Latest Updates
-
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க... -
பட்டாணி மசாலா சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, பிரியாணி மாதிரியே இருக்கும் -
சனி பகவான் உதயமாகியிருப்பதால் இன்று முதல் இந்த 5 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் உங்க உடலில் நீரின் அளவு ஆபத்தான கட்டத்திற்கு சென்றுவிட்டதாம் - ஜாக்கிரதை -
கோடை வெயிலில் வீடு அனல் பறக்குதா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும்… குளிர்ச்சியும் அதிர்ஷ்டமும் தேடி வரும்!
சாணக்கிய நீதி படி வாழ்க்கையில் தோல்வி அடையாமல் இருக்க உங்களிடம் இருக்க வேண்டிய குணங்கள் என்ன தெரியுமா?
Chanakya Niti: சாணக்கியரும், அவரும் அறிவுரைகளும் பல நூற்றாண்டுகள் கடந்தும் இன்றும் பிரபலமானதாக இருக்கிறது. சாணக்கியர் தனது நீதி சாஸ்திரத்தில் மனிதர்களின் நன்மை தீமைகள் பற்றிய விரிவான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். ஒருவர் தனது நற்பண்புகளால் வாழ்க்கையில் வெற்றியை அடையலாம், அதேபோல ஒருவரின் கெட்ட எண்ணங்கள் வெற்றிகரமான செயல்களை கூட தோல்வியாக மாற்றும்.
ஒருவரிடம் சில குறைபாடுகள் இருந்தால், அவர்கள் எவ்வளவு கடினமாக முயற்சி செய்தாலும், அவரால் வெற்றி பெற முடியாது. சாணக்கியர் இதுபோன்ற சில விஷயங்களிலிருந்து எப்போதும் விலகி இருக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்துகிறார். ஒருவரின் வாழ்க்கை முறை மற்றும் அவரது குணங்களே அவர்களின் வாழ்க்கையை நிர்ணயிக்கும் என்று சாணக்கியர் கூறுகிறார்.

மனிதர்கள் அனைவருக்குள்ளும் சில குறைகள் இருக்கும். ஆனால் இந்த குறைபாடுகளில் சிலவற்றை சரியான நேரத்தில் உங்களுக்குள் இருந்து நீக்காவிட்டால், அதன் விளைவு வாழ்நாள் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார் சாணக்கியர். சாணக்கிய நீதியில் கூறியுள்ள படி, தோல்விக்கு வழிவகுக்கும் ஒருவரின் குணங்கள் என்னென்ன எனறு இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
அமைதியான மனம்
வாழ்க்கையில் வெற்றியை அடைய அமைதியான மனம் மிகவும் அவசியம் என்கிறார் ஆச்சார்ய சாணக்கியர். மன அமைதி இல்லாத எந்த மனிதனும் மகிழ்ச்சியாகவும், வெற்றியையும் அடைய முடியாது. நிலையற்ற மனதுடன் இருப்பவர்களால் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க முடியாது மற்றும் எந்த வேலையையும் சரியாகச் செய்ய முடியாது. இப்படிப்பட்டவர்கள் வாழ்க்கையில் பலவிதமான பிரச்சினைகள் சூழ்ந்திருக்கும். இந்த குறைபாட்டால் அவர்கள் வாழ்க்கையில் தோல்விகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்.
மற்றவர்களின் மகிழ்ச்சியைப் பார்த்து பொறாமை
சாணக்கிய நீதியின் படி, பலருக்கு மற்றவர்களின் மகிழ்ச்சியைப் பார்த்து பொறாமை இருக்கும். அத்தகையவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் நண்பர்களின்றி தனியாக இருப்பார்கள், மற்றவர்களின் வெற்றியைப் பார்த்து வருத்தப்படுகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் வாழ்க்கையில் வெற்றியையோ அல்லது மற்றவர்களின் ஆதரவையோ பெற மாட்டார்கள்.
கட்டுப்பாடில்லாத மனம்
சாணக்கியர் கூற்றின் படி, ஒரு நபர் தனது முழு உடலையும் தனது மனதின் மூலம் கட்டுப்படுத்துகிறார். மனக்கட்டுப்பாடு இல்லாத ஒரு மனிதனின் மனமும் உடலும் எந்த வேலையையும் சிறப்பாக செய்ய முடியாது. இத்தகையகட்டுப்பாடில்லாத மனம் உள்ளவர்கள் எந்த வேலையிலும் கவனம் செலுத்தி வெற்றிகளை பெற முடியாது. ஒருவரின் தோல்விக்கு இதுவே முக்கிய காரணமாக இருக்கிறது.
ஒழுக்கமின்மை
ஒழுக்கம் இல்லாதவர்களிடம் எவ்வளவு நல்ல குணங்கள் இருந்தாலும் அவர்களால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது. அப்படிப்பட்டவர்கள் ஒருவேளை குறுக்கு வழியில் வெற்றி பெற்றாலும் அது நீண்ட காலம் நீடிக்காது. உங்கள் பணிகளை வெற்றிபெற ஒழுக்கத்துடன் செய்வது மிகவும் முக்கியம். இந்த குணம் இல்லாமல் எந்த மனிதனும் வெற்றியை அடைய முடியாது.
கவனக்குறைவு2
நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற விரும்பினால், எந்த ஒரு வேலையையும் முழு அர்ப்பணிப்புடனும் நேர்மையுடனும் செய்ய வேண்டும். வேலையில் கவனக்குறைவாக இருப்பவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற மாட்டார்கள். கவனமின்மையே ஒருவரின் வெற்றிக்கான தடைக்கல்லாக இருக்கிறது.



Click it and Unblock the Notifications
