Latest Updates
-
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம் -
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
மழைக்காலத்தில் சருமம் பொலிவா இருக்கணுமா? அப்ப இந்த ஆயுர்வேத ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க.. -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
சாணக்கிய நீதி படி இந்த பழக்கங்கள் உள்ளவர்கள் இளமையிலேயே வயதானவர்கள் போல இருப்பார்களாம்... உங்ககிட்ட இருக்கா?
Chanakya Niti: முதுமை என்பது மக்கள் ஏற்றுக்கொள்ள முடியாத கசப்பான உண்மையாகும். பெரும்பாலும் மக்கள் தங்கள் வயதை மறைக்கவும் மற்றும் மறக்கவும் விரும்புகிறார்கள். இன்றைய மோசமான வாழ்க்கை முறையால் இளைஞர்களே விரைவில் முதுமை அடையத் தொடங்குகிறார்கள். முன்கூட்டிய முடி நரைத்தல், உடல் பலவீனம், அடிக்கடி நோய்வாய்ப்படுதல் போன்றவை வயதான அறிகுறிகளை இளம் வயதிலேயே அனுபவிக்கிறார்கள்.
சாணக்யா முதுமை குறித்து தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார். சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில், ஒரு நபர் ஏன் முன்கூட்டியே முதுமை அடைகிறார் மற்றும் அவர் ஏன் வயதானவர்கள் என்ற வகையின் கீழ் வருகிறார் என்பதை விளக்குகிறார். இளமையைத் தக்கவைக்க என்னென்ன விஷயங்களைப் பின்பற்ற வேண்டும் என்பதையும் சாணக்கியர் அறிவுறுத்துகிறார்.

முதுமைக்கு காரணம்
ஒருவர் எப்போதும் வாழ்க்கைப் பயணத்தில் இருக்கிறார் என்று சாணக்கியர் சாணக்கிய நீதியில் கூறுகிறார். மக்கள் தங்கள் திறனைத் தாண்டி செயல்பட்டால், அவர்களின் வயது விரைவில் குறையத் தொடங்குகிறது. உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடிக்காமல் இருப்பதும், நேரத்துக்குத் தூங்காததும் உடலை எதிர்மறையாகப் பாதிக்கிறது.
பயணக் களைப்பு மற்றும் ஒழுங்கற்ற செயல்பாடுகளால், மக்கள் விரைவாக முதுமைக்கு பலியாகிறார்கள். கணவனால் உடல் சுகம் கிடைக்காத பெண்களும் விரைவில் முதுமை அடையத் தொடங்குவார்கள் என்றும் சாணக்கியர் சாணக்கிய நீதியில் கூறியுள்ளார்.
குதிரை
மனிதர்களைத் தவிர, கட்டி வளர்க்கப்படும் குதிரைகளும் விரைவில் முதுமையடைந்து விடும் என்று சாணக்கியர் ஒரு கூறியுள்ளார். குதிரையின் அடிப்படை செயல்பாடு ஓடுவது, அதை இளமையாக வைத்திருப்பதற்கு இது அவசியம். குதிரை கட்டப்பட்டால், அது அதன் உடல் இயல்புக்கு எதிரானது. இதன் காரணமாக, அதன் வலிமை பலவீனமடையத் தொடங்குகிறது மற்றும் அதன் வயது விரைவில் குறைகிறது.
அதிகம் தூங்குவது
காலை முதல் மாலை வரை தூங்குபவர்களுக்கு லட்சுமி தேவியின் அருள் எப்போதும் கிடைக்காது. சூரியன் உதிக்கும் வரை உறங்குபவர் எப்போதும் வறுமையை எதிர்கொள்வார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார். அப்படிப்பட்டவர்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைய மாட்டார்கள் என்கிறார் சாணக்கியர். அவர்களின் உடல்நலக்குறைவு அவர்களை நீண்ட காலம் வாழ வைக்காது என்றும் சாணக்கியர் கூறுகிறார்.
அதிகம் சாப்பிடுவது
தேவைக்கு அதிகமாக உண்பவர்கள் விரைவில் ஏழைகளாக மாறுகிறார்கள். அதிக உணவை உட்கொள்வது ஒரு நபரை வறுமையில் விழ வைக்கிறது, அத்தகையவர்கள் வாழ்க்கையில் ஒருபோதும் ஆரோக்கியமாக இருக்க மாட்டார்கள். அவர்களுக்கு நீண்ட ஆயுளுடனும் இருக்க மாட்டார்கள் என்றும் சாணக்கியர் கூறுகிறார்.



Click it and Unblock the Notifications
