Latest Updates
-
சந்திர மங்கள யோகம்: இன்று முதல் இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும், முன்னேற்ற பாதை திறக்கும்.. -
இட்லிக்கு எப்பவும் சட்னி அரைக்காம.. இப்படி டிபன் சாம்பார் செய்யுங்க.. கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
இந்த படத்துல உங்களுக்கு முதலில் என்ன தெரிஞ்சுது சொல்லுங்க.. உங்க மைண்ட்செட் என்னன்னு சொல்றோம்.. -
உங்க வாயைச் சுற்றி கருப்பா இருக்கா? அப்ப கருப்பு உளுந்து வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
லாப திருஷ்டி யோகத்தால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு தொழிலில் இரட்டிப்பு லாபம் கிடைக்கப்போகுது..! -
1 கப் தட்டப்பயறும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா.. இப்படி கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்கும் செமயா இருக்கும்.. -
விந்தணுக்களின் நிறமும், அதற்கான அர்த்தங்களும் - விளக்கும் டாக்டர்! -
மழைக்காலத்தில் மணி பிளாண்ட் செடியை இப்படி வைங்க! பணவரவு குறையாமல் இருக்க வாஸ்து ரகசியங்கள் இதோ -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சியால் ஜூன் 16 முதல் இந்த 4 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
ஜவ்வரிசி தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க..
சாணக்கிய நீதி படி இந்த 5 விஷயங்கள் பணக்காரரைக் கூட சீக்கிரம் ஏழையாக மாற்றிவிடுமாம்...!
Chanakya Niti: மகிழ்ச்சியான மற்றும் திருப்திகரமான வாழ்க்கைக்கு பணம் தேவை. சிறந்த பொருளாதார நிபுணராக அறியப்பட்ட சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் செல்வம் பற்றி பல விஷயங்களை கூறியுள்ளார். சில விஷயங்களில் கவனம் செலுத்தவில்லை என்றால், பணக்காரர்களும் ஏழையாகிவிடலாம் என்கிறார்.
சாணக்கியரின் கூற்றுப்படி, ஒருவர் வாழ்க்கையில் வறுமையை ஏற்படுத்த பல காரணங்கள் உள்ளன. ஒரு நபரின் நிதி அழிவுக்கு வழிவகுக்கும் சில காரணிகளை தனது சாணக்கிய நீதியில் சாணக்கியர் குறிப்பிட்டுள்ளார், மேலும் பணத்தை எப்படி சரியாக பயன்படுத்த வேண்டும் என்பது பற்றியும் விளக்கியுள்ளார். அவை என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பணத்தை பூட்டி வைக்கக்கூடாது
சாணக்கியரின் கூற்றுப்படி, ஒரு பணக்காரர் தனது பணத்தை போட்டியிலேயே ஒருபோதும் பூட்டி வைக்கக்கூடாது. மாறாக சரியான இடத்தில் முதலீடு செய்ய வேண்டும். பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்களுக்கு அதன் மதிப்பு நீண்ட காலத்திற்கு இருக்காது. பணத்தின் மதிப்பு காலப்போக்கில் குறைந்துவிடும். மறுபுறம், பணத்தை ஒரு நல்ல இடத்தில் முதலீடு செய்வது அதை வளர வைக்கிறது.
அநீதி பக்கம் நிற்கக்கூடாது
சாணக்கியரின் கூற்றுப்படி, அநீதியின் பாதையைப் பின்பற்றும் நபரிடம் பணம் ஒருபோதும் தங்காது. அநீதி பாதையில் செல்பவர்கள் அதிக பணம் பெற ஆரம்பித்தால், அவர்கள் அழிவு நிச்சயம் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
சிக்கனமாக தானம் செய்ய வேண்டும்
தானம் செய்வது ஒருவரின் வாழ்க்கையில் செய்யக்கூடிய மிகவும் நல்ல விஷயம். ஆனால் சாணக்கியர் ஒருவர் தனது வருமானத்திற்கும், வசதிக்கும் ஏற்ப மட்டுமே தானம் செய்ய வேண்டும் என்கிறார். வருமானத்திற்கு அதிகமாக தானம் செய்வது உங்களை ஏழையாக்கும். எனவே எப்போதும் உங்கள் வருமானத்தை மனதில் வைத்து மட்டுமே செலவு செய்யுங்கள். நீங்கள் சம்பாதிக்கும் பணத்தைச் சேமித்து, அதே விகிதத்தில் மற்றவர்களுக்கு உதவுங்கள்.
அதிகமாக செலவு செய்யக்கூடாது
உங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்தாவிட்டால், எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் அது பத்தாது என்கிறார் சாணக்கியர். அதிக பணம் சம்பாதிப்பது மட்டுமே உங்களை பணக்காரர்களாக மாற்றாது. ஒரு பாத்திரத்தில் உள்ள தண்ணீரை நீண்ட நேரம் வைத்திருந்தால் கெட்டுப் போவது போல், சரியாகப் பயன்படுத்தாவிட்டால் செல்வமும் முக்கியமற்றதாகிவிடும் என்கிறார் சாணக்கியர்.
பணத்தை நினைத்து தற்பெருமை கொள்ளக்கூடாது
சாணக்கியர், ஒருவர் தனது பணத்தைப் பற்றி பெருமை கொள்ளக் கூடாது என்றும், எப்போதும் பணிவுடன் இருக்க வேண்டும் என்றும் கூறுகிறார். பணம் வரும்போது அகங்காரத்தை உங்கள் மனதில் நுழைய விடாதீர்கள். ஈகோ உங்கள் புத்தியைக் கெடுக்கிறது. இதன் காரணமாக ஒருவரின் செல்வம் விரைவில் அழிந்து விடுகிறது. எனவே ஆணவத்தைத் தவிர்த்து, உங்கள் நடத்தையில் பணிவுடன் இருங்கள்.



Click it and Unblock the Notifications
