Latest Updates
-
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க..
சாணக்கிய நீதி படி இந்த 5 குணமுள்ள ஆண்களுடன்தான் பெண்கள் மகிழ்ச்சியாக வாழ்வார்களாம்...உங்ககிட்ட எத்தனை இருக்கு?
Chanakya Niti: பண்டைய இந்தியாவின் மிகச்சிறந்த அறிஞர்களில் ஒருவர் சாணக்கியர். அவர் தனது வாழ்க்கை அனுபவங்களை சாணக்கிய நீதி என்ற நூலில் தொகுத்துள்ளார். வாழ்க்கையை எளிமையாகவும் மகிழ்ச்சியாகவும் மாற்றுவதற்கான பல வழிகளை சாணக்கியர் இந்த நூலில் கூறியுள்ளார். ஆச்சார்ய சாணக்கியரின் இந்த அறிவுரைகளை நம் வாழ்வில் பின்பற்றினால், மிகப்பெரிய நெருக்கடிகளைக் கூட நாம் எளிதாகக் கடக்க முடியும்.
பெண்களை மகிழ்விக்கும் மற்றும் அவர்களின் இதயங்களைக் கவரும் விஷயங்களையும் சாணக்கிய நீதி விவரிக்கிறது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான உறவைப் பற்றி சாணக்கிய நீதியில் நிறைய எழுதப்பட்டுள்ளது. பெண்கள் ஆண்களிடம் விரும்பும் சில பழக்கவழக்கங்கள் உள்ளன, இத்தகைய பழக்கவழக்கங்கள் உள்ள ஆண்களை பெண்கள் எளிதில் விரும்புவார்கள். அது என்னென்ன பழக்கவழக்கங்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

நேர்மை
சாணக்கியரின் கூற்றுப்படி, பெண்கள் பொதுவாக நேர்மையான ஆண்களை விரும்புகிறார்கள். ஒரு நேர்மையான நபர் எப்போதும் தனது உறவுகளில் பொய் சொல்லி ஏமாற்றமாட்டார. பெண்கள் எப்போதும் நேர்மையான, உண்மையான அன்பை வெளிப்படுத்தும் ஒரு ஆணையே விரும்புவார்கள். ஒரு நேர்மையான ஆண் தனது வாழ்க்கைத்துணையை ஒருபோதும் ஏமாற்ற மாட்டார்.
நல்ல நடத்தை
ஒருவரின் நல்ல நடத்தை அனைவரையுமே கவரக்கூடும். அதேபோல், ஒரு ஆண் நல்ல நடத்தை உள்ளவராக இருந்தால், ஒரு பெண்ணுக்கு நிச்சயமாக அவரைப் பிடிக்கும். ஆண்களின் பேச்சில் உள்ள இனிமையும் பாசமும் அவர்களின் சிறப்பு குணங்கள். இந்த குணங்களை உள்ள ஆணை எப்படிப்பட்ட பெண்ணும் விரும்புவார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார்.
பெண்களை மதிக்கும் பழக்கம் உள்ளவர்கள்
ஒவ்வொரு பெண்ணும் தன் துணை எப்போதும் தன்னை மதிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். தாங்கள் சொல்வதையெல்லாம் அவர்கள் மதிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். மற்றவர்கள் சொல்வதைக் கேட்கும் திறன் கொண்ட ஆண்களுடன் பெண்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். பெண்கள் தங்கள் பிரச்சினைகளைக் கேட்டு அதற்கு தீர்வு காணும் ஆண்களிடம் ஈர்க்கப்படுகிறார்கள். அத்தகைய ஆண்களை பெண்கள் பார்த்தவுடன் காதலிப்பார்கள்.
கண்ணியமான ஆண்கள்
சாணக்கிய நீதியின் படி, பெண்கள் கண்ணியமான ஆண்களிடம் விரைவில் காதலில் விழுவார்கள். ஆணவம் இல்லாத, தங்களின் தவறை பணிவுடன் ஏற்றுக்கொள்ளும் ஆண்கள் பெண்களிடம் மிகவும் பிரபலமானவராக இருப்பார்கள். ஆண்களின் இந்த குணம் ஒரு உறவில் அன்பை உயிர்ப்புடன் வைத்திருக்கும் என்று பெண்கள் நம்புகிறார்கள். கண்ணியமான ஆணுடன் வாழும் பெண்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார்.
நம்பிக்கைக்குரிய ஆண்
சாணக்கியரின் கூற்றுப்படி, எந்தவொரு உறவிலும் பரஸ்பர நம்பிக்கை மிகவும் முக்கியமானது. ஒரு பெண் தன்னைப்பற்றிய ரகசியத்தை ஒரு ஆணிடம் கூறி, அதை அவர் தனக்குள்ளேயே மறைத்துக்கொண்டால், அவர்கள் பெண்களின் பார்வையில் சிறந்த ஆணாக கருதப்படுகிறார்கள். பெண்களுக்கு இந்த வகையான விசுவாசமான ஆண்களை மிகவும் பிடிக்கும். பெண்கள் தங்கள் நம்பிக்கையை காப்பாற்றும் மற்றும் அவர்களின் வார்த்தைகளை காப்பாற்றும் ஆண்களுடன் மகிழ்ச்சியாக வாழ்வார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார்.



Click it and Unblock the Notifications
