Latest Updates
-
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம்
இந்த பிரபல சீரியல் கில்லர்களின் கடைசி வார்த்தைகள் அவங்க பண்ணுன கொலைகளை விட பயத்தை கொடுப்பதாக இருந்ததாம்...!
உலகத்தின் அனைத்து நாடுகளின் வரலாற்றிலும் சில சீரியல் கொலைகாரர்கள் தங்கள் கொடூரமான செயல்களால் அனைவரையும் அச்சத்திற்கு ஆளாக்கியிருப்பார்கள். இப்படிப்பட்டவர்கள்தங்களின் கொடூரமான செயல்களால் சமூகத்தில் மறுக்க முடியாத அடையாளத்தை விட்டுச் சென்றுள்ளனர், அவர்களின் குற்றங்களும், குற்றங்களின் தன்மையும் வரலாற்றில் இரத்தத்தால் எழுதப்பட்டுள்ளன.
இந்த சீரியல் கொலையாளிகளின் இறுதி தருணங்களை ஆராய்வது, இந்த குற்றவாளிகளின் மனதையும், அவர்கள் வாழ்க்கையில் எதிர்கொண்ட சவால்களையும், அவர்கள் மனதில் இருக்கும் இருளையும் பற்றி தெரிந்து கொள்ள உதவும். இந்த பதிவில் உலகின் பிரபலமான தொடர் கொலையாளிகள் இறக்கும் போது கூறிய இரத்தத்தை உறைய வைக்கும் கடைசி வார்த்தைகளையும், அவர்கள் உலகிற்கு விட்டுச் சென்ற கடைசி செய்திகள் என்னவென்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

டெட் பண்டி
அமெரிக்க வரலாற்றின் மிகவும் மோசமான தொடர் கொலையாளிகளில் ஒருவரான டெட் பண்டி 1970-களில் மொத்த அமெரிக்காவையும் பயமுறுத்தினார். அவர் செய்த பல இரக்கமற்ற கொலைகளுக்காக, ஜனவரி 24, 1989 அன்று டெட் பண்டிக்கு மின்சார நாற்காலியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
அவரது இறுதி வார்த்தைகள் சிலிர்க்க வைக்கும் இரகசியமாக இருந்தன: "என் அன்பை என் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் கொடுக்க விரும்புகிறேன் (I'd like you to give my love to my family and friends)." பண்டி இறுதிவரை தனது வசீகரத்தையும் கவர்ச்சியையும் பராமரித்து வந்தார், இன்றும் அவரது வழக்கைப் படிப்பவர்களுக்கு ஒரு நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறார்.
ஜான் வெய்ன் கேசி
அமெரிக்காவின் மற்றொரு பிரபலமான சீரியல் கில்லர் "கோமாளி கொலையாளி" என்று அழைக்கப்படுகிறார், ஏனெனில் அவர் தனது குற்றங்களில் குற்றவாளி என்று நிரூபிக்கப்படுவதற்கு முன்பு போகோ கோமாளியாக பகிரங்கமாக நடித்தார், ஜான் வெய்ன் கேசி 1970 களில் இளம் சிறுவர்களை கடத்தி, அவர்களை கொடூரமாக கொலை செய்வதற்கு முன்பு தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.
33 கொலைகளில் தண்டனை பெற்ற கேசி, 1994 ஆம் ஆண்டு மே 10 ஆம் தேதி விஷ ஊசி மூலம் கொல்லப்பட்டார். அவரது கடைசி வார்த்தைகள் மிகவும் விநோதமானதாக இருந்தது "Kiss my ass". கேசியின் மறுப்பும், வருத்தமின்மையும் கடைசி வரை நீடித்தது.
ஐலீன் வூர்னோஸ்
1989 மற்றும் 1990 க்கு இடையில் ஏழு ஆண்களைக் கொன்ற அமெரிக்காவின் முதல் பெண் தொடர் கொலையாளிகளில் ஒருவராக ஐலீன் வூர்னோஸ் பிரபலமடைந்தார். அவருடைய கதை சோகமும், இருளும் நிறைந்த ஒன்றாகும், அவர் அடிக்கடி தன்னைத் தாக்கிய ஜான்ஸைக் கொன்றாள்.
