Latest Updates
-
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்!
நூடுல்ஸ் மற்றும் மோமோவை பிரசாதமாக கொடுக்கும் காளி கோவில்... இந்தியாவில் எங்க இருக்கு தெரியுமா?
Chinese Kali Temple: இந்தியாவின் கோவில்கள் உலகப்புகழ்பெற்றவை, அதற்கு காரணம் அவற்றின் கட்டிடக்கலையும், வரலாறும் மட்டுமல்ல. அந்த கோவில்களில் உள்ள சில தனித்துவமான பழக்கவழக்கங்களும்தான். இந்தியாவில் வினோதமான நடைமுறைகள் கொண்ட பல கோவில்கள் உள்ளன. அவற்றில் ஒரு முக்கியமான கோவிலைப் பற்றித்தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.
சமீபத்தில், கொல்கத்தாவில் உள்ள 60 ஆண்டுகள் பழமையான சீன காளி கோவில் இணையத்தில் மிகவும் பிரபலமாக இருந்தது. இந்த கோவில் டாங்ராவில் உள்ள மாதேஷ்வர்தலா சாலையில் அமைந்துள்ளது. கிழக்கு கொல்கத்தாவில் அமைந்துள்ள டாங்ரா பகுதியில், இந்தியாவை தங்கள் வீடாக மாற்றிய சீன குடியேறிகள் வசிக்கின்றனர்.

1930-களில் சீனாவில் நடைபெற்ற உள்நாட்டுப் போர், தங்குமிடம் தேடிய அகதிகளைஇந்தியாவிற்கு வர வழிவகுத்தது. கம்யூனிசம், பௌத்தம் போன்ற தத்துவங்களின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட சீன மக்கள் ஒரு இந்து தெய்வத்தை வழிபடுவது மிகவும் சுவராஸ்யமான ஒன்றாகும்.
சைனீஸ்(சீனா) காளி கோவிலின் கதை
டாங்ரா பகுதியில் உள்ள உள்ளூர்வாசிகள் ஒரு மரத்தின் அடியில் குங்குமம் தடவிய இரண்டு கிரானைட் கற்களை பல ஆண்டுகளாக வணங்கி வந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது 10 வயது சீன சிறுவன் ஒருவன் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்தான், மருத்துவர்களால் அந்த சிறுவனை குணப்படுத்த முடியவில்லை. கடைசி முயற்சியாக, பெற்றோர்கள் அந்த சிறுவனை கற்களுக்கு முன்னால் கிடத்தி, பல நாட்கள் தொடர்ந்து பிரார்த்தனை செய்தனர். அப்போதுதான் ஒரு அதிசயம் நடந்தது, அந்த சிறுவன் குணமடைந்தான். இந்த சம்பவம் தெய்வீகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தியது, மேலும் வங்காள மற்றும் சீன சமூகங்கள் ஒன்றிணைந்து காளி தெய்வத்தின் நினைவாக ஒரு கோவிலைக் கட்டின.
கோவிலின் தனிச்சிறப்பு
டாங்ராவில் உள்ள இந்த புகழ்பெற்ற கோவிலில் இந்திய மற்றும் சீன பழக்கவழக்கங்களின் கலவை காணப்படுகிறது. மற்ற காளி கோயில்களில் காணப்படுவது போல, சிவப்பு செம்பருத்தி மாலைகள் தெய்வத்தின் சிலையை அலங்கரிக்கின்றன. இருப்பினும், மாலை நேர ஆரத்தி, சீன தேவாலயங்களில் காணப்படும் ஒரு சடங்கை உள்ளடக்கியது. காகிதத்தால் செய்யப்பட்ட மெழுகுவர்த்திகள் தீய சக்திகளை விரட்டப் பயன்படுத்தப்படுகின்றன. சீன தூபக் குச்சிகள் ஏற்றப்படுகின்றன, மேலும் இதன் நறுமணம் மற்ற கோவில்கள் உணரப்படும் நறுமணத்திலிருந்து வேறுபட்டது.
கோவிலின் பிரசாதம்
இந்தியக் கோவில்களின் தனிச்சிறப்பே கோவில்களில் வழங்கப்படும் பிரசாதம்தான். இந்து மதத்தில் கோவில் பிரசாதங்கள் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது. இது தெய்த்திற்கும் பிரசாதம் வழங்குபவருக்கும் இடையில் அன்பளிப்பாக வழங்கப்படும் பரிசு என்று நம்பப்படுகிறது. சீன காளி கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதம் உங்களை ஆச்சரியப்படுத்தும். பழங்கள் அல்லது இனிப்புகளுக்குப் பதிலாக, இது சாப் சூய், நூடுல்ஸ், வறுத்த காய்கறிகள், மோமோஸ் மற்றும் ஸ்டிக்கி அரிசி உள்ளிட்ட சீன உணவு வகைகள் இங்கு பிரசாதங்களாக வழங்கப்படுகிறது. இந்திய மக்களிடையே மிகவும் பிரபலமாக இருக்கும் இந்தோ-சீன உணவு, இந்தியாவில் சீனர்கள் குடியேறியதன் விளைவாகும். இரண்டு கலாச்சாரங்களும் கலந்த பிறகு இந்த உணவுகள் உருவானது.
கலாச்சார பிணைப்பு
சீன காளி கோவிலின் கதை மனித குலத்தின் ஒற்றுமைக்கான அடையாளமாகும். வெவ்வேறு மதங்களும் சமூகங்களும் தங்கள் தனித்துவத்தைப் கடைபிடித்தாலும் ஒற்றுமையுடன் இணைந்து வாழ முடியும் என்பதற்கு இது ஒரு சான்றாகும். நம்பிக்கையும், மதமும் முற்றிலும் எதிரெதிர் துருவங்களில் இருந்தாலும், மக்களை அவற்றால் இணைக்கு முடியும் என்பது சைனீஸ் காளி கோவில் சிறந்த சான்றாகும்.



Click it and Unblock the Notifications