Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?
சாணக்கிய நீதி படி இந்த விஷயங்களை ஒருபோதும் குடும்பத்தினர் முன் செய்யக்கூடாதாம்... இல்லனா அழிவு நிச்சயமாம்!
சாணக்கியரின் தந்திரங்களும், புத்திக்கூர்மையும்தான் அவரை இன்றுவரை மக்களை நினைவில் வைத்திருக்க காரணமாகும். சாணக்கியரின் அனுபவங்கள் மற்றும் வாழ்க்கைக் குறித்த அவரின் கண்ணோட்டங்கள் சாணக்கிய நீதி எனும் நூலில் தொகுக்கப்பட்டது.
வாழ்க்கையின் பல அம்சங்களில் அவருக்கு ஒரு சிறப்பு பார்வை உள்ளது. ஆச்சார்யா சாணக்யா சமூகத்தைப் பற்றிய ஆழமான புரிதலைக் கொண்டிருந்தார். அவர் தன்னுடைய சாணக்கிய நீதியில் மகிழ்ச்சியான, வெற்றிகரமான மற்றும் மரியாதைக்குரிய வாழ்க்கையை எவ்வாறு வாழ்வது என்று மக்களுக்குக் கூறியுள்ளார்.

சாணக்கியரின் கொள்கைகள் இன்றைய காலத்திலும் பொருத்தமானதாகக் கருதப்படுகிறது. அரசியல் குறித்த அவரது பார்வை சிறப்பானதாக கருதப்படுகிறது. அவரது கொள்கைகளை பின்பற்றுபவர் வாழ்க்கையில் தோல்வியை சந்திக்க மாட்டார் என்று நம்பப்படுகிறது. ஒரு நபர் தனது குழந்தைகள் மற்றும் மனைவிக்கு முன்னால் செய்யக்கூடாத விஷயங்களை சாணக்கியர் தனது நீதி சாஸ்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். அவை என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
சாணக்கியரின் கூற்றுப்படி, வார்த்தைகளை கவனமாகப் பயன்படுத்துவது எப்போதும் பொருத்தமானது. அதனால்தான் எல்லோருடைய உள்ளமும் குளிர்ச்சியடையும் படி அன்பு நிறைந்ததாக பேசுங்கள் என்று சாணக்கியர் கூறுகிறார், ஏனென்றால் வார்த்தைகள் ஆயுதத்தை விட வலியை ஏற்படுத்தக்கூடும், எனவே மற்றவர்களுக்கு முன்னால் பேசும் போது வார்த்தைகளை மிகவும் கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும். நாம் நடந்துகொள்ளும் விதத்தின் விளைவுகளை நாம் அனுபவிப்பதால், எதிரிகளின் முன்னால் கூட வார்த்தைகளை கவனமாகத்தான் பேச வேண்டும். சில சமயங்களில் நமது வார்த்தைகள் மிகப்பெரிய அழிவைக் கூட முடிவுக்குக் கொண்டுவரும்.
யாரிடமும் தவறாக நடந்து கொள்ளாதீர்கள், இதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும். ஆச்சார்ய சாணக்கியரின் கூற்றுப்படி, நாம் எதைப் பேசினாலும் அல்லது எந்த செயலைச் செய்தாலும் சரி. மற்றவர்கள் அவற்றைப் பின்பற்றுகிறார்கள், அது மக்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
அதனால் தான் யாருடைய முன்னிலையிலும் அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாது, குடும்பத்தினரிடம் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாது. ஏனென்றால் குடும்பமும் சமூகமும் வாழ்க்கையின் தூண்களாகின்றன. உங்கள் குடும்பத்தினர் முன்னிலையில் நீங்கள் தகாத வார்த்தைகளைப் பேசும்போது நீங்கள் உங்கள் கண்ணியம் மற்றும் மரியாதையை இழக்கிறீர்கள்.
சாணக்கியரின் கூற்றுப்படி, உங்கள் குழந்தைகள் அல்லது மனைவிக்கு முன்னால் தவறான விஷயங்களைச் சொல்லாதீர்கள், அது அவர்களைப் புண்படுத்தும். ஏனெனில் கூர்மையான மற்றும் மோசமான வார்த்தைகள் குழந்தைகள் மற்றும் அன்புக்குரியவர்களின் தன்னம்பிக்கையை குறைக்கிறது மற்றும் இதுவே வீட்டில் மோதல்களுக்கு காரணம். அதனால்தான் உங்கள் உறவை மன அழுத்தமில்லாமல் வைத்திருக்க, நீங்கள் எப்போதும் உங்கள் மனைவியுடன் அன்புடன் பேச வேண்டும். அன்புக்குரியவர்களுடன் அன்பாக நடந்துகொள்வது குடும்பத்தில் நல்லிணக்கத்தை வளர்க்கிறது.



Click it and Unblock the Notifications
