Latest Updates
-
இன்றைய ராசிபலன் 26 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு பணமும், புகழும் தேடிவரும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பரில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களை செல்வந்தராக்கப் போகுது.! உங்க ராசி என்ன? -
பாபா வங்காவின் கணிப்பு படி செப்டம்பர் மாதத்தில் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
பச்சை சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா வைச்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஒருடைம் இந்த க்ரீமி பாலக் பன்னீர் கிரேவி செய்யுங்க.. டேஸ்ட் அல்ட்டிமேட்டா இருக்கும்... -
பிளாஸ்டிக் நாற்காலிகளின் நடுவில் ஏன் ஒரு துளை உள்ளது தெரியுமா? இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், 1 கப் மைதா மாவும் இருந்தா.. ஈவ்னிங் இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
பூர நட்சத்திரத்திற்குள் நுழையும் சூரியனால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
ரக்ஷா பந்தன் நாளில் உருவாகும் நவபஞ்ச யோகம்: இந்த 3 ராசிக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
Dengue: அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. எச்சரிக்கும் டாக்டர்!
30000 பேர் ஒரே நாளில் இறந்த உலகின் கோரமான விபத்து... உயிர் பிழைத்த 2 பேர்... எப்படி தப்பித்தார்கள் தெரியுமா?
உலகத்தில் இதுவரை பல விபத்துகளில் கோடிக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர். இதில் பல விபத்துக்கள் மிகவும் வினோதமானதாகவும், நம்ப முடியதாகவும் இருந்தன. அப்படிப்பட்ட வினோதமான ஒரு விபத்துதான் மவுண்ட் பீலியில் நடந்த எரிமலை வெடிப்பு.
மவுண்ட் பீலீ என்பது கரீபியன் தீவுகளில் உள்ள மார்டினிக் தீவில் அமைந்துள்ள ஒரு எரிமலை ஆகும். உலகிலேயே மிகப்பெரிய அழிவுகளை ஏற்படுத்திய எரிமலைகளில் இதுவும் ஒன்றாகும். 1902 ஆம் ஆண்டு மே 8 ஆம் தேதி அதிகாலையில், இந்த எரிமலை வெடிப்பு அதன் பாதையில் உள்ள அனைத்தையும் அழிக்கத் தொடங்கியது.

இந்த மிகப்பெரிய எரிமலை வெடிப்பு ஒரே நாளில் 30000 க்கும் அதிகமான மக்களைக் கொன்றது. இந்த எரிமலை செயிண்ட்-பியர் நகரத்தை முற்றிலுமாக அழித்தது, இந்த மோசமான விபத்தில் இரண்டு பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர்.
செயிண்ட் பியர்
"கரீபியனின் பாரிஸ்" என்று அழைக்கப்படும் செயின்ட் பியர் நகரம், மார்டினிக்கின் வடமேற்கு கடற்கரையில், பீலி மலையிலிருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. 1902 ஆம் ஆண்டில், இது ஒரு பிரபலாமான துறைமுக நகரமாக இருந்தது, சர்க்கரை மற்றும் ரம் இங்கிருந்து உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட்டது, மேலும் இது மார்டினிக் கலாச்சார மையமாக கருதப்பட்டது.
1851 ஆம் ஆண்டு முதல் மவுண்ட் பீலி செயலற்ற நிலையில் இருந்தது, அது வடக்கு மார்டினிக் பகுதியில் சாம்பல் மழையை வெளியிட்டது மற்றும் மலையேற்றத்தை விரும்பிய மலையேறுபவர்கள் மத்தியில் பிரபலமாக இருந்தது.
எரிமலை வெடிப்பின் தொடக்கம்
பீலி எரிமலை உறக்கத்தில் இருந்து எழுந்ததற்கான முதல் அறிகுறி பூச்சிகளின் படையெடுப்பு அல்ல. இது ஏப்ரல் 1902 இல் நடுக்கம், கந்தக மேகங்கள் எரிமலையின் கீழே பாயும் மற்றும் எரிமலையின் கால்டெராவில் ஒரு ஏரியின் திடீர் தோற்றத்துடன் தொடங்கியது.
முதல் சிறிய வெடிப்பு மே 2 அன்று ஏற்பட்டது, இந்த வெடிப்பு பறவைகள் மற்றும் மீன்களை கொன்றது. மக்கள் கிராமப்புறங்களை காலி செய்து, பாதுகாப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட செயின்ட் பியருக்குச் செல்லத் தொடங்கினர். இது நடக்கப்போகும் அசம்பாவிதத்தின் ஆரம்பப் புள்ளியாகவே இருந்தது.
அழிவின் தொடக்கம்
மே 5 அன்று முதல் இறப்புகள் நிகழத் தொடங்கின, இது சேறு மற்றும் நீர் நிறைந்த எரிமலைக் குழம்பை வெளிப்படுத்தியது, இந்த லஹார் சர்க்கரை பதப்படுத்தும் ஆலையை அழித்து கிட்டத்தட்ட இரண்டு டஜன் மக்களைக் கொன்றது.
லஹார் தொடர்ந்தது, அதன் கழிவுகளை கடலில் கொட்டியது மற்றும் சுனாமியை ஏற்படுத்தியது, இது செயின்ட் பியரை வெள்ளத்தில் மூழ்கடித்தது. இதில் பாம்புகளும் பூச்சிகளும் வந்தன. சிப்பாய்கள் பாம்புகளை சுடுவதன் மூலம் நகர மக்களைப் பாதுகாக்க முயன்றனர், ஆனால் அந்த பேரழிவிற்கு எதிராக அவர்களின் தோட்டாக்கள் பயனற்றதாக இருந்தது.
செயின்ட் பியரின் அழிவு
இந்த பேரழிவு மே 8, 1902 அன்று காலை 8 மணியளவில் நடந்தது. மலையில் இருந்து சூடான வாயு மற்றும் எரிமலைக் குழம்பு, மணிக்கு நூறு மைல் வேகத்தில் அதன் பக்கங்களில் கீழே விழுந்தது. சில நிமிடங்களில், செயின்ட் பியர் அழிக்கப்பட்டது, இந்த நகரில் வசித்தவர்கள் மூச்சுத்திணறலாலும் மற்றும் எரிந்தும் இறந்தனர்.
தப்பி பிழைத்தவர்கள்
ஒரே நாளில் 30000 பேர் கொல்லப்பட்ட இந்த பேரழிவில் இரண்டு நபர்கள் மட்டுமே தப்பி பிழைத்தனர். அவர்களில் ஒருவர் 25 வயதான லூயிஸ் அகஸ்டே சைபாரிஸ் ஒரு குற்றவாளி, பார் சண்டையின் போது தனது நண்பரை அவர் கண்ணாடியால் குத்தி காயப்படுத்தினார். எரிமலை வெடிப்புக்கு முந்தைய இரவில் லூயிஸ் சிறையிலிருந்து தப்பினார், ஆனால் அவர் மறுநாள் காலையில் மீண்டும் பிடிபட்டார். அதனால் அவர் பாதாள அறையில் அடைக்கப்பட்டார்.
அவர் அடைக்கப்பட்டிருந்த அறையில் காற்றோட்டம் குறைவாக இருந்ததால் அவர் உயிர் பிழைத்தார். அதன்பின் அவர் மிகவும் பிரபலம் ஆனார். இரண்டாவது உயிர் பிழைத்தவர் ஹவிவ்ரா டா இஃப்ரில் என்ற இளம் பெண். அவர் தனது சகோதரனுடன் விளையாடிய போது அவர் ஒரு சிறிய படகில் குகையை நோக்கி ஓடி தப்பினார். காற்றில் பரவிய வெப்பத்தால் அவர் சில தீக்காயங்களை சந்தித்தார். ஆனாலும் உயிர் தப்பினார்.



Click it and Unblock the Notifications
