Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
சாணக்கிய நீதியின் படி இந்த குணங்கள் இருக்கும் இளைஞர்கள் சமூகத்திற்கு பொக்கிஷம் போன்றவர்களாம்...!
Chanakya Niti: சுவாமி விவேகானந்தர் நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர்களே முதுகெலும்பு போன்றவர்கள் என்று கூறினார், ஆச்சார்ய சாணக்கியரும் இளைஞர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். இளைஞர்கள் பற்றி ஆச்சார்ய சாணக்கியர் சாணக்கிய நீதியில் பல விஷயங்களைப் பற்றி கூறியுள்ளார்.
நாட்டை வழிநடத்தும் மற்றும் கையாளும் ஆற்றல் இளைஞர்களுக்கு மட்டுமே உண்டு. நாட்டின் வளர்ச்சிக்கும் செழுமைக்கும் இளைஞர்கள் என்ன செய்ய வேண்டும்? அவர்கள் எப்படி இருக்க வேண்டும்? இது குறித்து சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் கூறியுள்ளார் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

வேலை
இளைஞர்கள் வேலை செய்யும் மனப்பான்மையை ஒருபோதும் தவிர்க்கக் கூடாது. ஏனெனில் சோம்பேறித்தனம் முன்னேற்றத்தைத் தடுப்பது மட்டுமின்றி வாழ்க்கையை அழிக்கும் வல்லமையும் கொண்டது. இது வாழ்க்கையை எதிர்மறையாக பாதிக்கிறது மற்றும் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் கெடுக்கிறது. இளமை வாழ்க்கை ஒழுக்கமாக இருக்க வேண்டும்.
கோபம்
கோபம் மனிதனின் மிகப்பெரிய எதிரி. அது ஒருவரின் அறிவாற்றலைக் கெடுக்கும் மற்றும் சிந்திக்கும் ஆற்றலை இழக்க வைக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், முடிவெடுக்கும் திறனும் இல்லாமல் போகிறது. இளைஞர்கள் கோபத்தை அதிகரிக்க விடக்கூடாது. கோபத்தை எப்போதும் கட்டுக்குள் வைத்திருப்பது முக்கியம்.
சோம்பேறித்தனம் கூடாது
சாணக்கியரின் கூற்றுப்படி, சோம்பல் ஒரு நபரின் முன்னேற்றத்தைத் தடுக்கிறது. எந்த ஒரு வேலையிலும் சோம்பேறித்தனமாக இருப்பது நேரத்தை வீணடிப்பதோடு மட்டுமல்லாமல் உங்கள் வெற்றியையும் தடுக்கிறது. இளைஞர்கள் சோம்பலைக் கைவிட்டு, எதிரி போன்ற சோம்பேறித்தனம் தங்கள் முன்னேற்றத்தைத் தடுக்காத வகையில் அனைத்துப் பணிகளையும் ஒழுக்கத்துடன் செய்ய வேண்டும்.
போதைப்பழக்கம்
போதைப்பழக்கம், அது எதுவாக இருந்தாலும், இளைஞர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை அழிக்கிறது என்று சாணக்கியர் கூறுகிறார். போதைப் பழக்கம் இளைஞர்களை தவறான செயல்களுக்கு தூண்டுகிறது. மேலும் அவர்கள் தங்கள் உறவினர்களை தங்களுடன் பிரச்சனையில் சிக்க வைக்கிறார்கள். சாணக்கியர் அவற்றிடம் இருந்து விலகி இருக்கச் சொல்கிறார்.
தவறானவர்களுடனான நட்பு
உங்கள் முன் மென்மையாகப் பேசி, உங்கள் வேலையை உங்கள் முதுகுக்குப் பின்னால் கெடுக்கும் நண்பரின் சகவாசத்தை விட்டுவிடுவது நல்லது. மனித வாழ்க்கையில் நட்பு முக்கிய பங்கு வகிக்கிறது என்று சாணக்கியர் கூறுகிறார்.
நல்லவர்களின் சகவாசம் உங்களை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்லும் அதே வேளையில், கெட்டவர்களுடனான நட்பு உங்கள் வாழ்க்கையை துயரத்தால் நிரப்பும். எனவே அனைவரும் தனது நட்பை புத்திசாலித்தனமாக சிந்தித்து தேர்ந்தெடுக்க வேண்டும்.
அலட்சியம்
நமது கவனக்குறைவால் பல நேரங்களில் நஷ்டத்தை சந்திக்க நேரிடுகிறது. எந்த வேலையிலும் அலட்சியமாக இருக்க வேண்டாம். சில நேரங்களில் கவனக்குறைவு வாழ்க்கையில் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். அதன் காரணமாக, அவர்கள் பின்னர் மோசமான விளைவுகளை அனுபவிக்க வேண்டும். சாணக்கியரின் கூற்றுப்படி, எந்த ஒரு வேலையைச் செய்வதற்கும் முன், நிச்சயமாக ஒரு அனுபவமுள்ள நபரைக் கலந்தாலோசித்து, வேலையை கவனமாக செய்ய வேண்டும்.
பேராசை
பேராசை மிகப்பெரிய ஆபத்து என்று கூறப்படுகிறது. இளைஞர்கள் பேராசையைத் தவிர்க்க வேண்டும் என்கிறார் ஆச்சார்ய சாணக்கியர். பேராசை போன்ற ஒரு கெட்ட பழக்கம் உங்கள் இலக்கைத் தடுக்கலாம்.
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு நம் மனதை எளிதாக்கும், ஆனால் தேவையற்ற மற்றும் அதிகப்படியான பொழுதுபோக்கு நமக்கு தீங்கு விளைவிக்கும். தேவையான அளவு மட்டுமே பொழுதுபோக்கை அனுபவிப்பது நல்லது. அதிகப்படியான பொழுதுபோக்கானது இளமை மற்றும் அறிவை இழக்க வைக்கிறது.
நேரம்
சாணக்கிய நீதியின்படி, இளைஞர்கள் நேரத்தின் மதிப்பை அறிந்து கொள்ள வேண்டும். நேரத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்பவர்கள் மட்டுமே வாழ்க்கையில் தங்கள் இலக்குகளை அடைவதில் வெற்றி பெறுவார்கள். நேரத்தைப் பயன்படுத்திக் கொள்ளத் தயாராக இருப்பவர்களால் மட்டுமே இலக்கை அடைய முடியும். எனவே ஒவ்வொரு வேலையையும் சரியான நேரத்தில் செய்யுங்கள், தள்ளிப் போடாதீர்கள்.



Click it and Unblock the Notifications