அவர் மீது கொலை குற்றம் குற்றம் சுமத்தப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது, அவர் அக்டோபர் 9, 2002 அன்று விஷ ஊசி மூலம் கொல்லப்பட்டார். அவரது இறுதி தருணங்களில், வூர்னோஸ் கூறியது மறக்க முடியாதது, "I'd just like to say I'm sailing with the Rock, and I'll be back like Independence Day, with Jesus, June 6th. Like the movie, big mother ship and all. I'll be back.." அவர் இறுதி வரை தனது தண்டனையை எதிர்க்காமல் இருந்தார்.
ஜெஃப்ரி டாஹ்மர்
"மில்வாக்கி கேனிபல்" அல்லது "மான்ஸ்டர் ஆஃப் மில்வாக்கி" என்று அழைக்கப்படும் ஜெஃப்ரி டாஹ்மர், நெக்ரோபிலியா மற்றும் நரமாமிசம் சாப்பிடுவது போன்ற கொடூரமான செயல்களால் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். 17 இளைஞர்களைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட டாஹ்மர், நவம்பர் 28, 1994 அன்று சிறையில் சக கைதியால் கொல்லப்பட்டார்.
அவரது கொலையாளியிடம் அவர் பேசிய இறுதி வார்த்தைகள் வினோதமானவை: "நான் வாழ்ந்தாலும் இறந்தாலும் எனக்கு கவலையில்லை. என்னை தாராளமாக் கொல்லுங்கள்." டஹ்மரின் இந்த இறுதி வார்த்தைகள் அவரது கொடூரமான செயல்களுக்குப் பின்னால் உள்ள வேதனையான ஆன்மாவைக் குறிப்பதாக கூறப்படுகிறது.
கேரி ரிட்க்வே
"கிரீன் ரிவர் கில்லர்" என்று அழைக்கப்பட்ட கேரி ரிட்க்வே பசிபிக்கின் வடமேற்குப் பகுதியை தனது கொடூரமான செயல்களால் அச்சுறுத்தினார், 1980கள் மற்றும் 1990களில் கிட்டதட்ட 49 பெண்களைக் கொன்றார். பரோல் இல்லாத ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ரிட்க்வே மரண தண்டனையைத் தவிர்ப்பதற்கு ஈடாக தனது குற்றங்களை ஒப்புக்கொண்டார்.
அவர் தனது வாக்குமூலத்தில், "நான் பல பெண்களைக் கொன்றேன், அவர்களை நேராக உயிருடன் வைத்திருப்பது எனக்கு மிகவும் கடினமாக இருந்தது" என்று கூறினார். ரிட்க்வேயின் இந்த ஒப்புதல் அவரது கொலைவெறியையும், அடாவடித்தனத்தையும் வெளிப்படுத்தியது.
ஆல்பர்ட் பிஷ்
ஆல்பர்ட் ஃபிஷ், "வுல்ஃப் ஆஃப் வைஸ்டீரியா(Wolf of Wysteria)" என்றும் அழைக்கப்படுகிறார், 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பல கொடூரமான குற்றங்களைச் செய்த ஒரு குழப்பமான பெடோஃபில் மற்றும் கொலைகாரன்.
கிரேஸ் பட் மற்றும் பல குழந்தைகளை கொலை செய்ததற்காக குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட ஃபிஷ் ஜனவரி 16, 1936 அன்று மின்சார நாற்காலியில் அமர வைக்கப்பட்டு கொல்லப்பட்டார். அவரது இறுதி வார்த்தைகள் வினோதமானவை மற்றும் குழப்பமானவை: "நான் ஏன் இங்கு இருக்கிறேன் என்று கூட தெரியவில்லை" என்று கூறினார்.



Click it and Unblock the Notifications












