Latest Updates
-
சனி-சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: ஜூன் 25 முதல் இந்த 5 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டும்... -
2 உருளைக்கிழங்கு இருந்தா, இப்படி குருமா செய்யுங்க.. சிக்கன், மட்டன்-லாம் தோத்துடும்.. -
ஜூன் 17-ல் உருவாகும் அரிய கிரக சேர்க்கையால் அற்புதமான நன்மைகளை அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
கோவை அன்னபூர்ணா ஹோட்டல் வெஜ் குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும் -
இனிப்புகளின் ராஜா என்று அழைக்கப்படும் இனிப்பு எது தெரியுமா? உங்களுக்கு இந்த இனிப்பு பிடிக்குமா? -
எந்த கீரை வாங்கினாலும் இப்படி ஒருவாட்டி செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஜூலை 27-ல் நடக்கும் சனி வக்ர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கனவு நனவாகப்போகுது..! -
இந்த 4 மாதங்களில் பிறந்த பெண்கள் மிகச்சிறந்த அம்மாக்களாக இருப்பார்களாம் - நீங்க பிறந்த மாதம் என்ன? -
முதலைகள் ஏன் கற்களை விரும்பி சாப்பிடுகின்றன தெரியுமா? இதுக்குப் பின்னாடி இப்படி ஒரு காரணம் இருக்கா? -
International Yoga day 2026: வாய்வு தொல்லையால் அவதிப்படுகிறீர்களா? அப்ப தினமும் இந்த யோசனங்களை செய்யுங்க..
சாணக்கிய நீதி படி இந்த குணங்கள் உள்ளவர்கள் வாழ்க்கையில் எதிரியே இருக்க மாட்டார்களாம்...எப்பவுமே வெற்றிதானாம்!
Chanakya Niti: சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் மனித வாழ்க்கைக்குப் பயனுள்ள பல தகவல்களைத் தந்துள்ளார். சாணக்கிய நீதியின் கூற்றுப்படி, மனிதராக பிறந்த அனைவருக்குமே எதிரிகள் இருப்பார்கள். சாணக்கிய நீதியில் கூறியுள்ளபடி, எந்தவொரு நபரும் தனது எதிரியை பலவீனமானவராக கருதக்கூடாது. ஆனால் அவர்களிடம் எப்போதும் எச்சரிக்கையாக இருங்கள்.
இல்லையெனில், உங்கள் எதிரி வாய்ப்பு கிடைக்கும் போது உங்களை வீழ்த்தி விடுவார். இரண்டு வகையான எதிரிகள் இருப்பதாக சாணக்கியர் கூறுகிறார். ஒரு எதிரியை நாம் பார்க்க முடியும், மற்றொன்று கண்ணுக்கு தெரியாத மற்றும் திருட்டுத்தனமாக தாக்கும் எதிரிகள். உதாரணமாக நோய்கள் போல.

நீங்கள் எதிரியை தோற்கடிக்க விரும்பினால், சாணக்கியரின் சில அறிவுரைகளை உங்கள் வாழ்க்கையில் செயல்படுத்த வேண்டும். சாணக்கியர் தனது கொள்கைகளில் எதிரிகளை தோற்கடிக்க சில விஷயங்களைக் குறிப்பிட்டுள்ளார், அவற்றை மனதில் வைத்து உங்கள் எதிரிகளை வெல்ல முடியும். எதிரிகளை தோற்கடிக்க சாணக்கியர் கூறும் அறிவுரைகள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
கெட்ட நண்பர்களைத் தவிர்க்க வேண்டும்
சாணக்கிய நீதியின் கூற்றுப்படி, ஒரு நபர் தனது குடும்பத்தைத் தவிர, தனது நண்பர்கள் மற்றும் வேலை செய்யும் நபர்களுடன் அதிக நேரத்தை செலவிடுகிறார். எனவே அனைவரும் தனது நண்பர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் மோசமான நண்பர்களுடன் பழகினால், எதிரிகள் அதை முழுமையாகப் பயன்படுத்த முயற்சிப்பார்கள். எனவே உங்கள் நண்பர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்.
பேச்சில் கவனம் செலுத்த வேண்டும்
சாணக்கிய நீதியின் கூற்றுப்படி, ஒரு நபர் எப்போதும் தனது பேச்சில் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால், உங்கள் எதிரி அதைப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பார்கள். உங்கள் பேச்சு மோசமாக இருந்தால், உங்கள் உறவுகள் மோசமடையக்கூடும். மோசமான பேச்சு காரணமாக, உங்களின் நல்ல நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உங்களை விட்டு விலகத் தொடங்குவார்கள்.பொதுவாக மக்கள் கசப்பாகவும், கடுமையாகவும் பேசுபவர்களிடமிருந்து விலகி இருப்பார்கள். எனவே அனைவரிடமும் பேசும் போது, உங்கள் பேச்சை எப்போதும் இனிமையாக வைத்துக் கொண்டு, மக்களிடம் கண்ணியமாகப் பேசுங்கள்.
கெட்ட பழக்கங்களை கைவிட வேண்டும்
போதைப் பழக்கம் போன்ற கெட்ட பழக்கங்களிலிருந்து எப்போதும் விலகி இருக்க வேண்டும். போதைக்கு அடிமையானவர்களை எதிரிகள் எளிதில் தோற்கடிப்பார்கள். ஒரு குடிகாரன் தனது புத்திசாலித்தனத்தையும் விவேகத்தையும் சரியாக பயன்படுத்த முடியாது, அத்தகைய சூழ்நிலையில் அவர்கள் பல தவறுகளைச் செய்கிறார்கள், அதை உங்கள் எதிரிகள் உங்களுக்கு எதிராக பயன்படுத்திக் கொள்ளலாம்.
எதிரியைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்
உங்கள் எதிரியை நீங்கள் தோற்கடிக்க விரும்பினால், உங்கள் எதிரி தொடர்பான அனைத்து தகவல்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும். உங்கள் எதிரியின் பலத்தை நீங்கள் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் எதிரியைப் பற்றிய முழுமையான தகவல்களும், ரகசியங்களும் உங்களிடம் இருந்தால், நீங்கள் அவர்களை எளிதாக தோற்கடிக்கலாம்.
கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்
மரத்தை நெருப்பு முழுவதுமாக அழிப்பது போல, ஒரு மனிதனுக்குள் எரியும் கோபத்தின் நெருப்பு அவருடைய புத்திசாலித்தனத்தை அழிக்கிறது. கோபத்தில், ஒரு நபர் சிந்திக்கும் மற்றும் புரிந்துகொள்ளும் சக்தியை இழக்கிறார். இதை எதிரிகள் தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்கிறார்கள். உங்களுக்கு முன்னால் தோல்வியைக் கண்டாலும், உங்கள் எதிரி அதை அறியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பொறுமையாக இருக்க வேண்டும். மனதை அமைதியாக வைத்துக் கொண்டால், எதிரியை வெல்லும் ஆற்றல் உங்களுக்குள் வளரும்.



Click it and Unblock the Notifications
