரு நபரின் உள்ளங்கையில் ஆயுள் ரேகை குரு மேட்டை நோக்கி ரேகைகளைக் கொண்டிருந்தால்,அத்தகைய நபருக்கு அரசு வேலை கிடைப்பதற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன.
குரு மற்றும் சனி மேட்டுக்கு இடையில் இருந்து விதி ரேகை மற்றும் தலைமை ரேகை குறுக்கிட்டு வெளியே வந்தால், அத்தகையவர்களுக்கு அரசாங்க வேலை கண்டிப்பாகக் கிடைக்கும்.
ஒருவரின் உள்ளங்கையில் குரு மற்றும் சூரியன் மேடுகள் தீர்க்கமாக இருந்தால், அவர்கள் திறமை மற்றும் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் தங்கள் வாழ்நாளில் 30 வயதிற்குள்க்குள் அரசு வேலை பெறலாம்.



Click it and Unblock the Notifications












