சாணக்கிய நீதி படி இந்த 5 நபர்களை உங்கள் வாழ்க்கையில் தவிர்த்தால் நீங்க நிம்மதியா வாழலாமாம்...!

Chanakya Niti: ஆச்சார்யா சாணக்கியர் இந்தியாவில் வாழ்ந்த ஒரு சிறந்த பொருளாதார நிபுணர் மற்றும் தத்துவவாதி ஆவார். சாணக்கியரின் கொள்கைகள் மௌரிய வம்சத்தை உருவாக்கியதுது. அரசியல் தவிர, சமூகத்தின் அனைத்து அம்சங்களைப் பற்றியும் சாணக்கியருக்கு விரிவான புரிதல் இருந்தது. இந்த அனுபவங்களின் அடிப்படையில் மனித வாழ்க்கை தொடர்பான நடைமுறை விஷயங்களை சாணக்கிய நீதி என்ற நூலில் தந்துள்ளார்.

சாணக்கியரின் கொள்கைகள் மனிதர்களுக்கான நன்மை தீமைகளை விளக்குகின்றன. சாணக்கியர் தனது கொள்கைகள் மூலம் உங்களுக்கு எது நல்லது, எதில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று கூறுகிறார். ஒரு நபர் இந்த வகையான நபர்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும் அல்லது நீங்கள் எப்போதும் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என்று சாணக்கியர் எச்சரிக்கிறார்.

Chanakya Niti Types of People You Should Avoid for Peaceful Life in Tamil

யாருடைய பேச்சையும் கேட்காதவர்கள்

முட்டாள்தனமான சீடனுக்கு அறிவுரை கூறுவதால் எந்தப் பயனும் இல்லை என்கிறார் ஆச்சார்ய சாணக்கியர். ஏனெனில் அவர்கள் தங்களுக்குத் தோன்றுவதை மட்டுமே செய்கிறார்கள். முட்டாள் சீடன் என்றால் யாரைப் பற்றியும் கவலைப்படாதவர்கள் என்று பொருள். யாருடைய பேச்சையும் கேட்காத மக்களுக்கு எந்த விதமான அறிவையும் புகட்டுவது நேரத்தை வீணடிப்பதாகும். இப்படிப்பட்ட முட்டாள்களைப் பின்தொடர்ந்து நேரத்தை வீணடிப்பவர்கள் எப்போதுமே சிக்கலில் சிக்கிக் கொள்கிறார்கள்.

அக்கறையில்லாத பெண்கள்

யாருடைய பேச்சையும் கேட்காத, தன் விருப்பப்படி நடக்கிற பெண்களைத் தவிர்க்க வேண்டும் என்கிறார் சாணக்கியர். குடும்பத்தைக் கவனிக்காத, கணவன், பிள்ளைகள், பெற்றோரைப் பற்றிக் கூட நினைக்காத இத்தகைய பெண்களிடம் இருந்து விலகி இருப்பதுதான் புத்திசாலித்தனம். அத்தகைய பெண்கள் உங்களுக்கும் உங்களுடன் தொடர்புடையவர்களுக்கும் தீங்கு விளைவிப்பார்கள் என்றும் சாணக்கியர் கூறுகிறார்.

பணத்தைப் பற்றி மட்டுமே சிந்திப்பவர்கள்

எப்பொழுதும் பணத்தைப் பற்றி மட்டுமே சிந்திக்கும் மனிதர்கள் இருக்கிறார்கள். அதாவது, பணத்தை இழக்க நேரிடும் என்ற அச்சத்தில் அத்தியாவசியப் பொருட்களுக்குக் கூட பணத்தைச் செலவு செய்யாமல் மிகவும் கஞ்சத்தனத்துடன் அவர்கள் வாழ்கிறார்கள்.

அப்படிப்பட்டவர்கள் தங்கள் பணத்தை நல்ல காரியங்களுக்காக பயன்படுத்த முடியாத காரணத்தால் எப்போதும் பிரச்சனைகளால் சூழப்பட்டிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களின் பணம் அவர்கள் இறந்த பிறகு மற்றவர்களால் பயன்படுத்தப்படுகிறது. எனவே பணத்தைப் பற்றி மட்டுமே சிந்திக்கும் நபர்களை ஒருபோதும் உடன் வைத்திருக்க வேண்டாம் என்று சாணக்கியர் கூறுகிறார்.

எப்போதும் மற்றவர்களை குறை கூறுபவர்கள்

ஆச்சார்ய சாணக்கியர், பிரச்சனைகளை எண்ணி, எப்போதும் எதிர்மறையான விஷயங்களை மட்டுமே பேசுபவர்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டும் என்கிறார். அப்படிப்பட்டவர்களுடன் பழகுவதால் உங்களுக்கும் எதிர்மறை எண்ணங்கள் வரும். நீங்கள் எதையும் சிறப்பாக நினைக்க முடியாது. எனவே, எப்போதும் குறை கூறுபவர்களிடம் இருந்து விலகி இருப்பது புத்திசாலித்தனம் என்கிறார் சாணக்கியர்.

பேராசைக் கொண்டவர்கள்

சாணக்கிய நீதியின் படி, ஒரு மனிதன் எப்போதும் பொறாமை மற்றும் சுயநலவாதிகளை தவிர்க்க வேண்டும். சவாலான சூழ்நிலைகளில் கூட, அத்தகைய நபர்களிடம் உதவி கேட்க வேண்டாம். ஏனென்றால் அத்தகையவர்கள் பேராசை மற்றும் பொறாமையின் அடிப்படையில் உங்களுக்கு தீங்கு விளைவிப்பார்கள்.

பொறாமை கொண்டவர்கள் சரி, தவறு ஆகியவற்றை வேறுபடுத்திப் பார்க்க முடியாது. அவர்கள் ஒருபோதும் மற்றவர்களின் முன்னேற்றத்திலும் வெற்றியிலும் மகிழ்ச்சியடைய மாட்டார்கள். அவர்கள் மற்றவர்களின் வெற்றியைப் பார்த்து பொறாமைப்படுவார்கள் மற்றும் அவர்களை காயப்படுத்த விரும்புகிறார்கள்.

Story first published: Sunday, August 18, 2024, 6:00 [IST]
Desktop Bottom Promotion