Latest Updates
-
பாபா வாங்கா-நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி மூன்றாம் உலகப்போருக்கு பின் எந்த நாடு சக்திவாய்ந்ததாக இருக்கும் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடைந்த குரு பகவான்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாரெல்லாம் கவனமா இருக்கணும் தெரியுமா? -
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா?
7 லட்சம் கோடி மதிப்புள்ள தங்க சுரங்கம் மூலம் இந்த நாட்டுக்கு ஜாக்பாட் அடிச்சிருக்கு... எந்த நாடு தெரியுமா?
உலகின் மிகவும் விலையுயர்ந்த உலோகம் என்றால் அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது தங்கம்தான். இந்த பளபளப்பான மஞ்சள் நிற உலோகம் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பெண்களுக்கு மிகவும் பிடித்ததாக உள்ளது. தங்க நகை அழகு என்பதையும் தாண்டி கௌரவத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. மேலும் மிகவும் இலாபகரமான முதலீடாகவும் தங்கம் பார்க்கப்படுகிறது.
தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது, தற்போது தங்கத்தின் விலை கிட்டதட்ட 63,000-க்கும் அதிகமாக விற்கப்படுகிறது. தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கத்தின் விலை அதை முதலீட்டிற்கான சிறந்த பொருளாக மாற்றுகிறது. தங்கத்தின் விலை விண்ணைத்தொடும் இந்த காலத்தில் ஒரு இடத்தில் 1000 டன் தங்கம் உள்ளது என்றால் உங்களால் நம்ப முடியுமா?

சமீபத்திய வரலாற்றில் மிகப்பெரிய கண்டுபிடிப்புகளில் ஒன்றான இந்தக் கண்டுபிடிப்பு, உலக தங்கச் சந்தையையே உலுக்கியுள்ளது. இந்த மிகப்பெரிய புதையல் நமது அண்டை நாடான சீனாவுக்கு கிடைத்துள்ளது, சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள பிங்ஜியாங் கவுண்டியில் இந்த புதையல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஊடக அறிக்கைகளின் படி, இந்த தங்கப்புதையல் Wangu Gold Field-ல் உள்ளது. புவியியலாளர்கள் 2,000 மீட்டர் ஆழம் வரை 40 க்கும் மேற்பட்ட தங்க இருப்பைக் கண்டுபிடித்துள்ளனர். ஆரம்ப மதிப்பீடுகள் இந்த இடத்தில் குறைந்தது 300 மெட்ரிக் டன் தங்கம் இருப்பதாகக் காட்டுகின்றன. இருப்பினும் ஆழமான துளையிடுதல் 3,000 மீட்டர் வரை நீட்டிக்கப்பட்டது, இது அதிக தங்க இருப்புக்களை வெளிப்படுத்தியுள்ளது, மொத்த கணிப்புகளின் படி இதன் மொத்த இருப்பை 1,000 மெட்ரிக் டன்களுக்கு அப்பால் உயர்த்தியுள்ளது.
துளையிடப்பட்ட ஏராளமான பாறை மையங்கள் கண்களுக்கே புலப்படும் தங்கத்தை வெளிப்படுத்தின, இது மிகவும் அரிதான நிகழ்வாகும். சில மாதிரிகளில் ஒரு மெட்ரிக் டன் தாதுவுக்கு 138 கிராம் வரை தங்கம் இருந்தது, இது விதிவிலக்காக அதிக செறிவு கொண்டது, இது இந்த தளத்தை நவீன சுரங்க வரலாற்றில் மிகவும் இலாபகரமான ஒன்றாக மாற்றக்கூடும். பிப்ரவரி 15, 2025 நிலவரப்படி, இந்த தங்கத்தின் மொத்த மதிப்பு 7 லட்சம் கோடிக்கும் அதிகமாக இருக்கும்.
இவ்வளவு பெரிய தங்க இருப்பு கிடைத்துள்ளதால், ஹுனான் மாகாணம் உலகளாவிய தங்கத் தொழிலில் ஒரு முக்கிய இடமாக மாறி உள்ளது. இந்த தங்க சுரங்கம் சுரங்கத் துறையையும் தாண்டி மிகப்பெரிய அளவிலான வேலைவாய்ப்பையும் உருவாக்கப்போகிறது. இதனால் சீனாவின் ஒட்டுமொத்த பொருளாதாரமே முன்னேற்றம் அடையப்போகிறது.
சீனாவிற்கு தங்கம் ஏன் மிகவும் முக்கியமானது?
தற்போதைய கடினமான மற்றும் கணிக்க முடியாத பொருளாதார காலங்களில், தங்கம் சீனாவிற்கு ஒரு முக்கியமான சொத்தாக மாறியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, சீனாவின் பொருளாதாரம் பலவீனமடைந்து வருகிறது மற்றும் உலகளாவிய குறிப்பிடத்தக்க வர்த்தக பதட்டங்கள் உள்ளிட்ட சவால்களை எதிர்கொண்டுள்ளது. இதுபோன்ற காலங்களில் தங்கம் ஒரு பாதுகாப்பான முதலீடாக செயல்படுகிறது, அதனால்தான் சீனா தனது தங்க இருப்புக்களை உருவாக்க முயற்சித்து வருகிறது.



Click it and Unblock the Notifications












