Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
சாணக்கிய நீதி படி குழந்தைகளின் எதிர்காலம் சூப்பரா இருக்கா இந்த 5 விஷயங்களை பெற்றோர்கள் செய்யக்கூடாதாம்...!
Chanakya Niti: உலகப் புகழ்பெற்ற தட்சசீல பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தவர் சாணக்கியர். அரசியல், பொருளாதாரம், சமூகவியல் போன்ற அனைத்துப் பாடங்களிலும் சாணக்கியருக்கு ஆழ்ந்த அறிவு இருந்தது. சாணக்கியரின் ஒவ்வொரு அறிவுரையும் எக்காலத்திற்கும் பொருத்தமானது. சாணக்கியரின் கொள்கையைப் பின்பற்றினால் வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், வெற்றிகரமனதாகவும் இருக்கும்.

சாணக்கிய நீதியில் வாழ்கைக்குத் தேவையான பல போதனைகள் உள்ளன. சாணக்கியர் தனது சாணக்கிய நிதியில் பெற்றோருக்காக சில அறிவுரைகளை கொடுத்துள்ளார். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் முன் சில விஷயங்களைச் செய்யக்கூடாது என்கிறார் சாணக்கியர். இந்த 5 விஷயங்களை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் முன் ஒருபோதும் செய்யக்கூடாது என்று சாணக்கிய நீதி கூறுகிறது.
தவறான வார்த்தைகளை பேசக்கூடாது
குழந்தைகள் கடவுளைப் போன்றவர்கள். மேலும், குழந்தையின் மனம் ஈரமான களிமண் சுவர் போன்றவர்கள். எனவே குழந்தைகளை மிகுந்த அன்புடன் வளர்க்க வேண்டும். ஐந்து வயது வரை குழந்தைகளுக்கு அனைத்து விஷயங்களையும் மிகவும் அன்பாகவே எடுத்துச் சொல்ல வேண்டும். குழந்தைகள் அப்பாவிகள், அவர்கள் எந்த தவறையும் வேண்டுமென்றே செய்ய மாட்டார்கள்.
அத்தகைய சூழ்நிலையில் குழந்தைகளுக்கு அன்புடன் கற்பிக்க வேண்டும். உங்களைப் பார்த்து உங்கள் குழந்தைகள் கற்றுக் கொள்வார்கள். உங்கள் பிள்ளைகள் பண்பட்டவர்களாகவும், ஒழுக்கமானவர்களாகவும் மாற வேண்டுமென நீங்கள் விரும்பினால், அவர்களின் மொழியை மேம்படுத்துவதே முதல் படி. அதற்கு அவர்கள் முன் தவறான வார்த்தைகளை ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது.
ஒருவரையொருவர் குறை சொல்லக்கூடாது
ஒரு குழந்தை ஐந்து வயதை அடையும் போதுதான், அவர்கள் விஷயங்களை ஓரளவு புரிந்து கொள்ள ஆரம்பிக்கிறார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் முன் ஒருவருக்கொருவர் தவறுகளைச் சொல்லி அவர்களை குறைகூறாமல் கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகளும் இதனால் அவதிப்படுகின்றனர். மேலும், அவர்கள் உங்களைப் போன்ற அதே பழக்கத்தைப் பின்பற்றுகிறார்கள்.
முரட்டுத்தனமாக நடந்து கொள்ளக்கூடாது
சாணக்கிய நீதியின் படி, பெற்றோர்கள் ஒருவரையொருவர் மதிக்க வேண்டும், ஒருவரையொருவர் கண்ணியத்துடன் நடத்த வேண்டும். இதனால் குழந்தைகளும் ஒருவரையொருவர் மதிக்க கற்றுக்கொள்கிறார்கள்.
மேலே கூறியது போல், எந்த சூழ்நிலையிலும் நீங்கள் குழந்தைகள் முன் தவறான வார்த்தைகளையோ அல்லது தவறான வார்த்தைகளையோ பயன்படுத்தக்கூடாது. இது உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் எதிர்காலத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். எனவே தங்கள் குழந்தைகளை பண்பட்டவர்களாக வளர்க்க வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு உண்டு என்பதை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்.
பொய் சொல்லக்கூடாது
பொய் எப்போதும் ஒரு மனிதனின் எதிரி. சாணக்கியரும் தனது சாணக்கிய நீதியில் பெற்றோருக்கு அதே அறிவுரைகளை வழங்கியுள்ளார். பெற்றோர்கள் ஒருபோதும் தங்கள் குழந்தைகள் முன் பொய் சொல்லக்கூடாது. இருப்பினும் துரதிர்ஷ்டவசமாக, சில நேரங்களில் பெற்றோர்கள் தங்கள் சுயநல காரணங்களுக்காக தங்கள் குழந்தைகளிடம் பொய் சொல்கிறார்கள். இது அவர்களின் எதிர்காலத்தில் நிச்சயம் சிக்கலை ஏற்படுத்தும்.
மற்றவர்களுக்கு தீமை செய்யக்கூடாது
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு முன்னால் மற்றவர்களுக்கு எந்தவொரு கெட்ட காரியத்தையும் செய்யக்கூடாது. இப்படி செய்வதால் குழந்தைகளிடம் கெட்ட பழக்கங்களும் உருவாகும். இது அவர்களுக்குள் எதிர்மரை எண்ணங்களை உருவாக்குகிறது. இந்த நிலை குழந்தைகளுக்கு நல்லதல்ல.



Click it and Unblock the Notifications












