Latest Updates
-
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்..
சாணக்கிய நீதி படி இந்த 6 வகை நபர்கள் அவங்க வாழ்க்கையில் எப்பவும் பணக்காரராக மாட்டார்களாம்...!
Chanakya Niti: சாணக்கிய நீதியில் மனிதர்களின் நலனுக்காக பல விஷயங்கள் கூறப்பட்டுள்ளன. சாணக்கிய நீதி என்பது சாணக்கியரின் அறிவு மற்றும் அனுபவத்தின் தொகுப்பாகும். இது மக்களின் சிறந்த வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஒவ்வொரு நபரின் வாழ்க்கையிலும் பணம் முக்கிய பங்கு வகிக்கிறது. பணம் இல்லாதவர்கள் இந்த சமூகத்தால் இழிவாக பார்க்கப்படுகிறார்கள். ஒவ்வொரு மனிதனும் பணத்திற்காக கடுமையாக உழைக்கிறார். சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் செல்வம் தொடர்பான பல விஷயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் வாழ்க்கையில் எப்போதும் பணக்காரர் ஆக முடியாத சிலரைப் பற்றி கூறியுள்ளார். அவர்கள் வாழ்க்கையில் எவ்வளவு முயற்சித்தாலும் அவர்களால் செல்வந்தராக முடியாது என்று சாணக்கியர் கூறுகிறார்.
அழுக்கான ஆடை அணிபவர்கள்
கிழிந்த மற்றும்அழுக்கு ஆடைகளை அணிபவர்களின் வீட்டில் லக்ஷ்மி தேவி தங்கமாட்டார் என்று சாணக்கியர் கூறுகிறார். எப்பொழுதும் அசுத்தமாக, தூய்மையை பராமரிக்காமல் வாழ்பவர்களுக்கு லட்சுமி தேவியின் அருள் கிடைக்காது. இப்படிப்பட்டவர்களை சமுதாயத்தில் உள்ள மற்றவர்கள் மதிக்கமாட்டார்கள். மேலும் வாழ்க்கையில் எல்லா வகையிலும் அவமானங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும்.
பல் துலக்காமல் இருப்பவர்கள்
பற்களை சுத்தம் செய்யாதவர்கள், அதாவது பல் துலக்காதவர்கள் வாழ்க்கையில் எப்போதும் வறுமையை சந்திப்பார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார். அப்படிப்பட்டவர்களை லட்சுமி தேவி திரும்பிக்கூடப் பார்ப்பதில்லை. அதே சமயம், தொடர்ந்து பல் துலக்கி, பற்களை சுத்தமாக வைத்திருப்பவர்களுக்கு லட்சுமியின் அருள் எப்போதும் உண்டு என்றும் சாணக்கியர் கூறுகிறார்.
அதிகமாக சாப்பிடுபவர்கள்
சாணக்கியரின் கூற்றுப்படி, தனக்குத் தேவையானதை விட அதிகமாக சாப்பிடுபவர் ஒருபோதும் பணக்காரராக முடியாது. மேலும், தேவைக்கு அதிகமாக உண்பவர் ஆரோக்கியமாக இருக்க மாட்டார். இதனால் ஏற்படும் துன்பங்களும் கஷ்டங்களும்தான் மனிதனை வறுமைக்கு இட்டுச் செல்கின்றன.
மற்றவர்களை புண்படுத்துபவர்கள்
கசப்பான வார்த்தைகளைப் பேசுபவர்கள் ஒருபோதும் பணக்காரர்களாக முடியாது என்கிறார் சாணக்கியர். பேச்சால் பிறரை புண்படுத்தும் நபரின் அருகில் லட்சுமி தேவி நிற்க மாட்டார். அப்படிப்பட்டவர் லட்சுமி தேவியின் அருளையும் இழக்கிறார். அத்தகையவர்களுக்கு நண்பர்கள் இருக்க மாட்டார்கள். அவர்கள் தங்கள் நடத்தையாலும், கசப்பான வார்த்தைகளாலும் அவர்களுக்கு எதிரிகளை உருவாக்குகிறார்கள்.
அதிகமாக தூங்குபவர்கள்
எப்பொழுதும் தூங்குபவருக்கு லட்சுமி தேவியின் அருள் கிடைக்காது என்கிறார் சாணக்கியர். சாணக்கியரின் கூற்றுப்படி, சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை தூங்குபவருக்கு லட்சுமியின் அருள் நிலைக்காது. அதிக நேரம் தூங்குவது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும்.
தவறான வழியில் சம்பாதிப்பவர்கள்
பணம் மற்றும் வருமானம் ஈட்டுவதற்காக நியாயமற்ற, தந்திரம் அல்லது நேர்மையற்ற வழிகளைக் கடைப்பிடிப்பவர்கள் நீண்ட காலம் பணக்காரராக இருக்க முடியாது என்று சாணக்கியர் கூறுகிறார். அத்தகையவர்கள் விரைவில் தங்கள் பணத்தை இழக்க நேரிடும்.
நல்ல வழியில் பணம் சம்பாதிக்கவும்
நீங்கள் பணம் சம்பாதிக்க உங்கள் நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும். இலக்குகள் இல்லாத ஒரு நபர் ஒருபோதும் வெற்றியடையவோ பணக்காரனாகவோ ஆக முடியாது. சரியான வழியில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார். ஒழுக்கக்கேட்டில் சம்பாதித்த பணம் இன்று இல்லாவிட்டாலும் நாளை உங்களை விட்டுப் போவது உறுதி.
தானம் செய்ய வேண்டும்
சாணக்கியரின் கூற்றுப்படி, கோவிலில் அவ்வப்போது தட்சிணை வழங்குவது இறைவனின் அருளையும் செல்வத்தையும் அதிகரிக்கும். இதன் மூலம் உங்கள் வீட்டில் வறுமை வராது. ஆனால் அதிகமாக கொடுப்பது தீங்கு விளைவிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எப்போதும் உங்கள் வரம்புக்குள் நன்கொடை அளியுங்கள். உங்கள் வரம்புகளுக்குள் தொண்டு செய்வதன் மூலம் ஒரு நபரின் பணம் இரட்டிப்பாகத் தொடங்குகிறது.
நல்லவர்களுடன் இருக்க வேண்டும்
செல்வம் வேண்டுமென்றால் பணக்கார வணிகர்கள், படித்தவர்கள், வீரர்கள், ஆறுகள், மருத்துவர்கள் மற்றும் அனைத்து வேலை வாய்ப்புகள் உள்ள இடத்தில் வாழ வேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார் அல்லது அப்படிப்பட்டவர்களுடன் நட்பாக இருக்க வேண்டும். படித்த, நல்லொழுக்கமுள்ள மக்கள் வாழும் இடத்தில் நாம் வாழ்ந்தால், நம் வாழ்வும் அவர்களைப் போலவே வளமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications












